Sunday, December 14, 2008

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்



பொம்மலாட்டம்

பாரதிராஜா படங்களில் எனக்கு என்றும் பெரிய ஆர்வம் என்றும் இருந்ததில்லை.. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் அல்லது மதுரை தமிழில் கண்டபடி திட்டி கொண்டு அடித்து கொண்டும் பேசும் மொழிகள் எனக்கு பரிச்சயம் இல்லை .

கல்லூரி காலங்களில் தாஜ்மகால் என்ற அப்பத்தமான படம் பார்த்த விளைவோ தெரியவில்லை. ..

சினிமா எனபது டீம் ஒர்க். இதில் இயக்குநர் இமயங்களும் சிகரங்களும் எங்கு இருந்து முளைத்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இந்த படம் மிக மிக வித்யாசமான படம்..

பாராதிராஜா ஆரம்ப காலங்களில் எடுத்த திரில்லர்களை மீண்டும் ஒரு முறை மிகவும் அருமையாக புது புது சமாசாரங்களோடு கொடுத்து இருக்கிறார்.

கதை மிக எளிமையாக ..

நானா படேகர் பிரபலமான இயக்குநர் கூடவே வித்யாசமான மனிதரும் கூட.சினிமா இயக்குநர்களுக்கே உரிய அவரின் மனைவியாக ரஞ்சிதா..

சிபிஐ ஆபிசராக அர்ஜீன்..அவரின் காதலியாக காஜல் அகர்வால்.

தமிழ் பதிப்புகாக விவேக் + மணிவண்ணன்

நானாவின் படத்தின் பட பிடிப்புகளில் சில கொலைகள் நிகழ்கின்றது.. அதை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜீன்.

கடைசியில் முடிச்சுகள் அவிழ்கின்றன.. கொலையாளி யார் என்று யாராலும் ஊகிக்க முடியாத க்ளைமேக்ஸ்.

வாவ் சூப்பர் கதை.,கண்டிப்பாக யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு முடிச்சு.

திரைகதை சில இடங்களில் சொதப்பினாலும் பல இடங்களில் பாரதிராஜா நம்மை படத்தோடு ஒன்றி போக வைத்து இருப்பதில் ஜெயித்து இருக்கிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்று தங்க ப்ரேஸ்லேட் வாட்ச் மோதிரம் கூடவே பாரதிராஜா முதல் காட்சியில் காட்சி தருவதை இன்னமும் எத்தனை நாள் தான் தமிழ் சமூகம் பொறுத்து கொண்டு இருக்குமோ தெரியவில்லை.. :)

படத்தின் உண்மையான கதாநாயகன் நானா படேகர் தான். மிகவும் அற்புதமான அலட்டி கொள்ளாத நடிப்பு. அவரின் அலட்சியமான சிரிப்புகள் முக பாவனைகள் கூடவே நிறைவான நடிப்பு.. ம் இந்த படத்தை நானா படேகருக்காவே பல முறை பார்க்கலாம்.

நானா , தமிழில் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும்.

அர்ஜீன் நடிப்பில் பிரகாசிக்க வேலை இல்லை படத்தில் ஆக்சனுக்கும் வழி இல்லை கொடுத்த காரியத்தை செய்து விட்டு போகிறார்.

காஜல் அகர்வால் ரஞ்சிதா கூடவே அந்த நடிகை எல்லாரும் பாத்திரத்தில் கச்சிதம்..

பாடல்கள் இசை ஹிமேஷ் ரேழ்மைய்யா.. பாடல்கள் ஏதோ வந்து போகிறது.,,

ஒளிப்பதிவு - கண்ணன்.. கலக்கல்

விவேக் சில நிமிடங்களே வந்தாலும் காமேடியில் கலக்குகிறார்.. மணிவன்னனும் அதே.

இந்தி படத்தின் பதிப்பு என்பதால் இந்தி வாசனை சற்று தூக்கலாக இருந்தாலும் உறுத்தவில்லை.

குத்து பாட்டு அடிதடி மசாலாக்கள் இல்லாமல் ஒரு நல்ல திரில்லர் பார்க்க வேண்டுமா.. இந்த படம் மினிமம் கியாரண்டி.

பொம்மலாட்டம்- ஆட்டம் இல்லாத நடனம்

Saturday, December 13, 2008

விழிப்பது எப்போது?? - 49 ஓ

தோழி வித்யா அவர்கள் 49’ஓ தொடர்பாக என்னையும் எழுத சொல்லி இருக்காங்க.


என் மனதிலும் அடிக்கடி தோன்றி விட்டு போகும் 49 ஓ தொடர்பாக என்னையும் எழுத சொன்னதற்க்கு நன்றி .


வெளிபடையாக சொன்னால் எனக்கு தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஓட்டுரிமை கிடையாது.

சென்னை மும்பை தில்லி சிங்கப்பூர் அமெரிக்கா என்று சுற்றி விட்டு தற்போது பெங்களூரில் இளைபாறுகிறேன். சொந்த ஊரிலும் என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. என் வாழ்க்கையில் இரு முறை ஓட்டு போட்டு இருக்கிறேன். அதுவும் சொந்த ஊரில் இருந்த போது..



சென்ற முறை கர்நாடாக மாநில சட்டசபை தேர்தலில் போது தான் ஓட்டு போடாம தேர்தல் விடுமுறை போது ஊர் சுற்றி கொண்டு இருந்த போது ஏதோ மண்டையில் உறைச்சது.

வாக்காளர் பட்டியலில் எப்படி என் பெயரை சேர்ப்பது எப்படி..
கன்னடா சரளமாக மாத்தாட கொத்தில்லா..

எல்லா அரசு அலவலங்களிலும் சரள இலக்கண சுத்தமான கன்னடா பேசி கூடவே விண்ணப்பம் எல்லாம் ’ஏணு பரத்திதே’ன்னு புரியாம U turn அடிப்பதே வாடிக்கையாக போச்சு.


யாரோ ஒரு புண்ணியவான் ராகு காலம் எம கண்டம் பார்க்காம ஓபிஸில் வாங்கும் சம்பளத்துக்கு ஓவர் டைம்மாக அட்டாச்மெண்ட் மெயில் படிக்கும் போது தெரிந்து கொண்டது இந்த இயகக்தை பற்றி http://jaagore.com/..

டாடா நிறுவனம் இணையம் வழியாக வாக்காளர் பட்டியலில் நம் பெயரை சேர்க்க தோளோடு தோள் சேர்க்க உதவி செய்கிறது. இதன் வழியாக எனக்கும் வாக்காளர் அட்டையும் கிடைச்சாச்சு :)


இப்ப 49 ஓ தொடர்பாக எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு தெரிந்ததே ஞானியின் ஓ பக்கங்கள் வழியாக.

வழக்கமாக தேர்தல் வரும் காலங்களில் ம க இ க போன்ற சுவற்றில் கரியால் கிறுக்கும் புனிதர்களும் + இன்னபிற கூடவே ஞானி போன்ற வேதாந்திகளும் சொல்லும் தேர்தல் புறக்கணிப்பின் மற்றும் ஒரு பிரகாசமான முகம் தான் இந்த 49 ஓ



49 ஓ என்னதான் சொல்கிறது?


எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை
எல்லாரும் ப்ராடு எல்லாரும் ஊழல் அதனால நான் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று சொல்லும் ஒரு அரசாங்க படிவம் தான் 49 ஓ

சரி இப்படி எல்லாரும் 49ஓ எழுதி கொடுத்தா என்ன ஆகும்?


தற்போது இருக்கும் நிலையில் நாட்டில் வசிக்கும் சில பேரை தவிர்த்து பல பேருக்கு இந்த 49ஓ மேட்டரே தெரியாது. தெரிந்த சில பேரும் ஓட்டு போட போவார்களா என்பது சந்தேகமே.

அப்படியே நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஏழை பாட்டாளி சாதி சங்கங்கள் அனைத்து கட்சி தொண்டர்கள் பிரியாணி சாப்பிட்டு வாழ்க ஓழிக கோசம் போடுபவர்கள் என்று சமூகத்தின் அனைத்து முகங்களும் ஒருகிணைத்து 49 ஓ கொடுத்தாலும் இன்றைய சட்டத்தின் படி தேர்தல் ஒத்திவைக்கபட்டு மறு தேர்தல் நடை பெறும். அப்பவும் அதே கட்சி அதே கொள்கை (?) அதே கோட்பாடு அதே வாக்குறுதி அதே இலவசங்கள் எல்லாம் அதே அதே ....

அப்ப 49ஓ வைச்சு என்ன தான் செய்வது?

நமக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. கூடவே தேர்தல் அன்று நாம் வீட்டுல் சும்மா கார்டூன் நெட்வோர்க் பார்த்தாலும் தப்பு.. அதான் ஓட்டு போடுவது போலவும் அதே நேரத்தில் இந்திய அரசின் தேர்தலை புறக்கணிப்பதையும் ஒருங்கே செய்வதே இந்த 49 ஓ

அப்ப யாருக்கு தான் லாபம்?


வேற யாருக்கு இந்தியாவில் எப்பதான் குழப்பம் வரும்.. எப்படி இந்தியாவின் கட்டமைப்பை இந்தியாவின் ஜனநாயகத்தை சீர் குலைக்கலாம் என்று எப்போதும் நூடுல்ஸ் பாம்பு கறி சாப்பிட்டு யோசித்து கொண்டே இருக்கும் சீனா போன்ற சர்வாதிகார கம்யூணிஸ்ட்களுக்கு தான்.


அவங்களுக்கு பிரச்சாரம் செய்வதே இந்த ஞானி போன்ற ஆட்களும் கூடவே மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற இயக்கங்களும்.

மக்கள் ஆதரவு இல்லாத மக்களுக்கு நண்மை செய்யாத எந்த வித கொள்கையும் என்ன தான் பிரசாரம் செய்தாலும் எடுபடாது.

உண்மைதான் தற்போதைய இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஊழல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. வன்முறைகளும் கூடவே மக்களை முட்டாளுக்கும் பேரங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.


நெற்பயிருக்கு பாயும் நீர் களைகளுக்கும் போக தான் செய்யும். ஆனால் இன்று களைகளே அதிகமாகி நெற் பயிற்களுக்கு ஏதோ கிடைக்கிறது.


வெள்ள நிவார்ண நிதியோ ரோடு போடும் ஒப்பந்தமோ எல்லாவற்றிலும் ஊழல் இருந்தாலும் ஏதோ ஐந்து பத்தோ மக்களுக்கு கிடைக்கிறது.

இந்த 49 ஓ களால் இதை போல தேர்தல் முறை மறைந்து ரழ்யாவின் ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் வந்து குருவி சுடுவதை போல பல்லாயிரம் பேரை ஒரே நாளில் படு குழிக்கு அனுப்பி விடுவார்கள்.

அப்புறம் என்ன.. சினா போல தான்..
வெளியில் பெயிண்ட் அடித்து நறுமண வாசனை திரவியம் பூசி உள்ளே அழுக்கையும் குப்பையும் வைத்து இருக்கும் சீனா போலவே நாமும் மாறுவோம்.

பேச்சுரிமை எழுத்திரிமை எல்லாம் பறிக்கபடும். நமக்கு என்ன தேவை என்பதே மறந்து போகும். ஆறாம் அறிவு தேவை இல்லாமல் போய் எல்லாம் விதிக்கபட்டதே என்று நாமும் மாறி விடுவோம்.

இதை போல வலைபூக்களில் 49ஓ தொடர்பாக எழுத கூட முடியாது.

