Monday, October 13, 2008

மின்சார கனவுகள்


சென்ற வாரம் திருச்சிக்கு சென்ற போது அய்யோடா சாமி !! என்ன கொடுமை சார் ..
தினமும் 10 மணி நேர மின் தடை. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை பின்பு நண்பகல் 12 மணி முதல் இரண்டு மணி வரை.. பின் மாலை 6 மணி முதல் 10 மணி வரை..

கொசுறாக அறிவிக்கபடாத நேரங்களில் மின் தடை ஹாய் சொல்லி விட்டு செல்லும்.. . WWFல் பங்கு பெறும் அளவிற்க்கு தகுதி படைத்த பயில்வான் கொசுக்களோடு தினமும் சண்டை.

ம்ம்.கடந்த ஜீன் மாதம் வரை தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை.

தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்று காலரை தூக்கி விட்டு உத்திரபிரதேச வாலாக்களிடம் பெருமிதம் பேசியது எல்லாம் இன்று கனவாக போனது :(

எல்லாம் அந்த காலம்

சரி ஒரு invertor யை வாங்கி வீட்டில் வைக்கலாம் என்றால் 4000க்கு கூட பெறாத 500 watts invertorயை 12,000 சொல்கிறார்கள்.. சரி பாட்டரி தனியாக வாங்கி assemble செய்யலாம் என்றால் ..சார் பெங்களூரல இதை விட பயங்கர பவர் கட்டாம்..அங்கேயே எல்லாம் தீர்ந்து போய்கிறது..இங்க ஸ்டாக் வரமாட்டேங்குது சார்.. நாங்க என்ன பண்றது..

பெங்களூரில் வசிக்கும் என்னிடமே இதை போல டார்ச் அடிப்பவர்களிடம் என்ன சொல்வது? காற்றுள்ள போதே தூற்றி கொள்.

பெங்களூரில் பவர் கட் என்பது எனக்கு தெரிந்த வரை இல்லை. இங்கு நிலைமை மோசமானால் கூட ஐடி நிறுவனங்களில் மின்சாரத்தை கை வைக்கிறார்கள். பொது மக்கள் கணக்கில் கை வைப்பது இல்லை.


என்ன தான் நடக்கிறது?? ஏன் இந்த மின்சார கோளாறு? எப்போது சரியாகும்??

  • தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க எந்த வித செயலிலில் அரசு எடுக்கவில்லை.
  • காற்றாலை மின்சாரம் தனியார்களால் தொடங்க பட்ட ஒன்று. இதனால் பெறப்படும் மின்சாரம் வானிலைக்கு ஏற்ப மாறுபடும். இதுவே போதும் என்று அரசு நினைத்து விட்டது போலும்
  • இலவச மின்சாரம் என்று வாரி கொடுத்தால் மின்சார பயண்பாடு அதிகரித்தது
  • மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தனால் மின்சார பயன்பாடு அதிகம் ஆனது
  • பல புதிய தொழிற்சாலைக்களுக்கு தடை இல்லாத மின்சாரம் கொடுப்பதால் கிடைக்கும் எதிர் வினை

இப்படி சொல்லி கொண்டே போகலாம். ,,,ஆனால் இந்த மின்சார தடை தீர வழி என்ன?

இன்னமும் அடுத்த ஒரு வருடம் கண்டிப்பாக மின்சார தடை இருக்கும். மேலும் மோசமாக ஆகலாம். ஆனால் குறைய வாய்ப்பில்லை..

இனி தற்போது வர இருக்கும் மழை காலங்களில் பம்பு செட்டால் செலவழிக்கபடும் மின்சாரம் குறையும் ..அதனால் மின் வெட்டு நிலைமை குறையலாம். ஆனால் கண்டிப்பாக மழை காலம் முடிந்த பின் மீண்டும் பிரம்மாணடமாக மீண்டும் உக்கிரமாக தலைகாட்டும்.

சரி தீர்வு தான் என்ன??