கம்யூணிசமே உலகின் சொர்க்கம்..
சர்வாதிகாரமே மோட்சம் என்று சழ்டி கவசம் பாட வேண்டியது தான் பாக்கி.


ம் அப்ப என்ன தான் முடிவு?

என்ன தான் ஆயிரம் குறைகள் இருந்தாலும் தற்போதைய ஜனநாயக தேர்தல் முறைக்கு மாற்று ஏதுவும் இல்லை.


தவறு நம்மிடம் இருந்து தான் தொடர்கிறது..
தேர்தலிகளில் சாதி மத மொழி மயக்க போதை , தலைவர்கள் மீதான் காதல் என்ற சக்திகள் தான் நம்மை ஓட்டி செல்கிறது நம்மில் எத்தனை பேர் இதை போன்றவற்றை விட்டு உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறோம்??

நம்மில் எத்தனை பேருக்கு நமது தொகுதி எம் எல் ஏ பேர் நினைவிற்க்கு வருகிறது அல்லது சென்ற தேர்தலில் ஓட்டு போட்ட வேட்பாளர் பெயர் நினைவிற்க்கு வருகிறது?

சமூகத்தை படி படியாக மாற்றி விடலாம் என்று சிறு சிறு கனவுகளோடு தன் சொந்த சேமிப்புகளை தேர்தலுக்காக செலவழிக்கும் பல சுயேட்ட்சை வேட்பாளர்கள் எனக்கு தெரிந்தே பார்த்து இருக்கிறேன்.
எம் எஸ் உதய மூர்த்தியும் இதை போல நம்புங்கள் நடக்கும் என்று நல்ல மனிதர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்.. நம்புங்கள் ஒருத்தருக்கு கூட டெபாசிட் கிடைக்கவில்லை.

நல்ல வேட்பாளர்களும் களத்தில் தேர்தலில் போட்டி இடுகிறார்கள் ஆனால் நாம் அவர்களை விடுத்து கட்சி சார்பாகவோ அல்லது சாதி மதம் சார்பாகவோ தான் நம் ஓட்டுகளை இடுகிறோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தலில் நிற்க்கும் வேட்பாளரை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மீடியாக்களில் முழு ஜாதகமே வந்து விடும். ஆனால் இங்கு ஜெயிக்க போகும் கட்சிகளுக்கு அல்லது தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பது தான் நம் மீடியாக்களின் பிழைப்பு. மீடியாக்களும் மாற வேண்டும்.

மீண்டும் ஒரு முறை 49 ஓ என்பது தவறான ஊருக்கு வழிகாட்டும் அழகான அருமையான ஆனால் தவறான வழிகாட்டி.

நம் ஓட்டுரிமையை இதை போல சிதைப்பதை விடுத்து நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுத்து அனுப்புவோம்..
தனி மனிதர்களின் மாற்றமே சமுதாயத்தின் மாற்றம். மாற்றங்களை நம்மிடம் இருந்தே தொடங்குவோம்

Friday, December 5, 2008

டிசம்பர் 6+ பின் தொடரும் வன்முறைகளும்



என்னை கேட்டா சுதந்திர தினம் குடியரசு தினம் போல டிசம்பர் 6 ம் தேதியையும் தேசிய விடுமுறை நாளாக அறிவித்து விடலாம்

இந்தியாவே ஊரடங்கு முறை அமலுக்கு வந்தது போல ஒரே மயான அமைதி. மெட்டல் டிடெக்கடர் sniffer dogs கூட போலிசாருக்கு extra duty.

யாரு குண்டு வைப்பாங்கன்னு தெரியலை.


எல்லா ரயில்வே ஸ்டேசன் கூடவே விமான நிலையம் பேருந்து நிலையம் என்று எங்கு பார்த்தாலும் போலிஸ் மயம் தான்.
இந்த களேபாராத்தில் மெட்டல் டிடெக்டர் துணையோடு தண்டவாளத்தை மோப்பம் பிடித்து கொண்டு இருந்த ஆட்களையும் பார்த்தேன் ..

தண்டவாளத்தில் எங்கு மெட்டல் டிடெகடரை நீட்டினாலும் அதுவும் கர்ம சிரத்தையாக ’பையங்ஞ்க்’ என்று சவுண்ட் கொடுக்கும் ..என்னை கொடுமை சார் இது.
தேசிய விடுமுறை கொடுக்க முடியவில்லையா..


பேசமாக இந்திய அரசு உலக வரலாற்றில் முதன் முறையாக அறிவிக்கும் பாரத் பந்த்ன்னு சொல்லிடுங்க..
டிரையின் ஓடாது பஸ் ஓடாது கடைகள் அடைகக்படும்.. அனைவருக்கும் விடுமுறை என்று சொல்லி போட்டா சன் டிவியும் பாரத் பந்த் சிறப்பு நிகழ்சிகள் என்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம் போடுவாங்க..

யாருக்கும் பிரச்சனை இல்லை.. போலிசாருக்கும் பிரச்சனை இல்லை. யாரும் வெளியூரு போக மாட்டாங்க.. என்ன நான் சொல்றது?
*****************************************************************************************************************



டிசம்பர் 6ன் பின் வந்த கோர தாண்டவத்தை நானும் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். பத்து + வருடங்களுக்கு முன்னர் சென்னை - மதுரை பாண்டியன் விரைவு வண்டியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்க பட்ட வெடி குண்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடித்து இறந்த அப்பாவிகள் பல பேர்.

அன்று மட்டும் தமிழ் நாட்டு ரயில்களில் பல இடங்களில் குண்டு வெடித்தது.
அந்த குண்டு வெடிப்புக்கு சாட்சியாக அந்த குண்டு வைக்கபட்ட ரயில் பெட்டிமட்டும் அனாதையாக ப்ல வருடமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஓரமாக கிடத்தி வைக்கபட்டு இருந்தது.

கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலில் பிராகாரம் சுற்றி வரும் போது அந்த ரயில் பெட்டி நானும் இருக்கிறேன் என்று புலப்படும்.. பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ புரியாத உணர்வுகள் தோன்றும்...


கடைசியாக கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவில் சென்ற போது அந்த ரயில் பெட்டியை காணவில்லை.. மீட்டர் கேஜ் பாதைகள் விலக்க பட்டதின் காரணமாகவோ அல்லது அந்த கேஸ் முடிந்த விட்ட காரணமாகவோ தெரியவில்லை..



அந்த குண்டு வெடிப்பின் தீர்ப்பு என்னவாச்சு என்று தெரியவில்லை .. என்ன ஆயுள் தண்டனையாக இருக்கும் அல்லது அந்த குற்றவாளிகளுக்கு எவனோ ஒருவன் மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வெட்டி பெட்டிசன் போட்டு கொண்டு இருப்பான்..


என் கல்லூரி காலத்தில் கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கபட்ட ஒரு அப்பாவி என் சக மாணவன்.
அவன் தந்தை குண்டு வெடிப்பில் கொல்லபட்டார்..

குடும்பத்தை சுமக்க வேண்டிய அவன் எப்போதும் ஏதையோ பறி கொடுத்தது போலவே இருப்பான்..
செம்ஸ்டர்ஸ் ரிசல்ட் வந்த போது யாரோ அரியர்ஸ் வைக்காமல் பாஸான பிறவி காலேஜில் வைத்த சரவெடிக்கே ஓடி ஒளிந்து மிகவும் பயந்து பின் மயக்கம் அடைந்தான்..


அந்த குண்டு வெடிப்பால் அவனுக்கு வெடி சத்தம் என்றாலே மன தளர்ச்சி அடைகிறது.


புண்ணியம் தேடி கொண்டவர்கள் அல் உம்மா & gang
இந்த கோவை + இன்ன பிற வெடி குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட ஒரு அரசியல்வாதி இன்று விடுதலையாகி மற்றவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் சிறையில் செல்போன் முதல் அனைத்து சகல வசதிகளோடு தண்டனையை அனுபவிக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு + இன்ன பிற குண்டு வெடிப்புகளில் பாதிக்கபட்டவர்கள் இன்னமும் பாதிப்பு மாறாமல் தான் இருக்கிறார்கள்.

*****************************************************************************************************************


மும்பையில் இருந்த போது நான் அந்தேரி கிழக்கில் இருந்த வீட்டில் சொந்தகாரர் ஒரு இஸ்லாமியர். அந்தேரி கிழக்கில் நான் இருந்த இடம் சகல செள்பாக்கியங்களும் வாஸ்து சாஸ்து காய்கறி கடை பங்க் கடை எல்லாம் பெற்ற மிகவும் அருமையான இடம்.


என்னிடம் வாடகை பெற்று கொள்ள எப்போதும் அவர் என்னை அந்தேரி மேற்க்கு பேருந்து நிலையத்துதான் வரசொல்வார். ஆனால் அவர் அந்தேரி மேற்க்கில் வசிப்பது வாடகை வீட்டில்.நானும் ஒரு முறை அவரிடம் கேட்டேன்.. ஏன் பாய் இப்படி ஒரு அழகான வீட்டை விட்டு ஏன் வாடகை வீட்டில் இருக்கீங்க.. பதில் கிடைத்தது ..புன்னகை மட்டும் தான்..


நானும் கர்மசிரத்தயாக வாடகை பணத்தை அங்கு கொண்டு கொடுத்து விட்டு வருவேன்.

எனக்கும் பல நாட்களுக்கு பின்னர் தான் உண்மை உறைத்தது. பெரும்பாலான மும்பை இஸ்லாமியர்கள் மும்பை குண்டு வெடிப்புக்கும் கலவரத்துக்கும் பின்னர் தங்கள் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் இடமாற்றம் செய்து வசித்து வருகிறார்கள்..



புண்ணியம் தேடி கொண்டவர்கள் பால்தாக்கரே & சன்ஸ் + தாவூத் இப்ராஹிம்
இதில் பால் தாக்கரே இன்னமும் மொழி வெறி + மத வெறியை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார். அவரின் வாரிசுகளும் அப்படியே..

தாவூத் இப்ராஹிம் இன்னமும் மும்பையில் தன் நிழல் அரசாங்கதை தொடர்வதாக நேற்றைய times of india சொல்கிறது. கராச்சியில் ராஜ போக வாழ்க்கை வாழ்கிறான்.. இவனின் பெண் திருமணம் செய்து இருப்பது பிரபல கிரிக்கேட் ஆட்டகார் ஜாவித் மியாண்டடின் மகனை..

ஆனால் இன்னமும் குண்டு வெடிப்பில் தன் பெற்றோரை இழந்தவர்களும் தங்களில் வாழ்க்கையை இழந்தவர்களும் இன்னும் அதை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள்..


*************************************************************************************************************

ஐந்து வருடங்கள் முன்னர் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு என் வேலை நிமித்தமாக சென்று பின் என் அலுவலக தலைமையகமான தில்லி திரும்ப கவுகாத்தி தில்லி ராஜதானி ரயிலில் முன் பதிவு செய்தேன்.

.
நான் பயணம் செய்த நாள் ஆகஸ்ட் 15..

கவுகாத்தியில் இருந்து புது தில்லி ரயில்வே ஸ்டேசன் வரை அந்த ரயில் முழுக்க மொத்தமே 5 பேரோடு பயணம் செய்த அந்த தினங்களும் நினைவில் வருகிறது..


புண்ணியம் தேடி கொண்டவர்கள் உல்பா & கோ.. இன்று அஸ்ஸாம் நிலை பல படி முன்னேறி சென்று விட்டது.. தீவிரவாதத்துக்கும் தனி நாடு கோரிக்கைக்கும் அந்த மாநில மக்களே கொடுக்கும் எதிர்ப்பே அந்த உல்பா கோழைகள் அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் குண்டு வெடிப்புகள்

*********************************************************************************************

ஏன் இந்த தமிழ் விடுதலை புலிகள் கூட எதற்க்கும் குறைந்தவர்கள் இல்லை.. யாழ்பாணத்தில் வசித்த பல இஸ்லாமியர்களை ஒரே நாளில் இடம் பெயர சொன்னார்கள். புலிகளால் இன்று தங்களின் சொத்துகளை + வாழ்க்கையை இழந்த தமிழ் இஸ்லாமியர்கள் பல்லாயிரம்..


இன்று வரை பிரபாகரன் ரொம்ப பாதுகாப்பாதன் இருக்கிறார்(ன்).


***********************************************************************************************************

கழ்மீர் மாநிலத்தில் தற்போது நடை பெறும் தேர்தலில் வாக்கேடுப்பு 67% என சொல்கிறது.. இதை போல அதிக வாக்கு பதிவு அமைதியான தமிழ்நாட்டில் கூட நடை பெறுவதில்லை.. வன்முறையால் அதிகமாக பாதிக்கபட்ட கழ்மீர் மக்களே இன்று ஜனநாயக வழி காந்திய வழி தேடி வருகிறார்கள்..

************************************************************************************************************

என்னை பொருத்தவரை நான் சாதாரண மனிதன்.

ஏன் நானும் நீங்களும் நம்மை சுற்றி இருக்கும் சமுதாயமும் அப்படி தான்.... சற்று யோசித்து பாருங்கள்..

இந்த வன்முறைகளில் நாமோ நம்மை சேர்தவர்கள் யாரோ பலியாகி இருந்தால் நம் குடும்பத்தில் நிலை என்னவாகி இருக்கும்?

குண்டு வைப்பவனும் குண்டு வைக்க தூண்டுபவர்களும் எப்போதுமே பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள்..

நாம் மட்டும் தான் சாதி மதம் மொழி என்ற வேறுபாட்டில் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கிறோம்.

. படித்தவர்கள் இடையே இதை போல வேறுபாடுகள் இருக்காது என்று நான் பல காலம் முன்பு நினைத்தது உண்டு.

னால் இன்று இணையத்தில் எழுத படும் பல எழுத்துகள் வன்முறை படித்தவர்களால் படிக்காத அப்பாவிகள் மேல் திணிக்கபடுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆமாம் எனக்கு சத்தியமாக புரியலை... இப்படி கேனதனமாக வன்முறைகளை விடுதலை போராட்டம் மக்களின் சுயநிர்ணய போராட்டம் என்று சொகுசாக எழுதுகீறீர்களே.. என்னக்காவது அந்த பாதிக்கபட்ட ஊருக்கு போய் பார்க்க வேண்டியது தானே..

சரி விடுங்க உங்களுக்கு உங்க பிழைப்பு,,,

இனி வரும் டிசம்பர் 6 ம் தேடி வன்முறையை நாம் வெறுப்போம் , எழ்த்தில் கூட வன்முறையை கலைவோம் என்று உறுதி மொழி எடுக்கும் நாளாக இருக்கட்டும்.

ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே

Thursday, November 27, 2008

மும்பை - தீவிரவாதம் - இந்தியர்கள்

ம் எல்லாம் முடிந்து விட்டது.
என் இந்தியா என்ற தேசம் மிகவும் அருமையான நாடு

எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
நாம் எல்லாரும் இந்திய மக்கள்

என்று பள்ளிகூட பிரார்த்தனைகளில் பாடிய பாடல்கள் மனதில் தோன்றி உடன் மறைந்து சென்றது.

இந்தியாவில் அனைத்து புறங்களிலும் நான் பயணம் செய்து உள்ளேன்.. பல மொழி பல கலாச்சாரம் வித விதமான உடை பல விதமான உணவு..

இத்தனை பெரிய நாடு மிகப்பெரிய கலாச்சாரம் பல மதங்கள் சாதிகள் என்று இந்தியா பிளவு படும் போது கூடவே பள்ளிகூடத்தில் சொல்லி கொடுத்த வேற்றுமையிலும் ஒற்றுமை காணமால் போகிறது

வெளிபடையாகவே பேசலாம்..
இந்தியாவிற்க்கு இதை போல குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணம் ஆனது பாபர் மசூதி இடிப்பு முதல் தான்.

மக்களுக்கு நல்லது செய்வோம் நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அரசியல் செய்தவர்கள் அன்று முதல் மத பிரிவினை காட்ட ஆரமித்தது அதன் முதல் தான்.

அதற்க்கு முன்னர் இதை போல குண்டு வெடிப்புகள் அப்பாவி மக்கள் பாதிப்புகள் கேட்டு இருப்போமா? இப்படி கோடுரங்களை பார்த்து இருப்போமா?


பாக்கிஸ்தான் என்பது இன்று தனி தேசம்..

இன்று இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் நம்மோடு நம்மாக கலந்து மகிழ்ச்சி துண்பம் துக்கம் சந்தோசம் என அனுபவிக்க நினைக்கும் நம்மை போல சாதாரண மனிதர்கள் தான்.

இந்த குண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பின் உடனே இஸ்லாமியரை கை காட்டும் மனிதர்களே மாலேகான் குண்டு வெடிப்பின் பின் எங்கு போனீர்?

தீவிரவாதம் அடுத்த மனித உயிர்களை குடிக்கும் வெறி சாதி மத இன பேதம் அற்றது.

சாதி மதங்களை இங்கு தயவு செய்து விட்டு விடவும்..இங்கு இழப்பது மனித உயிர்கள்.இதற்க்கு இந்து முஸ்லீம் கிருஸ்துவ பேதம் கிடையாது..


கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதை போல தாக்குதல்கள் மதம் சாதி இனம் மொழி என்ற குறுகிய சிந்தனையில் வாழும் சில கேடு கெட்ட மனிதர்களால் வளர்க்கபடுகின்றன.

இன்றைய மும்பை தாக்குதல் நடை பெறும் போது பால் தாக்கரே + sons எங்கு இருந்தனர்? எங்கு ஓடி போனார்கள்? ராஜ் தாக்கரே தனது தொண்டர்களை வைத்து இந்த தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காபாற்ற முடியவில்லையா? எங்கே போனது அந்த வீரம்?

இதை வரை அப்பாவி மக்களை பகடை காயாக்கி விளையாண்ட போது இருந்து வீரம் இன்று ஏன் காணமால் போனது?

ஏன் நம் கண் முன்னே கூட இதை போல மொழி உணர்ச்சியை தூண்டி அப்பாவி மக்கள் வாழ்க்கையை துண்டாடாக்கிய வரலாறு கண் முண்ணே நடக்கிறது....

பிரபாகரன் என்ற பங்கரில் ஒளிந்து இருந்து அப்பாவி மக்களை பலி கொடுக்கும் ஆளுக்கும் ராஜ் தாக்கரேக்கும் எனக்கு பெரிதாக வேறுபாடு தெரியவில்லை...ஏன் இதை போல தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை...


வன்முறை என்பது இரு முனையும் கூரான கத்தி..


நமக்கு பிடித்த கருத்துகளாக்க வன்முறை செய்பவன் ஹீரோ என்பதும் நமக்கு பிடிக்காத கருத்துகளை கொண்டு இருப்பவனை துரோகி என்று சொல்வது அயோக்கியதனம்...அதுவும் அப்பாவிகளை பலி கொடுப்பது மிக மிக மோசமான செயல்..

வருங்கால இந்தியா அமைதி பூக்காவாக மாற சில கருத்துகள்

மொழி சாதி மதம் போன்றவற்க்கு மிகவும் மரியாதை கொடுத்து பால் ஊட்டி சீராக்கும் அமைப்புகள் அனைத்தும் தடை செய்யபட வேண்டும். முடிந்தால் இதை ஆதரித்து சுயலாபம் அடையும் கொள்கை வேந்தர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

சாதாரண கவுன்சிலர் தேர்தல் நடத்தும் போது சாதி மதம் பார்த்து வேட்பாளரை நிறுத்தும் கட்சிகள் இருக்கும் வரை இதை போல சம்பவங்களும் அதை பார்த்தும் கேட்டும் நமது சில நாள் தூக்கமும் பல பேரின் வாழ்க்கையும் கெட போவது நடந்து கொண்டே தான் இருக்க போகிறது..

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

நாம் அடுத்தவரை கை காட்டும் முன் நாம் உண்மையாகவே சரியாக நடக்கிறோமோ என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும்..

இறுதியாக....

தீவிரவாதிகளின் தாக்குதலில் தன் உயிரை இழந்த இந்திய வீரர்களுக்கு என் வீர வணக்கம்


ஹேமந்த் கார்கரே, அசோக் காம்டே போன்ற நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு என் வீர வணக்கங்கள். இந்த நிமிடம் கூட தன் உயிரை பொருட்படுத்தாமல் அப்பாவிகளை காப்பாற்ற பொறுமையாக தாக்குதல் நடத்தும் இந்திய தேசத்தின் ரானுவ வீரர்களுக்கும் போலிசாருக்கும் என் நன்றிகள்...

இனியாவது சாதி மத சண்டையை விடுத்து இந்தியர்கள் என்ற ஒரே நினைப்பில் இந்த தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்போம்....

நாம் வாழும் இந்த நாடு நமக்கு மட்டும் சொந்தம் இல்லை, இனி நம்மை தொடர்ந்து வரும் தலைமுறைக்கும் சொந்தம்.

இதை உணர்ந்து நம் நாட்டை பாதுக்காப்போம்.. நம் மக்களை பாதுகாப்போம்..

இதை நாம் இன்றைய தினத்தில் செய்ய மறந்தால் வரலாறு நம்மை கண்டிப்பாக மன்னிக்காது..

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்...இந்தியர்களாக வாழ்வோம் மடிவோம்...

Monday, November 17, 2008

ஆனந்த தாண்டவம் - பாடல்கள் எப்படி??



ஆனந்த தாண்டவம் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின்பிரிவோம் சந்திப்போம்” தொடரை தழுவி வரும் படம். நண்பன் அறையில் இருந்து புக்கை சுட்டு கொண்டு வந்து பல இரவுகள் விடாமல் படித்த புத்தகம்..

சேவல் படத்திற்க்கு பின் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படம்.
இந்த முறை படத்தின் பாடல்களை வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.

பட்டாம்பூச்சி

புல்லாங்குழலும் கீபோர்டும் கலந்து கட்டி அழகாக பாடல் தொடங்குகிறது. சாக்சபோன் தபலா என்ற பாடலின் ஒலி சேர்க்கை அருமையாக இருக்கிறது. பாடலில் மேற்கு இசையும் கூடவே இந்துஸ்தானி இசையும் அருமையாக கலந்து ஒலிக்கிறது. வைரமுத்து பாடல் வரிகள் மேலும் பாடலுக்கு அழகு,/


கல்லில் ஆடும் தீவே.

புல்லாங்குழலின் இசையோடு தொடங்குகிறது. மெலடி பாடல் என்று எதிர்பார்த்தால் பீட் ஏறி கொண்டே போகிறது. அமெரிக்க பிண்ணணியில் வரும் பாடல் போல...கிடார், டிரம்ஸ் நல்ல நேர்க்கை.. வைரமுத்து வின் பாடல் வரிகள் அருமை. “ நான் என்றால் தனிமை நீ என்றால் வெறுமை நாம் இருவரும் சேர்ந்தால் இனிமை.”. இன்னும் பல முறை கேட்டால் தான் பாடலின் முழுவதும் புரியும் ..!!