என்ன தான் கூவினாலும் அரசாங்கதிடம் உடனடி தீர்வு என்பது சத்தியமாக கிடையாது. மத்திய அரசிடம் இருந்து வாங்கலாம் என்றால் ஒரு யூணிட் 10 ரூபா என்பது தமிழ்நாடு அரசால் கண்டிப்பாக கட்டுபடியாகாது.10 ரூபாக்கு ஒரு யுணிட்டை வாங்கி அதை குறைந்த விலைக்கு விற்க்க என்ன மின்சார துறை கோமாளியா? இலவச டிவி கொடுத்தாலும் கொடுப்போம் ஆனால் இதை போல நட்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதே பதிலாக இருக்கும்..

கூடஙுகுளம் அனு மின் நிலையம் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதன் முதல் யூணிட்டின் கொள்ளவும 700 மெகா வாட். தமிழ் நாட்டின் பங்கு என்று 500 வாட் கிடைக்கும். அதை வைத்து நிலைமையை சீர் செய்ய தமிழ் நாடு அரசு முயர்ச்சிக்கலாம். ஆனால் அதை விட பற்றாகுறை மிக மிக அதிகம்..:(

இன்றைய நிலையில் 1000 மெகாவாட் வறை பற்றாகுறை. அரசு இதை வெளிப்படையாக அறிவிக்கைவில்லையே தவிர நடப்பது நிதர்சனம்...

அப்ப என்ன தான் செய்வது?

அனு மின்சார நிலையங்களே தற்போது கை கொடுக்கும் நண்பனாக இருக்கிறான்..

அமெரிக்காவுடன் அனு மின்சார திட்டதினால் பொதுமக்களுக்கான அனு உலை ரானுவத்துகான அனு உலை என்று அரசு பிரித்து இருக்கிறது.

அதன்படி கல்பாக்கம் அனு மின் நிலையம் ரானுவ உலையாக அடையாள்ம் காட்டபட்டுள்ளது. கல்பாக்கத்தில் இருக்கும் அனு உளைகளின் கீழ் 1500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் இன்று வரை யுரேனியம் பற்றாகுறையால் உற்பத்தி 200 மெகாவாட்டை அதை தாண்டுவதில்லை..

இனி அனு ஒப்பந்தால் கல்பாக்கத்துக்கும் யுரேனியம் கிடைக்கும்..அது தனது முழு கொள்ளவு உற்பத்தியை எட்டும். அதே நேரத்தில் இது ரானுவ உலை என்பதால் கூடவே உற்பத்தி குறைந்தால் யாரும் எதுவும் கேட்க்க முடியாது.

இன்றைய நிலை வரை ஒப்பந்தம் போட பட்டு இருக்கிறதே தவிர இன்னமும் யுரேனியம் வாங்க டெண்டர் வழங்கும் நிலைக்கு வரவில்லை. அது அடுத்த வருட பட்ஜெட்டில் ஏற்று கொள்ளபட்டு பின் என்றோ பயன்பாட்டுக்கு வரும்..

கூடங்குளத்தில் ரழ்யாவின் துணையோடு மேலும் பல அனு உலைகள் அமைக்கபடும். அதற்க்கான ஒப்பந்தம் வரும் நவம்பரில் இந்தியாவிற்க்கு வரும் ரஷ்யா பிரதமரோடு போட பட இருக்கிறது.

2013 இறுதியில கூடங்களும் 5000 மேகா வாட் மின்சாரம் கொடுக்கும் கேந்திரமாக மாறி விடும்.

அமெரிக்காவின் GE துணையோடு 40 மாதங்களில் தமிழ்நாட்டில் தென் புறத்தில் மேலும் ஒரு அனு மின் நிலையம் அமைக்கபடலாம்..அதற்க்கான ஒப்பந்தம் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு பின் தான் முடிவு செய்யபடும்..

தமிழ்நாடு அரசு மேலும் பல திட்டஙளை தீட்டலாம்.. அனல் மின்சாரத்துக்கு நிலக்கரியே கிடைக்காத போதும் அனல் மின்சாரத்துக்கு தனியார் துணையோடு ஒப்பந்தம் போடலாம்.

இது அனைத்தும் உடனே நடக்க போவதில்லை...

கண்டிப்பாக அடுத்த ஒரு வருடம் வரை இந்த மின்சார தட்டுபாடு தவிர்க்க முடியாதது.

உற்பத்தியை அதிகரிக்கும் போக்கு தற்போது தான் காணபடுகிறது. உற்பத்தி சீரடைய இன்னும் சில வருடங்களை தமிழ்நாடு தாண்ட வேண்டும். ..