பூவினை திறந்து கொண்டு

எலக்டிக் கிடார் வயலின் இசையோடு மிக அழகாக தொடங்கும் மெலடி...மிகவும் அழகான மென்மையான பாடல்.. மெலடிக்கான இசையில் இரைச்சல் சற்று அதிகமாக இருக்கிறதோ..ஸ்ரேயா கோஷல் , சீனிவாஸ் இருவரின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

மேகம் போல

சங்கர் மகாதேவனின் குரலில் சோகமான பாடல். புல்லாங்குழல், கிடார், டிரம்ஸை வைத்து அழகாக பிரகாழ் விளையாடி இருக்கிறார். வைரமுத்துவின் பாடல் வரிகளும் அருமை. சங்கர் மகாதேவன் வரிகளை சிதைக்காமல் நன்றாக பாடி இருக்கிறார் அவருக்கே உரித்தான ஹை பிச்சில்

கணா காண்கிறேன்

பாடல் ஆரம்பத்தில் எங்கேயோ கேட்டது போல தோன்றியது. இவரின் மாமா ரஹ்மான் இசை அமைட்த்த ஸ்டார் படத்தில் இருந்து அப்படியே ட்யூனை உருவி இருக்கிறார்.

தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடி கிடந்தோம்

பாடல் வேறு விதத்தில் வேறு பிண்ணியில் மீண்டும் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் பாடல கேட்க்க நன்றாக தான் இருக்கிறது,

ஜீ.வி.பிரகாஷ்குமார் வெயில் படத்திற்க்கு பின் இதுவரை வந்த படங்கள் கை கொடுக்கவில்லை. ஆனந்த தாண்டம் பட்த்தின் பாடல்கள் வித்யாசமாகவே இருக்கிறது. மீண்டும் கேட்க்க கேட்க்க நன்றாக இருக்கிறது. ம் படத்தில் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்...

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்


வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமாய் தவமிருந்து + அழகி

ஆனால் தமிழில் இது வரை இப்படி எந்த படத்திலும் வாரணம் ஆயிரத்தில் சொன்னது போல முழுமையான திரைகதை சொல்லி இருக்கிறார்களா??

அதுவும் ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையின் கதைகளை எந்த வித நெருடலும் இல்லாமல் ??

வாரணம் ஆயிரம் -- தமிழில் இது வரை இப்படி ஒரு கதை திரைகதையோடு முழுமையான படம் வந்து இருக்குமா?

ஆயிரம் யானைகள் பலத்தோடு சூர்யா ...............

’நேருக்கு நேரி’ல் பார்த்த சூர்யாவா பிதாமகனில் இப்படி கலக்கினார் என்று இதுவரை சொன்னோம்??!!

இனி பிதாமகனில் நடிப்பில் ஒரு படியை தாண்டிய சூர்யா போல்வால்ட் ஜம்பில் பல சிகரங்களை தாண்டி இருக்கிறார்..

சூர்யா சான்ஸே இல்லை... 15 வயது முதல் 30 வயதை தொடும் ஒரு பாத்திரம்.. 20 முதல் 60 தொடும் அடுத்த கதாபாத்திரம்.. எவ்வளவு கனசக்சிதமாக செய்து இருக்கிறார்.. அதுவும் முதல் பாதியில் காதல் காட்சிகளில் வாவ் சும்மா கலக்கி இருக்கிறார்...



காட்சிக்கு காட்சி எத்தனை வித்யாசம்..எத்தனை வித வித மான உறுத்தாத அதே நகைசுவை கலந்த இதமான நடிப்பு..

எத்தனை விதமான நடிப்பு வித்யாசங்கள்....

கூடவே தன் உடலை காட்சிக்கு ஏற்றவாறு எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறார்.. அதுவும் தன் வயதை பாதியாக குறைத்து 15 வயது டீன் ஏஜ் மாணவனாக சூர்யா ...இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத முயர்ச்சி.. வெகு அழகாக எந்த வித உறுத்தலும் இல்லாமல் அப்படியே ஸ்கூல் போகும் பையன் போல இருக்கீங்க..


ஜோதிகா மேடம் சாருக்கு இன்னும் 108 நாளைக்கு தினமும் திருஷ்டி சுத்தி போடுங்க....

இது வரை தமிழ் சினிமாவில் சொல்லபடாத கதை...ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையை எந்த வித ஜோடிப்பும் இல்லாமல் அழகான திரைகதையில் சொல்லி இருக்கிறார்கள்.


அதுவும் முதல் பாதி ஜெட் வேகம் கூடவே வெகு அழகான காதல் கதை.... அழகான சமீரா ரெட்டி.. அழகான அமெரிக்கா....கூடவே அழகான அருமையான பாடல்கள். ரத்தினவேலின் ஒளிப்பதிவு..மிக மிக அருமை.. எடிட்டர் ஆண்டணியும் மிகவும் கடின உழைப்பு உழைத்து இருக்கிறார்.

ஹாரீஸ் சார் அது என்ன கெளதம் படத்துக்கு மட்டும் சூப்பர் ஹிட் பாட்டுகளாக போட்டு கொடுக்கிறீங்க.. பாடல்கள் கேட்க்க மட்டும் அல்ல பார்க்கவும் மிக நிறைவு.

தாமரை + ஹாரீஸ் + கெளதம் கூட்டணியில் இன்னும் ஓர் மகுடம்..

சிம்ரன், ரம்யா @ திவ்யா என எல்லாரும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள். இவர்களில் ஸ்கோர் செய்வது சமீரா ரெட்டிதான்..

கெளதம் சார் நீங்க என்னை போல திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்..நம்ம பசங்களை போல நீங்களும் நம்ம காலேஜை இன்னமும் மறக்கவில்லை.. ரொம்ப நன்றி சார்..

தில்லியில் வரும் காட்சிகளில் விஜய்காந்த் படங்களில் வருவது போல இந்தி ஆட்களிடம் தமிழில் பேசும் அபத்தம் இல்லை மாறாக மொழி தெரியாமல் இருந்தாலும் காட்சிகளை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்து இருக்கிறார்கள்..

கூடவே கதை நகரும் எல்லா இடங்களிலும் நாம் படத்தை மட்டும் ரசிக்கிறோம்..

தல அஜித் இந்த படத்தை பார்த்து விட்டு ஏண்டா கெளதம் மேனன் படத்தை மிஸ் செய்தோம் என்று நொந்து போய் இருப்பார்..

வாரணம் ஆயிரம் உண்மையான ஆயிரம் யானைகள் பலத்தோடு...

Thursday, November 13, 2008

நடந்ததும் தொடர்ந்து நடப்பதும்

நேற்று சன் தொலைகாட்சி பின் இன்ன காட்சிகள் பார்த்த அடி தடி சாதி சண்டைகள் பலருக்கு புதிதாக இருக்கலாம். எனக்கு ஏனோ எற்கனவே பார்த்தவைகளை மீண்டும் ஒரு முறை பார்த்தது போலதான் இருந்தது.

இந்த சண்டைகள் தற்போது தமிழ்நாட்டின் தலைநகரத்தில் கூடவே காமேராக்கள் முன்னால் நடந்தால் நாமும் நிறைய பேசுகிறோம்.. இன்னும் சில தினங்கள் போனால் மறந்து விட்டு அடுத்த வேலை பார்க்க சென்று விடுவோம்.

இதை போல மாணவர்களுக்குள் கேவலமான சாதி பிரிவினைகள் சாதி சண்டைகள் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசு கல்லூரிகளில் இருக்கிறது தொடர்ந்து வளர்க்கபடுகிறது....

******************************************************************

அப்போது எனக்கு 15 வயது , பத்தாம் வகுப்பு முடித்து திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அங்கும் இதே போல ஒரு சாதி சண்டை.. சாதி சண்டைக்கு காரணம் மாணவர்களை தூண்டி விட்டு பின்னால் தங்களின் சுயநலங்களை பகடை காயாக செயல்பட்ட இரு பேராசிரியர்கள்.

இரு பேராசிரியர்கள் கல்லூரியில் எப்படி கமிசன் அடிக்கலாம் எப்படி நான் உன்னை ஜெயிக்கிறேன் என்ற கோதாவில் மாணவர்களை தூண்டி விட்டு கடைசியில் ஒரு கெட்ட நாளில் அரிவாள் கொண்டு சண்டை போட்டு பின் தங்களின் வாழ்க்கையை வீணாக்கி கொண்டார்கள்.

அரசு கல்லூரியில் அதுவும் பொறியியல் தொடர்பான கல்லூரிகளில் அங்கு வேலை பார்பவர்கள் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

என் வாழ்க்கையில் கதிர் அறுக்கும் அரிவாள்கள் கூட ஆட்களை வெட்ட பயன்படும் என் நேரடியாக பார்த்த பருவம் அது. பல நாட்க்கள் கல்லூரி காலம் குறிப்பிடபடாமல் மூடிய நேரம். கல்லூரி மூடினால் கூடவே ஹாஸ்டலையும் மூடி விடுவார்கள்,,, எனக்கு அன்று வாழ்க்கையில் கிடைத்த மூன்று வேளை சாப்படுகள் சொல்லி கொள்ளாமல் நிறுத்தபடும்.

நான் அங்கு படித்த மூன்று வருடங்களும் இதே கதை தான்.. சண்டை போட புது புது மாணவர்கள் அடிபடவும் புது புது ஆட்கள்.. ஆனால் பலன் அடைந்தது என்னவோ அதே இருவர் மட்டும் தான்..

பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் ஏழை மாணவர்களாக தான் இருப்பார்கள். நானும் கூட அப்போது அப்படி தான். என் கூட படித்தவர்கள் 99% அப்படிதான். முக்கா பேண்ட் என்று காதில் அடிக்கடி வார்த்தைகள் வந்து சேரும்.. ஏன் என்னோடு அன்று படித்த பல பேர் அன்று முக்கா பேண்ட் தான்....

அன்று என்னோடு படித்த பல பேர் மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்

அப்பா அம்மா தன் பையனாவது முன்னேறட்டும் என்று கழ்டபட்டு அனுப்பிய காசில் தூண்டிவிட பட்டு சாதி சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலை நான் படித்த இடத்தில் மட்டும் அல்ல சற்று அருகில் இருந்த திருச்சி கைலாசபுரம் அரசினர் கல்லூரி, திருச்சி ஈ வே ரா கல்லூரி, திருச்சி லா கல்லூரி என அரசால் நடத்தபடும் அனைத்து கல்லூரிகளும் இதே நிலை தான்..

பொதுமக்களுக்கோ வேறு ஒரு பிரச்சனை.. இந்த கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாணவர்களால் பொது மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு தர முடியுமோ அத்துணையும் தரபடும்.

பொது மக்களை பொருத்தவரை இந்த கல்லூரிகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் வழக்க்கம் போல ஒன்று தான்.

சென்னையில் கூட அரசு கல்லூரி மாணவர்கள் தினமும் பேருந்துகளில் பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் பல பல.. நந்தனம் அரசு கல்லூரி ஒன்று போதுமே !!


ஏன் தனியார் கல்லூரி மாணவர்கள் இதை போல நடப்பதில்லை??