தற்போதாவது அரசு சில போர்கால நடவடிக்களை எடுக்க வேண்டும்..

இலவச மின்சாரம் என்ற பெயரில் அநியாயத்துக்கு மின்சாரத்தை வீண் படுத்து செயல்களை நிலமை கட்டுக்குள் வரும் வரையாவது தடுக்க வேண்டும்
சாலையில் வைக்கபடும் மின்சார பலகைகளுக்கு மின்சாரம் தருவதை நிறுத்த வேண்டும்

உடன்பிறப்புகளோ அல்லது ரத்ததின் ரத்தங்களோ சும்மா அப்பாலிக்கா கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்..

இதை எதுவும் செய்யாமல் இருந்தால்....

கொசுகடியோடும்,,கை விசிறியோடும் வாழ வாழ்த்துக்கள்..

தஞ்சாவூர் பெரிய கோவில்


இது வாசல் கோபுறம்.மிக கம்பீரமாக நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் கோபுரம்.


இது கோபுரத்தின் உள்ளே காணப்படும் தற்கால தமிழனின் கண்டுபிடிப்பு. இலவசமாக தண்ணீர் கொடுத்தாலும் டம்ளரை கட்டி வைப்பது தமிழரின் தற்கால மரபு.


கோவிலின் வெளிப்புற தோற்ற்ம்


8 ம் நூற்றாண்டின் தமிழ் வழக்கில் ராஜராஜன் சொல்லி விட்டு போன செய்திகள். அன்றே documentation உக்தி அறிந்த ராஜராஜன்..
இதை போல பல எழுத்துகளை கோவிலில் மட்டும் அல்ல தஞ்சாவூரில் பல இடங்களில் பார்க்கலாம்.


நிழல் எங்கு விழுகிறது என்று தெரியாமல் அமைக்கபட்ட கோபுரம். பார்க்க கண் கோடி வேண்டும்


அபிஷேக நீர் வெளியே செல்லும் பாதையில் கூட ஏதோ ஒரு கலை அமைப்பு, அந்த குண்டு சிலையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது??



ராஜராஜன் தனது தளபதிகளின் சிலைகளையும் கோவிலில் வைத்து இருக்கிறான். இது அவனின் தளபதிகளில் ஒருவராம்


இந்த நந்தி பின் வந்த மன்னர்களால் கோவிலில் புதிகாக குடி பெயர்ந்தது. இவ்வளவு பெரிய கோவில்..பெரிய கோபுரம் பெரிய லிங்கம் ஆனால் ஏன் சிறிய நந்தி என்று யோசித்து ஒரே கல்லில் வார்த்த நந்தியை இங்கு அமைத்தனர். இந்த நந்தி வளர்கின்றது அதை தடுக்க முதுகில் ஆணி அடிக்கின்றனர் என்ற வதந்திகளும் கூடவே உண்டு


இதுவும் தமிழர்களின் கலாச்சாரம். காலத்தால் அழியாத இடம் என்றால் உடனே இவர்களும் தங்களின் பெயர் முகவரி மொபல் எண் போன்றவைகளை கரியால் பதித்து செல்வர். :)

..

இது ராஜராஜன் அமைத்த நந்தி..பெரிய நந்தியை சற்று ஏக்கமாக பார்க்கிறதோ??




கோவிலின் வெளிப்புற தோற்றம்



கோவிலை சுற்றி வரும் அகழி.. அந்நாளில் தஞ்சை நகரில் வரும் மழை நீரை இந்த அகழிக்கு வரும் படி அமைத்து இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் நகரின் குப்பைகள் மட்டும் இங்கு தவறாது வந்து சேர்கின்றன.

Tuesday, October 7, 2008

சூரியனோ சந்திரனோ

சூரிய சக்தியின் வழி மின்சாரமே நம் இந்திய நாட்டுக்கு ஏற்றது . அனு மின்சாரம் இன்றைய அவசர வளர்ச்சிக்கு தேவை..கூடவே நாம் கச்சா எண்ணெய் என்ற எரிபொருளை விட்டு விலக வேண்டிய காலம் நெருங்கி கொண்டே வருகிறது..