காரணம் ரொம்ப சிம்பிள்.. படிக்கும் மாணவர்கள் இடத்தில் சாதிகள் அரசியல் கட்சிகள் கிட்ட வரவே கூடாது..அரசியல் கட்சிகளும் சாதி கட்சிகளும் மாணவர்களை தூண்டி விட்டு குளிர் காய்வது தமிழ் நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளும் நடக்கிறது.

இது உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்..

இதை தடுக்க உங்களுக்கும் ஏன் எனக்கும் தடுக்க வழி முறைகள் தெரியும்.. ஆனால் எதுவும் நடக்க போவதில்லை.. காரணம் ..

இணையத்தில் மித்த படித்தவர்களே மித்த அறிவாளிகளே சாதி சண்டை பார்பானியம் பித்தளையம் என்று வெட்டி சாதி சண்டைகள் செய்யும் போது 20 வயதை கூட கடக்காத இன்னமும் உண்மையான சமூகத்தை பார்க்காத அந்த மாணவர்கள் என்ன தான் செய்ய முடியும்??

Monday, November 10, 2008

மழை வருது குடை கொண்டுவா :)

சற்று ஒய்வு எடுத்து இருந்த வட கிழக்கு பருவமழை மீண்டும் களத்திற்க்கு வருகிறது,

இன்றையை சாட்டிலைட்படம்


தமிழக கடற்கரை அருகில் மேககூட்டங்கள் அணி வகுத்து இருப்பதை காணலாம்.

இன்னும் அடுத்த ஒருவாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் மழையோடு வாழ வாழ்த்துக்கள்.

மழை கால இரவுகள்



காற்றும் கூடவே மழையின் சலசலப்பும்
தூரத்தில் வரும் வாகன ஒளி பிம்பத்தில் சிதறும் ஒளி

எங்கு செல்கிறோம் என்று தெரியாத
தெருவோர நாய்களின் அவசர ஓட்டங்கள்

தூக்கம் தொலைந்த வேதனையில் நடைமேடை வாசிகள்
சாலை குழிகளில் ஓடி களைத்த ஆட்டோக்கள்

மீந்துபோன இட்லியோடு ரோட்டுகடைகள்
குல்பிஐஸ் வியாபாரம் இல்லாமல் அவர்களும்

இது ஏதும் தெரியாமல் மின்சாரம் இல்லை என் புலம்பும் நானும்

Sunday, November 9, 2008

மொழி அரசியல்

இன்று zee movies சானலில் 1001 முறையாக Gadar: Ek Prem Katha படம் ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பல முறை பார்த்த படம் தான்..

சன் டிவி கே டிவி கலைஞர் டிவிகளில் மொக்கை படங்கள் போட்டு பார்வையாளர்களை பரவச 'படுத்தியதால்’ இந்தி சானல்களில் மேய்ந்தேன்.


சன் டிவிகாரங்களே உங்களுக்கும் விஜயகாந்துக்கும் இப்ப ரொம்பவே ராசி போல.. அதுக்காக படு மொக்கை படங்களை போட்டு torture பண்ணாதீங்க முடியலை..

2001 ம் ஆண்டு வெளி வந்த Gadar படம் இன்று வரை இந்தியில் வெளிவந்த படங்களில் வசூல் சாதனையில் சாதனை படைத்த படம்.

1947 பிரிவினையின் போது ஏற்படும் ஒரு காதல் கதை. படத்தின் ஹீரோ சன்னி தியோல் நம்ம விஜய்காந்த போல எல்லாரையும் அடுத்து துவைத்து கடைசியில் இவர் மட்டும் பிழைக்கும் ரகம் :)

பல இந்தி படங்களில் இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளும் கதையில் இருந்தால் உடனே நம் நாடு ‘இந்துஸ்தான்’ என்றும் கூடவே பாக்கிஸ்தான் படு மோசமான நாடு என்றும் திரைக்கதை இருக்கும். இந்த படமும் இதற்க்கு விதிவிலக்கில்லை...


இந்தியா என்பது செகுலர் நாடு, இந்தியாவில் பாக்கிஸ்தானில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை விட இந்தியாவில் தான் அவர்கள் எண்ணிக்கை அதிகம் .

பின் ஏன் இந்துஸ்தான் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை..??


*****************************************************************************************

ஒரு முறை உத்திர பிரதேசத்தில் லக்னோவில் புறநகர் பகுதியில் சில நாள் தங்க நேரிட்டது.

இரவு பத்து மணி இருக்கும்.. அது குளிர்காலம்..

ரோட்டோரத்தில் இருக்கும் ஒரு பெட்டி சூடாக டீ கேட்டேன்.. எனக்கு தெரிந்த இந்தியில்..
என்னை விட வயதில் சிறியவனாக இருந்த பொட்டி கடை வியாபாரியிடம் இருந்து வந்த பதில் ” இந்துஸ்தானில் பிறந்தவனாக இருந்தால் முதலில் இந்தி ஒழுங்காக பேச கற்று கொள்”


அவனிடன் என்ன சொல்வது ?? என்ன வாக்குவாதம் செய்வது?? அந்த சிறுவனின் கனவான இந்துஸ்தான் எனபது வெறும் இந்துக்கள் மட்டும் வாழும் நாடு அங்கு அனைவரும் இந்தி தான் பேசுவார்கள்”..

அவன் எல்லை என்னவாக இருக்கும்??
லக்னோ ஒரு பெரிய கிராமம்.
லக்னோவை விட்டு தன் வாழ்நாளில் எங்குமே சென்று இருக்க மாட்டான்.

அவனை போல அறியாமையில் இருப்பவனிடம் புரியவைப்பதற்க்கு பதிலாக சர்க்கஸ் சிங்களிடம் நம் தலையை கொடுக்கலாம்..

அந்த கடையில் கிடைத்த டீ போல இது வரை நான் வேறு எங்கும் ருசித்ததில்லை :) . நல்ல திறமையை வைத்து கொண்டு கூடவே மொழி என்ற சிறிய வட்டத்தில் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றே தோன்றியது.

இங்கு இந்தி அரக்கி ஒழிக என்று சொல்பவர்க்கும் அந்த சிறுவனுக்கு வித்யாசம் எனக்கு ஏதும் தெரியவில்லை




*******************************************************************************************

இதை போல மொழி அரசியல்கள் தோன்றும் ஒரு சிறு வட்டத்தில் மட்டுமே நாமும் இருந்தால் ஜலதோழம் போல தொற்றி கொண்டு விடும்.

அடுத்த மொழி பேசுபவர்கள் நம் எதிரியாக தெரியலாம், ரத்த கொதிப்பு எல்லாம் இலவசமாக கிடைக்கும்.
சிகிச்சை ஏதும் இல்லை..
வெகு நாள் ரணமாகி அடுத்துவர் மனத்தையும் காயபடுத்தி கடைசியில் வெறுப்புணர்ச்சியை மட்டும் பயிர் செய்த வெற்றியோடு மூர்ச்சை ஆகலாம்



**********************************************************************************

எல்லா இடங்களில் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களும் + சுய தன்னபிக்கை கொண்டர்வர்களும் இருக்கிறார்கள்..

வெறுப்புணர்சிகள் தனி மனிதனை கோள் மூட்டுவதில் இருந்து தொடங்கி சாதி மொழி இனம் மதம் என குறுகிய சிந்தனைகளை பேசி மனதின் வலிமையை குறைப்பதே குறிக்கோளாக வைத்தே அமைகிறது.

இதை போல பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கி நின்றால் வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என யாகவா முனிவர் ஆவி சொல்கிறது
.


*************************************************************************************

Saturday, November 8, 2008

தேனூர் சிவாஜி

12.11.08 மற்றவை

டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

- இரா.கார்த்திகேயன்


நன்றி குமுதம்

Monday, November 3, 2008

சினிமா சினிமா தமிழ் சினிமா

சில வருடங்களாக நலல் தமிழபடங்களே 30 நாளை தாண்டினால் பெரிய சாதனையாக கருதுகிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த சரோஜா, ஏகன்,பொய் சொல்ல போறோம் மற்றும் காதலில் விழுந்தேன் போன்ற படங்கள் என் பார்வையில் நன்றாகவே இருந்தாக தெரிகிறது. ,,ஒவ்வோரு படங்களும் மற்றவைகளை விட வித்யாசமாகவே தோன்றுகிறது.

சென்ற வருடங்களில் இதே காலகட்டத்தில் வந்த படங்களை விட நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது. கதை சொல்லும் போக்கில் இருந்து பல இடங்களில் தமிழ் சினிமா மிகவும் முன்னேறி இருக்கிறது.


இருந்தாலும் படம் 30 நாளை தாண்டினால் சூப்பர் ஹிட்டாம் :))

திருச்சி ரம்பா தியேட்டரில் மூட்டை பூச்சியின் வீடுகளாகி போன சீட்டில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் படம் பார்க்க 60 ரூபாயாம் :) .. ஏஸி என்பது படம் ஆரம்பிக்கும் போது போட்டது போல தோன்றும்...பின் 60 ரூபா கொடுத்ததுக்கு இதுவே அதிகம் என்று ஏஸியை அணைத்து விடுவார்கள்.

பராமரிப்பு செலவு என்று டிக்கேட் செலவில் வாங்கி கொள்கிறார்கள்.. ஆனால் என்ன பராமரிப்பு செய்கிறார்கள் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. இப்படி எல்லாம் பகல் கொள்ளை அடித்தால் ஏன் திருட்டு டிவிடி தொழில் வளராது?


பிராமிட் சாய்மீரா நிறுவனம் பல தியேட்டர்களை லீசுக்கு எடுத்த போது சரி இனியாவது நிலைமை மாறுமா என்று நினைத்தது தவறாகி போனது,

இன்றைக்கு பிராமிட் சாய்மீரா நிலை மிக மிக பரிதாபம் . என்றைக்கு மொத்தமாக இழுத்து மூடுவார்கள் என்று தெரியவில்லை.

ரிலையன்ஸ் அட்லப்ஸ் தமிழகத்தில் பல தியேட்டர்களை விலைக்கு வாங்கி அதை நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள். கண்டிப்பாக இவர்கள் சினிமா பார்க்கு ஆர்வத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்

தமிழக மக்களுக்கு தியேட்டர் சென்று படத்தை பார்க்கும் ஆர்வம் இன்று வரை குறையவில்லை.. என்னதான் திருட்டு டிவிடி தொல்லை இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் நல்ல சேவையை கொடுத்தால் பல பேர் டிவிடியில் கேவலமான பிரிண்ட்டை பார்பதை விட்டு விடுவார்கள்..

தியேட்டரில் சினிமா பார்பதே நிஜமான சினிமா பார்த்த உணர்வை கொடுக்கும்.

Singh the King சமீபத்தில் வந்த ஹிந்தி படம்.. அப்படி ஒன்றும் பிரமாதமான படம் கிடையாது. இதோ நேற்று landmarkல் புது பட டிவிடிகளை அலசும் போது கிடைத்தது.

இந்தி பட உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மும்பை தில்லி போன்ற பெரு நகரங்களில் அதிக பட்ச தியேட்டர்களில் படத்தை ரிலிஸ் செய்து லாபம் சம்பாதித்து பின் படம் வந்த 50 அல்லது 100 நாட்களில் டிவிடியில் கொடுத்து விடுகிறார்கள். விலையும் கையை கடிப்பதில்லை..

பின் சில நாட்களில் டிவியிலும் வந்து விடுகிறது. தயாரிப்பாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் லாபம்.