இன்றைய சூரிய வழி மின் பொருட்க்கள் விலை அதிகமாகவே இருக்கிறது. வருடத்தில் 365 நாட்களும் தடையில்லா சூரிய ஒளி பின் அடிக்கடி தடை படும் மின்சாரமும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் ஏற்றது.. சூரிய ஒளியால் இயங்கும் emergency light.


இதை டாடா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. விலை 4,500 INR

உபயோகிப்பது மிக எளிது.. நம் வீட்டில் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் இதன் சார்ஜ் பேனலை வைத்து விட்டால் போதும்..


என் பெற்றோருக்கு தீபாவளி பரிசாக இந்த தயாரிப்பை தர போகிறேன்.

உபரி செய்தி,,
பெங்களூரில் இயங்கும் முக்கால்வாசி சிக்னல்கள் சூரிய ஒளியினாலே இயக்கபடுகின்றன. கர்நாடக மாநில அரசு அனைத்து சிகனலுக்கும் சூரிய ஒளியை பயன்படித்தி இயக்கபடும் சிக்னல்களையே பொருத்த சொல்லி இருக்கிறது

Saturday, October 4, 2008

சத்யமேவ ஜயகே




காந்தி ஜெயந்தி.. வழக்கம் போல இந்த வருடமும் ஒரு நாள் விடுமுறையோடு பை பை சொல்லி விட்டு சென்றது..

காந்திய சிந்தைனைகள் எல்லாம் மேற்பார்வையில் மிகவும் ராவாக இருக்கும். இது தான் நான் காந்தி தொடர்பாக எனக்கு தெரிந்த செய்தி. தம் அடிக்காதே தண்ணி அடிக்காதே கூடவே பொய் சொல்லாதே என்ன வாழ்கைடா கொடுமைடா சாமி,,

காந்தி இந்திய தந்தை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார்..இது தான் அவரை பற்றி பள்ளிகூட வாழ்க்கையில் படித்தது. அதுவும் வரலாற்றில் மட்டும் வருவார். கூடவே முதலாம் உலக போர் இரண்டாம் உலக போர் பிரிட்டீஸ் மகாராணி எல்லாரும் வருவார்கள். இப்போதைய வரலாற்று பாட புத்தகத்தில் கருணாநிதி ஜெயலலிதா எல்லாரும் வருகிறார்கள் என்று ஒன்று விட்ட தம்பி சொன்னான்.. எனக்கு வரலாறுகளில் அவ்வளவு ஆர்வம் இல்லை..வரலாறு புத்தகத்தில் புகைபடம் தென்படும் பக்கங்களில் எல்லாம் எண்ணை வழியும் தலைமுடிகளில் பச்சை நிற ரப்பர் தேய்த்து அதை படங்களுக்கு மத்தியில் பதித்து புத்தகத்தின் மேல் உட்கார்ந்து அந்த ரப்பரின் மேல் அந்த புகைபடத்தை காப்பி எடுப்பதுதான் ஆர்வம் இருந்தது.

எனக்கும் இத்தனை ஆளுமைகளுக்கு மத்தியில் காந்தியை கண்டறிய தெரியவில்லை.காந்தியை இதுவரை என் ரப்பரில் காப்பி எடுத்து இருப்பேனே என்பது சந்தேகமே..
ரூபா நோட்டில் கூட அவர் இருக்கார்.. ஆனால் ரூபா நோட்டில் நமிதாவோ அல்லது திரிசா போட்டோ போட்டால் தானே படிப்போம்..அல்லது ரசிப்போம்,,வெளிநாடு செல்லும் போது அங்கு கிடைக்கும் வழவழப்பான அழுக்கு ஏறாத கரன்சியில் ஏதோ ராஜா அல்லது ராணி தொப்பி போட்டு சிரிக்கும் படங்களை தான் உலகில் மிக மிக அருமையான கரன்ஸி என்று கருதி வந்தேன்..என்னடா இந்த நாடு இப்படி தாத்தா போட்டோ எல்லாம் போட்டு நம் நாட்டை கேவலபடுத்துறாங்களே என்ற எண்ணம் தான் ஓங்கி ஒளித்தது..