இந்த திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தமிழ் பட உலகும் செயல்பட வேண்டும். கேவலமான தியேட்டர்களில் திரையிடுவது பின் 3 வருடம் கழித்து டிவிடி + டிவியில் வெளியிடுவது என்ற கொள்கையை மாற்ற வேண்டும்..

பெங்களூரில் என் வீட்டுக்கு அருகே இருக்கும் பாலாஜி தியேட்டரில் தமிழ் படம் மட்டும் தான் திரையிடுவார்கள். கொடுக்கும் 50 ரூபாவிற்க்கு நல்ல சேவையை தருவார்கள். மூட்டை பூச்சி இல்லாத சீட்டுகள், ஏசி கூடவே நல்ல தரமான டிடிஎஸ்..

நான் அடிக்கடி படம் பார்பது பிவிஆர் அல்லது ஐநாக்ஸ் .. ஆன் லைனில் டிக்கேட் வாங்க முடிவதால் அங்கு தான் அடிக்கடி செல்வேன்,கொடுக்கும் பணத்திற்க்கு ஏற்ற மிகவும் தரமான சேவை...படம் பிடிக்க வில்லை என்றாலும் அந்த தியேட்டருக்கு மீண்டும் ஒரு முறை செல்ல தூண்டும் அளவிற்க்கு சேவை..



சென்னையில் நீயூ என்ற ஒரு கேவலமான படத்தை 4 வருடங்களுக்கு முன்னர் என் நண்பணோடு குரோம்பேட்டை வெற்றி என்ற படு கேவமான தியேட்டரில் பார்க்க ஒரு டிக்கேட்டுக்கு 100 ருபா கொடுத்தேன்..

ஏன் 100 ரூபா என்றால் த்தோடா என்று வர குண்டர்கள் வேறு..

தமிழ் சினிமாவை அழிக்க இவர்களே போதும்...

ம் என்னறைக்கு தான் தமிழ் படவுலகம் மாற போகுதே :)

Sunday, November 2, 2008

பிடித்த விளையாட்டுக்கள்

வித்யா அக்கா மிக அழகாக தன் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளை சொல்லி இருக்கிறார்கள். என்னையும் எழுத சொல்லி இருக்காங்க. கிரிக்கேட்டை சொல்ல கூடாது, அதுக்கு தடா.... பேட்டிங்க மட்டும் செய்து விட்டு பீல்டிங் செய்யும் நேரங்களில் அம்மா தேடுவாங்கன்னு எஸ்கேப் ஆனது தான் நிறைய. சரி அதான் கிரிக்கேட்டுக்கு தடா ..

நான் சிறுவயதில் வசித்த ஊர் கிராமமும் அல்லாது நகரமும் இல்லாத ஒரு இரண்டும் கெட்ட ஊர். பெயர் மன்னார்குடி. தஞ்சை மாவட்டதுகே இருக்கும் அனைத்து தனி சிறப்புகளையும் கொண்டது..

எங்கள் ஊரில் விளையாட்டுகள் மாறி கொண்டே இருக்கும்.. பம்பரம், பலிங்கி ( கோலி), கிட்டி புல்லு, சொக்கை பாணை கூடவே ஒளிஞ்சு புடிச்சு ( ஐஸ் பாய்ஸ்)..


ஐஸ் பாய்ஸ் விளையாட்டு ஏப்ரல் மே மாதத்தில் தான் விளையாடுவோம். நிறைய புது நண்பர்கள் அந்த சமயத்தில் கிடைப்பார்கள். விடுமுறைக்கு சென்னை மும்பை இருந்து வரும் பல தற்காலிக நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ளும் ஆங்கிலம் எங்களை எல்லாம் வியப்பூட்டும். கூடவே பொறாமையாக இருக்கும். ஐஸ் பாய்ஸ் விளையாட்டில் அவர்களை பழிக்கு பழி வாங்கி விடுவோம்..

ஐஸ் பாய்ஸ் விளையாடும் போது எல்லைகள் உண்டு. இந்த எல்லை வரை தான் ஒளிந்து கொள்ள வேண்டும்.. வழக்கமாக நாங்கள் ஒளியும் இடங்கள் வீடுகளின் கதவின் மறைவில். முதலில் பிடிபட்டால் நாம அடுத்த ஆட்டத்தில் அனைவரையும் தேடி அலைய வேண்டும்.

புதுசா எங்க ஆட்டத்தில் யாராவது வந்தால் அவர்களை நொந்த போக வைத்து விடுவோம். வைக்கோல் போரில் ஒளிந்து கொண்டால் கடைசி வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தேடி கொண்டே இருக்க வேண்டியது..

ஜீன் மாதம் வந்தால் அந்த தற்காலிக நண்பகளும் காணாமல் போய் விடுவார்கள், பிறகு ...

இருக்கவே இருக்கு பலிங்கி அடிப்பது..

பலிங்கி விளையாடுவது மிகவும் சிரமான ஒன்று. எல்லாம் குட்டீஸ் பலிங்களையும் சேர்த்து உருட்ட வேண்டும்.. பின் குறி பார்த்து ஏதாச்சும் பலிங்கையை அடித்து விட்டால் நமது பலிங்கு எதிரி வசம்.


அழகாக தடிமான சோட்டா புட்டி உடை அனிந்த கோலி...அதை குறி பார்த்து அடிக்கும் போது நங் என்ற சத்தம் கேட்ட்க்கும். என்னதான் வேகமாக அடித்தாலும் உடையாது. கைகளின் நடு விரலை சற்று சொடுக்கி குறி பார்த்து அடிப்பது மிக பெரிய கலை. ஒரு பலிங்கி 10 காசு என்று வித்தது. கோலி சோடாவின் தொண்டையில் மிதக்கும் அந்த ஜந்துவுக்கு எத்தனை மரியாதை..

ஒரு நாள் என் பலிங்கி எல்லாம் இழந்து வீட்டிற்க்கு சென்று என்ன காரணம் என்று சொல்ல முடியாமல் அழுதது இன்று வரை மறக்க முடியவில்லை..


கிட்டிபுல்லு.. கிரிக்கேட் விளையாட்டின் முன்னோடி??

தேர்ந்து எடுத்த வேப்ப மர கிளையை ஒடித்து கிட்டியாக கிட்டி புல்லை செயய அப்போது எங்களிடம் தனி நிபுணர் குழுவே இருந்தது..

கிட்டி புல் தெரிவுல் விளையாடும் போது வேகமாக ஒரு முறை அடித்து ரோட்டில் சென்ற அப்பாவியின் தலையை பதம் பார்த்தது. அதன் முதல் இது வன்முறை விளையாட்டு என்று தடை செய்யபட்டது

ஆனால் அதை விட வன்முறை விளையாட்டை நாங்கள் தீபாவளி முதல் கார்த்திகை வரை விளையாடுவோம்..

சொக்கபாணம் என்று ஊரில் அதிகமாகி போன குப்பைகளை தென்னை மட்டை துனை கொண்டு எரிப்பார்கள்... தீபாவளிக்கு வாங்கி மீதமான வெடிகளை அப்படியே சைலண்டாக அந்த சொக்கபாணையில் போட்டு விடுவோம்.. சில வெடிகள் வெடிக்கும்.. புஸ்ஸாக சில வெடிகள் பறக்கும்..

யார் போட்ட வெடி வெடித்தது என்று பெரிய பட்டிமறனமே நடக்கும்.... கடைசியில் கார்த்திகை நாள் வரும் போது எங்களின் சொந்த த்யாரிப்பு வெடிகளையும் சேர்த்து விடுவோம்.

நாங்கள் அன்று விளையாடிய விளையாட்டுகள் இன்று வரை மறக்க முடியவில்லை...

இந்த விளையாட்டை தொடர நான் அழைப்பது

வால் பையன்
டோண்டு ராகவன்

Saturday, November 1, 2008

இலங்கை தமிழர்கள் உரிமை காக்க ரஜினி பேச்சு - வீடியோ




அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.

இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சே சங்கீதம் போல் இருக்கும். பழகுவதற்கு அவர்கள் இனிமையானவர்கள். அத்தகையவர்கள் இன்று சொந்த மண்ணில் அடித்து கொல்லப்படுகிறார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு இன்று வரை வெற்றி கிட்டவில்லை. அவர்கள் ஆண் பிள்ளைகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது நிறுத்த வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் உறவினர்களை பறி கொடுத்த தமிழர்களும்இ மண்ணில் உதிரம் சிந்திய பெண்கள்இ குழந்தைகளின் ஆன்மாவும் அவர்களை சும்மா விடாது.

யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமை தொடர்ந்து நடந்தால் இலங்கை என்றுமே உருப்படாது. இலங்கையில் மட்டுமல்லஇ எந்த நாட்டிலும், எந்த மண்ணிலும் அப்பாவி குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் தாக்கப்படக் கூடாது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கான ரூ. 10 லட்சத்தை அளிப்பதாக அறிவித்தார்

இலங்கை தமிழர்கள் துயர் தீர பிராதிப்போம்



சூப்பர் ஸ்டார் ரஜினி இலங்கை தமிழர்களுக்காக திரட்டபடும் நிதிக்காக 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்.

கமல் 5 லட்சம் கொடுத்தார்.

சிறு சிறு நடிகர்களும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து இருக்கிறார்கள்.

நானும் என் பங்குக்கு என்னால் முடிந்த 20,000 ரூபாயைதமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

நம்மால் முடிந்த வரை இலங்கை தமிழர்கள் துயர் தீர உதவுவோம். தீவிரவாதம் போர் போன்ற மனித குலத்துக்கு எதிரான அபதங்களை அழிய பிராத்திப்போம்.

இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் மீண்டும் அமைதி விரைவில் திரும்ப வேண்டும்.

Monday, October 13, 2008

மின்சார கனவுகள்


சென்ற வாரம் திருச்சிக்கு சென்ற போது அய்யோடா சாமி !! என்ன கொடுமை சார் ..
தினமும் 10 மணி நேர மின் தடை. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை பின்பு நண்பகல் 12 மணி முதல் இரண்டு மணி வரை.. பின் மாலை 6 மணி முதல் 10 மணி வரை..

கொசுறாக அறிவிக்கபடாத நேரங்களில் மின் தடை ஹாய் சொல்லி விட்டு செல்லும்.. . WWFல் பங்கு பெறும் அளவிற்க்கு தகுதி படைத்த பயில்வான் கொசுக்களோடு தினமும் சண்டை.

ம்ம்.கடந்த ஜீன் மாதம் வரை தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை.

தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்று காலரை தூக்கி விட்டு உத்திரபிரதேச வாலாக்களிடம் பெருமிதம் பேசியது எல்லாம் இன்று கனவாக போனது :(

எல்லாம் அந்த காலம்

சரி ஒரு invertor யை வாங்கி வீட்டில் வைக்கலாம் என்றால் 4000க்கு கூட பெறாத 500 watts invertorயை 12,000 சொல்கிறார்கள்.. சரி பாட்டரி தனியாக வாங்கி assemble செய்யலாம் என்றால் ..சார் பெங்களூரல இதை விட பயங்கர பவர் கட்டாம்..அங்கேயே எல்லாம் தீர்ந்து போய்கிறது..இங்க ஸ்டாக் வரமாட்டேங்குது சார்.. நாங்க என்ன பண்றது..

பெங்களூரில் வசிக்கும் என்னிடமே இதை போல டார்ச் அடிப்பவர்களிடம் என்ன சொல்வது? காற்றுள்ள போதே தூற்றி கொள்.

பெங்களூரில் பவர் கட் என்பது எனக்கு தெரிந்த வரை இல்லை. இங்கு நிலைமை மோசமானால் கூட ஐடி நிறுவனங்களில் மின்சாரத்தை கை வைக்கிறார்கள். பொது மக்கள் கணக்கில் கை வைப்பது இல்லை.


என்ன தான் நடக்கிறது?? ஏன் இந்த மின்சார கோளாறு? எப்போது சரியாகும்??

  • தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க எந்த வித செயலிலில் அரசு எடுக்கவில்லை.
  • காற்றாலை மின்சாரம் தனியார்களால் தொடங்க பட்ட ஒன்று. இதனால் பெறப்படும் மின்சாரம் வானிலைக்கு ஏற்ப மாறுபடும். இதுவே போதும் என்று அரசு நினைத்து விட்டது போலும்
  • இலவச மின்சாரம் என்று வாரி கொடுத்தால் மின்சார பயண்பாடு அதிகரித்தது
  • மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தனால் மின்சார பயன்பாடு அதிகம் ஆனது
  • பல புதிய தொழிற்சாலைக்களுக்கு தடை இல்லாத மின்சாரம் கொடுப்பதால் கிடைக்கும் எதிர் வினை

இப்படி சொல்லி கொண்டே போகலாம். ,,,ஆனால் இந்த மின்சார தடை தீர வழி என்ன?

இன்னமும் அடுத்த ஒரு வருடம் கண்டிப்பாக மின்சார தடை இருக்கும். மேலும் மோசமாக ஆகலாம். ஆனால் குறைய வாய்ப்பில்லை..

இனி தற்போது வர இருக்கும் மழை காலங்களில் பம்பு செட்டால் செலவழிக்கபடும் மின்சாரம் குறையும் ..அதனால் மின் வெட்டு நிலைமை குறையலாம். ஆனால் கண்டிப்பாக மழை காலம் முடிந்த பின் மீண்டும் பிரம்மாணடமாக மீண்டும் உக்கிரமாக தலைகாட்டும்.

சரி தீர்வு தான் என்ன??

என்ன தான் கூவினாலும் அரசாங்கதிடம் உடனடி தீர்வு என்பது சத்தியமாக கிடையாது. மத்திய அரசிடம் இருந்து வாங்கலாம் என்றால் ஒரு யூணிட் 10 ரூபா என்பது தமிழ்நாடு அரசால் கண்டிப்பாக கட்டுபடியாகாது.10 ரூபாக்கு ஒரு யுணிட்டை வாங்கி அதை குறைந்த விலைக்கு விற்க்க என்ன மின்சார துறை கோமாளியா? இலவச டிவி கொடுத்தாலும் கொடுப்போம் ஆனால் இதை போல நட்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதே பதிலாக இருக்கும்..

கூடஙுகுளம் அனு மின் நிலையம் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதன் முதல் யூணிட்டின் கொள்ளவும 700 மெகா வாட். தமிழ் நாட்டின் பங்கு என்று 500 வாட் கிடைக்கும். அதை வைத்து நிலைமையை சீர் செய்ய தமிழ் நாடு அரசு முயர்ச்சிக்கலாம். ஆனால் அதை விட பற்றாகுறை மிக மிக அதிகம்..:(

இன்றைய நிலையில் 1000 மெகாவாட் வறை பற்றாகுறை. அரசு இதை வெளிப்படையாக அறிவிக்கைவில்லையே தவிர நடப்பது நிதர்சனம்...

அப்ப என்ன தான் செய்வது?

அனு மின்சார நிலையங்களே தற்போது கை கொடுக்கும் நண்பனாக இருக்கிறான்..

அமெரிக்காவுடன் அனு மின்சார திட்டதினால் பொதுமக்களுக்கான அனு உலை ரானுவத்துகான அனு உலை என்று அரசு பிரித்து இருக்கிறது.

அதன்படி கல்பாக்கம் அனு மின் நிலையம் ரானுவ உலையாக அடையாள்ம் காட்டபட்டுள்ளது. கல்பாக்கத்தில் இருக்கும் அனு உளைகளின் கீழ் 1500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் இன்று வரை யுரேனியம் பற்றாகுறையால் உற்பத்தி 200 மெகாவாட்டை அதை தாண்டுவதில்லை..

இனி அனு ஒப்பந்தால் கல்பாக்கத்துக்கும் யுரேனியம் கிடைக்கும்..அது தனது முழு கொள்ளவு உற்பத்தியை எட்டும். அதே நேரத்தில் இது ரானுவ உலை என்பதால் கூடவே உற்பத்தி குறைந்தால் யாரும் எதுவும் கேட்க்க முடியாது.

இன்றைய நிலை வரை ஒப்பந்தம் போட பட்டு இருக்கிறதே தவிர இன்னமும் யுரேனியம் வாங்க டெண்டர் வழங்கும் நிலைக்கு வரவில்லை. அது அடுத்த வருட பட்ஜெட்டில் ஏற்று கொள்ளபட்டு பின் என்றோ பயன்பாட்டுக்கு வரும்..

கூடங்குளத்தில் ரழ்யாவின் துணையோடு மேலும் பல அனு உலைகள் அமைக்கபடும். அதற்க்கான ஒப்பந்தம் வரும் நவம்பரில் இந்தியாவிற்க்கு வரும் ரஷ்யா பிரதமரோடு போட பட இருக்கிறது.

2013 இறுதியில கூடங்களும் 5000 மேகா வாட் மின்சாரம் கொடுக்கும் கேந்திரமாக மாறி விடும்.

அமெரிக்காவின் GE துணையோடு 40 மாதங்களில் தமிழ்நாட்டில் தென் புறத்தில் மேலும் ஒரு அனு மின் நிலையம் அமைக்கபடலாம்..அதற்க்கான ஒப்பந்தம் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு பின் தான் முடிவு செய்யபடும்..

தமிழ்நாடு அரசு மேலும் பல திட்டஙளை தீட்டலாம்.. அனல் மின்சாரத்துக்கு நிலக்கரியே கிடைக்காத போதும் அனல் மின்சாரத்துக்கு தனியார் துணையோடு ஒப்பந்தம் போடலாம்.

இது அனைத்தும் உடனே நடக்க போவதில்லை...

கண்டிப்பாக அடுத்த ஒரு வருடம் வரை இந்த மின்சார தட்டுபாடு தவிர்க்க முடியாதது.

உற்பத்தியை அதிகரிக்கும் போக்கு தற்போது தான் காணபடுகிறது. உற்பத்தி சீரடைய இன்னும் சில வருடங்களை தமிழ்நாடு தாண்ட வேண்டும். ..

தற்போதாவது அரசு சில போர்கால நடவடிக்களை எடுக்க வேண்டும்..

இலவச மின்சாரம் என்ற பெயரில் அநியாயத்துக்கு மின்சாரத்தை வீண் படுத்து செயல்களை நிலமை கட்டுக்குள் வரும் வரையாவது தடுக்க வேண்டும்
சாலையில் வைக்கபடும் மின்சார பலகைகளுக்கு மின்சாரம் தருவதை நிறுத்த வேண்டும்

உடன்பிறப்புகளோ அல்லது ரத்ததின் ரத்தங்களோ சும்மா அப்பாலிக்கா கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்..

இதை எதுவும் செய்யாமல் இருந்தால்....

கொசுகடியோடும்,,கை விசிறியோடும் வாழ வாழ்த்துக்கள்..

தஞ்சாவூர் பெரிய கோவில்


இது வாசல் கோபுறம்.மிக கம்பீரமாக நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் கோபுரம்.


இது கோபுரத்தின் உள்ளே காணப்படும் தற்கால தமிழனின் கண்டுபிடிப்பு. இலவசமாக தண்ணீர் கொடுத்தாலும் டம்ளரை கட்டி வைப்பது தமிழரின் தற்கால மரபு.


கோவிலின் வெளிப்புற தோற்ற்ம்


8 ம் நூற்றாண்டின் தமிழ் வழக்கில் ராஜராஜன் சொல்லி விட்டு போன செய்திகள். அன்றே documentation உக்தி அறிந்த ராஜராஜன்..
இதை போல பல எழுத்துகளை கோவிலில் மட்டும் அல்ல தஞ்சாவூரில் பல இடங்களில் பார்க்கலாம்.


நிழல் எங்கு விழுகிறது என்று தெரியாமல் அமைக்கபட்ட கோபுரம். பார்க்க கண் கோடி வேண்டும்


அபிஷேக நீர் வெளியே செல்லும் பாதையில் கூட ஏதோ ஒரு கலை அமைப்பு, அந்த குண்டு சிலையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது??



ராஜராஜன் தனது தளபதிகளின் சிலைகளையும் கோவிலில் வைத்து இருக்கிறான். இது அவனின் தளபதிகளில் ஒருவராம்


இந்த நந்தி பின் வந்த மன்னர்களால் கோவிலில் புதிகாக குடி பெயர்ந்தது. இவ்வளவு பெரிய கோவில்..பெரிய கோபுரம் பெரிய லிங்கம் ஆனால் ஏன் சிறிய நந்தி என்று யோசித்து ஒரே கல்லில் வார்த்த நந்தியை இங்கு அமைத்தனர். இந்த நந்தி வளர்கின்றது அதை தடுக்க முதுகில் ஆணி அடிக்கின்றனர் என்ற வதந்திகளும் கூடவே உண்டு


இதுவும் தமிழர்களின் கலாச்சாரம். காலத்தால் அழியாத இடம் என்றால் உடனே இவர்களும் தங்களின் பெயர் முகவரி மொபல் எண் போன்றவைகளை கரியால் பதித்து செல்வர். :)

..

இது ராஜராஜன் அமைத்த நந்தி..பெரிய நந்தியை சற்று ஏக்கமாக பார்க்கிறதோ??




கோவிலின் வெளிப்புற தோற்றம்



கோவிலை சுற்றி வரும் அகழி.. அந்நாளில் தஞ்சை நகரில் வரும் மழை நீரை இந்த அகழிக்கு வரும் படி அமைத்து இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் நகரின் குப்பைகள் மட்டும் இங்கு தவறாது வந்து சேர்கின்றன.

Tuesday, October 7, 2008

சூரியனோ சந்திரனோ

சூரிய சக்தியின் வழி மின்சாரமே நம் இந்திய நாட்டுக்கு ஏற்றது . அனு மின்சாரம் இன்றைய அவசர வளர்ச்சிக்கு தேவை..கூடவே நாம் கச்சா எண்ணெய் என்ற எரிபொருளை விட்டு விலக வேண்டிய காலம் நெருங்கி கொண்டே வருகிறது..



இன்றைய சூரிய வழி மின் பொருட்க்கள் விலை அதிகமாகவே இருக்கிறது. வருடத்தில் 365 நாட்களும் தடையில்லா சூரிய ஒளி பின் அடிக்கடி தடை படும் மின்சாரமும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் ஏற்றது.. சூரிய ஒளியால் இயங்கும் emergency light.


இதை டாடா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. விலை 4,500 INR

உபயோகிப்பது மிக எளிது.. நம் வீட்டில் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் இதன் சார்ஜ் பேனலை வைத்து விட்டால் போதும்..


என் பெற்றோருக்கு தீபாவளி பரிசாக இந்த தயாரிப்பை தர போகிறேன்.