யாரோ பேர் தெரியவில்லை என் காதில் ஓதி விட்டு சென்றது காந்தியால் இந்தியா பாக்கிஸ்தான் என்று இரண்டு பட்டது. இப்படி எல்லாம் ஒருமை செய்தி கேள்விபட்ட நான் நண்பர்கள் புடை சூழ சலே ரகோ முன்னா பாய் ( வசூல்ராஜா MBBS part 2) பார்த்த போது இந்த மனிதரிடம் ஏதோ இருக்கிறது ,,ஏதோ சொல்ல தெரியாத ஆளுமை இந்த மனிதரிடம் இருக்கிறது என்று புரிந்தது.. இந்தி படங்கள் என்றாலே சும்மா உட்டாலங்கடி வேலை தான் என்ற எண்ண்ம் கூடவே இருப்பதால் அதையும் சீக்கிரமே மறந்தேன்..

ஒரு சுப புண்ணிய நாளில் நானும் லண்டன் சென்றேன். வழக்கம் போல ஆன் சைட்டில் துட்டு அள்ளலாம் என்ற எண்ணம் தான்..வேலை லண்டலில் இல்லை அங்கு இருந்து இரண்டு புகைவண்டி பிடித்து ஏதோ குக்கிராமம் என்று சொல்லாமலும் நகரம் என்று இல்லாமல் எதோ ஒரு இடம். ஏதோ ஒரு ஹோட்டல்..

முதல் நாள் வேளை.. எனக்கு என ஒதுக்கபட்ட இடத்தில் பொட்டியை தட்டிகிட்டு இருந்தேன்.. வேலை பார்க்க சென்று இருந்தது எனது க்ளையண்ட்க்காக..
என்னோட க்ளைய்ண்ட் நான் செய்வது சரி என்று சொன்னால் தான் எனக்கு இங்கு appraisal முதல் அனைத்து மண்டகபடியும் நடக்கும். எனவே க்ளையண்டை அனுசரித்து நடந்து கொள்வதே சால சிறந்தது என்று அலுவலக சீனியர்கள் சொல்லி இருந்தார்கள்..எனக்கு அந்த க்ளையண்டை பார்பதற்க்கு சந்தர்பம் கிடைத்தது..எனது நிறுவனம் பல இடங்களில் கிளைகள் வைத்து இருப்பதால் பல நாட்டு ஆட்கள் அந்த க்ளையேண்டோடு பரிச்சயம்

ஹலோ அருண்ண்ண்..
யெஸ் ஆண்டர்ஸன்.. glad to meet you..

so where are you from?
i am from india..

so you are from gandhi's country?

அண்டர்சன் முழு வெள்ளைகாரர் அவரின் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஊர்வன பறப்பன தவிர கூடவே சற்று ரம் மும் இருக்கும்..

அவர் என்னை காந்தி நாடா என்று கேட்டதில் ஏதோ உள்ள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது..இனம் புரியா ஏதோ ஒரு ஆளுமை..

அப்போது தான் காந்தி தொடர்பாக படிக்க தொடங்கினேன்..படித்தேன் படிதேன் இன்று வரை படித்து வருகிறேன்.

காந்தியின் கொள்களைகள் வெகு சிலபம். என்னை போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளுக்கு ஒத்து வருமா எனபதும் இலவசமாக வரும் கேள்வி..

காந்தி சொல்வது என்ன ரொம்ப சிம்பிள்

உனக்கு கெடுதல் செய்பவனுக்கும் நல்லவனாக இருந்து அவன் மன்சாட்சியை யோசிக்க வைத்து விடு..
வன்முறைக்கு இடம் கொடுக்காதே.. உனக்கு எவன் தீங்கு கொடுத்தாலும் நேர்மைக்காக அவன் எத்த்த்ணை அடி அடித்தாலும் வாங்கி கொள் கடைசியில் உண்மையே வெல்லும்..

மிகவும் எளிமையான ஆனால் கடுமையான பயிற்ச்சி..அவர் எழுத்துகளை படிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது ஆனால் அதை போல நடந்து கொள்ள மிக கடுமையான மன வலிமை வேண்டும்..

பல லட்ச்சகணக்காண மன வலிமை கொண்ட தொண்டர்களை கொண்டு இந்த தேசத்தை அடிமை வாழ்வில் விடுவித்து இருக்கிறார் என்றால்..