உபரி செய்தி,,
பெங்களூரில் இயங்கும் முக்கால்வாசி சிக்னல்கள் சூரிய ஒளியினாலே இயக்கபடுகின்றன. கர்நாடக மாநில அரசு அனைத்து சிகனலுக்கும் சூரிய ஒளியை பயன்படித்தி இயக்கபடும் சிக்னல்களையே பொருத்த சொல்லி இருக்கிறது

Saturday, October 4, 2008

சத்யமேவ ஜயகே




காந்தி ஜெயந்தி.. வழக்கம் போல இந்த வருடமும் ஒரு நாள் விடுமுறையோடு பை பை சொல்லி விட்டு சென்றது..

காந்திய சிந்தைனைகள் எல்லாம் மேற்பார்வையில் மிகவும் ராவாக இருக்கும். இது தான் நான் காந்தி தொடர்பாக எனக்கு தெரிந்த செய்தி. தம் அடிக்காதே தண்ணி அடிக்காதே கூடவே பொய் சொல்லாதே என்ன வாழ்கைடா கொடுமைடா சாமி,,

காந்தி இந்திய தந்தை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார்..இது தான் அவரை பற்றி பள்ளிகூட வாழ்க்கையில் படித்தது. அதுவும் வரலாற்றில் மட்டும் வருவார். கூடவே முதலாம் உலக போர் இரண்டாம் உலக போர் பிரிட்டீஸ் மகாராணி எல்லாரும் வருவார்கள். இப்போதைய வரலாற்று பாட புத்தகத்தில் கருணாநிதி ஜெயலலிதா எல்லாரும் வருகிறார்கள் என்று ஒன்று விட்ட தம்பி சொன்னான்.. எனக்கு வரலாறுகளில் அவ்வளவு ஆர்வம் இல்லை..வரலாறு புத்தகத்தில் புகைபடம் தென்படும் பக்கங்களில் எல்லாம் எண்ணை வழியும் தலைமுடிகளில் பச்சை நிற ரப்பர் தேய்த்து அதை படங்களுக்கு மத்தியில் பதித்து புத்தகத்தின் மேல் உட்கார்ந்து அந்த ரப்பரின் மேல் அந்த புகைபடத்தை காப்பி எடுப்பதுதான் ஆர்வம் இருந்தது.

எனக்கும் இத்தனை ஆளுமைகளுக்கு மத்தியில் காந்தியை கண்டறிய தெரியவில்லை.காந்தியை இதுவரை என் ரப்பரில் காப்பி எடுத்து இருப்பேனே என்பது சந்தேகமே..
ரூபா நோட்டில் கூட அவர் இருக்கார்.. ஆனால் ரூபா நோட்டில் நமிதாவோ அல்லது திரிசா போட்டோ போட்டால் தானே படிப்போம்..அல்லது ரசிப்போம்,,வெளிநாடு செல்லும் போது அங்கு கிடைக்கும் வழவழப்பான அழுக்கு ஏறாத கரன்சியில் ஏதோ ராஜா அல்லது ராணி தொப்பி போட்டு சிரிக்கும் படங்களை தான் உலகில் மிக மிக அருமையான கரன்ஸி என்று கருதி வந்தேன்..என்னடா இந்த நாடு இப்படி தாத்தா போட்டோ எல்லாம் போட்டு நம் நாட்டை கேவலபடுத்துறாங்களே என்ற எண்ணம் தான் ஓங்கி ஒளித்தது..

யாரோ பேர் தெரியவில்லை என் காதில் ஓதி விட்டு சென்றது காந்தியால் இந்தியா பாக்கிஸ்தான் என்று இரண்டு பட்டது. இப்படி எல்லாம் ஒருமை செய்தி கேள்விபட்ட நான் நண்பர்கள் புடை சூழ சலே ரகோ முன்னா பாய் ( வசூல்ராஜா MBBS part 2) பார்த்த போது இந்த மனிதரிடம் ஏதோ இருக்கிறது ,,ஏதோ சொல்ல தெரியாத ஆளுமை இந்த மனிதரிடம் இருக்கிறது என்று புரிந்தது.. இந்தி படங்கள் என்றாலே சும்மா உட்டாலங்கடி வேலை தான் என்ற எண்ண்ம் கூடவே இருப்பதால் அதையும் சீக்கிரமே மறந்தேன்..

ஒரு சுப புண்ணிய நாளில் நானும் லண்டன் சென்றேன். வழக்கம் போல ஆன் சைட்டில் துட்டு அள்ளலாம் என்ற எண்ணம் தான்..வேலை லண்டலில் இல்லை அங்கு இருந்து இரண்டு புகைவண்டி பிடித்து ஏதோ குக்கிராமம் என்று சொல்லாமலும் நகரம் என்று இல்லாமல் எதோ ஒரு இடம். ஏதோ ஒரு ஹோட்டல்..

முதல் நாள் வேளை.. எனக்கு என ஒதுக்கபட்ட இடத்தில் பொட்டியை தட்டிகிட்டு இருந்தேன்.. வேலை பார்க்க சென்று இருந்தது எனது க்ளையண்ட்க்காக..
என்னோட க்ளைய்ண்ட் நான் செய்வது சரி என்று சொன்னால் தான் எனக்கு இங்கு appraisal முதல் அனைத்து மண்டகபடியும் நடக்கும். எனவே க்ளையண்டை அனுசரித்து நடந்து கொள்வதே சால சிறந்தது என்று அலுவலக சீனியர்கள் சொல்லி இருந்தார்கள்..எனக்கு அந்த க்ளையண்டை பார்பதற்க்கு சந்தர்பம் கிடைத்தது..எனது நிறுவனம் பல இடங்களில் கிளைகள் வைத்து இருப்பதால் பல நாட்டு ஆட்கள் அந்த க்ளையேண்டோடு பரிச்சயம்

ஹலோ அருண்ண்ண்..
யெஸ் ஆண்டர்ஸன்.. glad to meet you..

so where are you from?
i am from india..

so you are from gandhi's country?

அண்டர்சன் முழு வெள்ளைகாரர் அவரின் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஊர்வன பறப்பன தவிர கூடவே சற்று ரம் மும் இருக்கும்..

அவர் என்னை காந்தி நாடா என்று கேட்டதில் ஏதோ உள்ள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது..இனம் புரியா ஏதோ ஒரு ஆளுமை..

அப்போது தான் காந்தி தொடர்பாக படிக்க தொடங்கினேன்..படித்தேன் படிதேன் இன்று வரை படித்து வருகிறேன்.

காந்தியின் கொள்களைகள் வெகு சிலபம். என்னை போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளுக்கு ஒத்து வருமா எனபதும் இலவசமாக வரும் கேள்வி..

காந்தி சொல்வது என்ன ரொம்ப சிம்பிள்

உனக்கு கெடுதல் செய்பவனுக்கும் நல்லவனாக இருந்து அவன் மன்சாட்சியை யோசிக்க வைத்து விடு..
வன்முறைக்கு இடம் கொடுக்காதே.. உனக்கு எவன் தீங்கு கொடுத்தாலும் நேர்மைக்காக அவன் எத்த்த்ணை அடி அடித்தாலும் வாங்கி கொள் கடைசியில் உண்மையே வெல்லும்..

மிகவும் எளிமையான ஆனால் கடுமையான பயிற்ச்சி..அவர் எழுத்துகளை படிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது ஆனால் அதை போல நடந்து கொள்ள மிக கடுமையான மன வலிமை வேண்டும்..

பல லட்ச்சகணக்காண மன வலிமை கொண்ட தொண்டர்களை கொண்டு இந்த தேசத்தை அடிமை வாழ்வில் விடுவித்து இருக்கிறார் என்றால்..

ஏன் காந்தி கொள்கைகள் இன்று யாராலும் காந்தி தேசத்தால் கடைபடிக்கபடாமல் போகிறது..காந்தி சொல்வதேல்லாம் தனி நபர் சீர் திருத்தமே. தனி நபர் சீர் திருத்தம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்..

எனக்குல் ஒரு சத்திய சோதனை எளிமையான சோதனை..நானும் செய்து பார்த்தேன்..

ஒரு வார விடுமுறையில்..

கூட்டம் அதிகமாக சிக்னலில் இல்லை.. சிவப்பு விளக்கு இருந்த போதும் வழக்கம் பொல மக்கள் அதை கடந்து சென்று கொண்டு இருந்தனர்..

நான் செல்ல மாட்டேன்.. விதிகளை மதிப்பேன்..

பின்னால் இருந்து பெரும் சத்தம்.. ஹாரன் கள் கூடவே வசவு வார்த்தைகளும்..

இல்லை நான் போக மாட்டேன்.. பச்சை விளக்கு எரியும் முன்னே போக மாட்டேன்.. இது எனக்கும் என் மன்சாட்சிக்கும் இடையே உள்ள போராட்டம்..

ஒருவர் மிகவும் பொருமை இழந்து என்னிடம் வந்தார்...

உன் வண்டியில் ஏதாச்சும் கோளாரா?

இல்லை
அப்புறம் ஏன் வழியை மறித்து கொண்டு இருக்கே தள்ளி போ

இல்லை பச்சை வரும் முன் நான் போக மாட்டேன்

வார்த்தை தடித்தது.. அவர் என்னை அடிக்க வந்தார்.. ஏன் அரைகுறையாக அடித்தே விட்டார்....

இல்லை நான் போக மாட்டேன்..

இல்லை நான் பச்சை விளக்கு வரும் முன் நான் போகவே மாட்டேன்..

ஒரு வழியாக ப்ச்சை வந்தது.. எதிர் திசையில் இருந்து சிகப்பு விளக்கு எரிந்த போதும் அவசரமாக கடந்து வந்த ஒரு வாகனம்.. என்னை வசவு வார்த்தையில் திட்டு விட்டு சென்றது..

இல்லை என்னால் முடியாது.. நான் நேர்மையை கடை பிடிப்பேன்..

கடை பிடிப்பேன்...

தினமும் அதே செய்கை.. இல்லை நான் தளர விட போவதில்லை..எந்த அநியாமும் உன் மனதுக்கு பட்டதோ அதை எதிர்த்து நில்..

தினமும் எனக்கு பல பிரச்சனைகள்.. இல்லை நான் விட போவதில்லை.. இந்த விதிகளை தினமும் கடைபிடிக்க தொடங்கினேன்
விதிகளை மதிப்பேன்...தினமும் யாரோ ஒருவர் என் குடும்பங்களை இழுத்து திட்டு விட்டு செல்வார்..


டேய் அப்படியே செட்ல கட் அடிச்சு போகலாம்..

இல்லை நான் விதிகளை மதிப்பேன்..

தொடர்சியாக என் மவுன போராட்டம்.. தினமும் நான் வரும் வேளையில் இன்று அந்த சிக்னல் சண்டைகள் இல்லை.. யாரும் விதிகளை மீறுவதில்லை..என்னை திட்டுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.. எனக்கு பல கேல்யான பட்ட பெயர்களுக்கும் வந்தது..ஆனால பல பேர் நிஜமாகவே சாலை விதிகளை கடை பிடிக்க அரமித்தனர்..

இன்று சிக்னலில் என் பின்னால் நிற்க்க்ம் யாரும் என்னிடம் சண்டை பொடுவதில்லை..மாறாக பொறுமையாக நிற்க்கிறார்கள்..என்னிடம் சண்டை போட்டவர்களும் சினேகமாக சிரித்து விட்டு செல்கிறார்கள்..

எனக்கு நம்பிக்கை வந்தது.. கண்டிப்பாக இந்த சமுதாயம் கண்டிப்பாக மாறும்..நமக்கு வேண்டியது பொறுமையும் கூடவே மனம் தளராத போராட்டமும் தான்..

சத்யமேவ ஜயதே

Monday, September 22, 2008