ஏன் காந்தி கொள்கைகள் இன்று யாராலும் காந்தி தேசத்தால் கடைபடிக்கபடாமல் போகிறது..காந்தி சொல்வதேல்லாம் தனி நபர் சீர் திருத்தமே. தனி நபர் சீர் திருத்தம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்..

எனக்குல் ஒரு சத்திய சோதனை எளிமையான சோதனை..நானும் செய்து பார்த்தேன்..

ஒரு வார விடுமுறையில்..

கூட்டம் அதிகமாக சிக்னலில் இல்லை.. சிவப்பு விளக்கு இருந்த போதும் வழக்கம் பொல மக்கள் அதை கடந்து சென்று கொண்டு இருந்தனர்..

நான் செல்ல மாட்டேன்.. விதிகளை மதிப்பேன்..

பின்னால் இருந்து பெரும் சத்தம்.. ஹாரன் கள் கூடவே வசவு வார்த்தைகளும்..

இல்லை நான் போக மாட்டேன்.. பச்சை விளக்கு எரியும் முன்னே போக மாட்டேன்.. இது எனக்கும் என் மன்சாட்சிக்கும் இடையே உள்ள போராட்டம்..

ஒருவர் மிகவும் பொருமை இழந்து என்னிடம் வந்தார்...

உன் வண்டியில் ஏதாச்சும் கோளாரா?

இல்லை
அப்புறம் ஏன் வழியை மறித்து கொண்டு இருக்கே தள்ளி போ

இல்லை பச்சை வரும் முன் நான் போக மாட்டேன்

வார்த்தை தடித்தது.. அவர் என்னை அடிக்க வந்தார்.. ஏன் அரைகுறையாக அடித்தே விட்டார்....

இல்லை நான் போக மாட்டேன்..

இல்லை நான் பச்சை விளக்கு வரும் முன் நான் போகவே மாட்டேன்..

ஒரு வழியாக ப்ச்சை வந்தது.. எதிர் திசையில் இருந்து சிகப்பு விளக்கு எரிந்த போதும் அவசரமாக கடந்து வந்த ஒரு வாகனம்.. என்னை வசவு வார்த்தையில் திட்டு விட்டு சென்றது..

இல்லை என்னால் முடியாது.. நான் நேர்மையை கடை பிடிப்பேன்..

கடை பிடிப்பேன்...

தினமும் அதே செய்கை.. இல்லை நான் தளர விட போவதில்லை..எந்த அநியாமும் உன் மனதுக்கு பட்டதோ அதை எதிர்த்து நில்..

தினமும் எனக்கு பல பிரச்சனைகள்.. இல்லை நான் விட போவதில்லை.. இந்த விதிகளை தினமும் கடைபிடிக்க தொடங்கினேன்
விதிகளை மதிப்பேன்...தினமும் யாரோ ஒருவர் என் குடும்பங்களை இழுத்து திட்டு விட்டு செல்வார்..


டேய் அப்படியே செட்ல கட் அடிச்சு போகலாம்..

இல்லை நான் விதிகளை மதிப்பேன்..

தொடர்சியாக என் மவுன போராட்டம்.. தினமும் நான் வரும் வேளையில் இன்று அந்த சிக்னல் சண்டைகள் இல்லை.. யாரும் விதிகளை மீறுவதில்லை..என்னை திட்டுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.. எனக்கு பல கேல்யான பட்ட பெயர்களுக்கும் வந்தது..ஆனால பல பேர் நிஜமாகவே சாலை விதிகளை கடை பிடிக்க அரமித்தனர்..

இன்று சிக்னலில் என் பின்னால் நிற்க்க்ம் யாரும் என்னிடம் சண்டை பொடுவதில்லை..மாறாக பொறுமையாக நிற்க்கிறார்கள்..என்னிடம் சண்டை போட்டவர்களும் சினேகமாக சிரித்து விட்டு செல்கிறார்கள்..

எனக்கு நம்பிக்கை வந்தது.. கண்டிப்பாக இந்த சமுதாயம் கண்டிப்பாக மாறும்..நமக்கு வேண்டியது பொறுமையும் கூடவே மனம் தளராத போராட்டமும் தான்..

சத்யமேவ ஜயதே