Saturday, April 25, 2009

பயணங்கள் முடிவதில்லை


புனே - பெங்களூர் பயணம்

..மும்பை - நாகர்கோவில் விரைவு வண்டி..
summer holidays நேரம் ..

வேற எந்த வண்டியிலும் டிக்கேட் கிடைக்கவில்லை..




இந்த வண்டி பெங்களூருக்கு கிருஷ்ணராஜபுரத்திலே ஹாய் சொல்லி விட்டு சேலம் பக்கம் சென்று விடும்..

மும்பை தாராவியோ அல்லது மொத்த திருநெல்வேலியே டிரையினுக்குள் புகுந்து விட்டது போல தோன்றியது.,,

இப்படி தான் அவன் பேச ஆரம்பித்தான்..

இன்னும் 10 வருடங்கள் பின் இந்தியா எப்படி இருக்கும்?
ஏன் அதுக்கு என்ன குறைச்சல் நல்லா இன்னமும் 20 கோடி 30 கோடி மக்கள் சுமையை ஏத்திகிட்டு ஹாயாக மும்பை peak hour sub urban train போல போகும்....

அவர்கள் பேசி கொண்டே சென்று விட்டார்கள்...

கூட்டம் எங்கும் பார்க்கினும் ஒரே மக்கள் கூட்டம்....

எதையும் கண்டுக்காம ஒரு பக்கம் ராம பஜனை மறுபக்கம் சீட்டாட்டம்.. கூட்டத்தோடு திருடர்கள்..எங்கேயும் சேராமல் நடுவில் மக்கள்..

அடுத்த ஸ்டேசன் எப்ப வரும் கொஞ்சம் மூச்சு விடலாம் என்று தவிக்கும் மக்கள்..கொஞ்சம் அசந்தால் நம்மை வண்டிக்கு அடியில் தள்ளி விட தவிக்கும் கூட்டம்...


நினைச்சு பார்க்கவே முடியல..

30,000 - இது ஒரு நாளைக்கு வேலை தேடி பீகாரில் இருந்து தில்லிக்கு வந்து சேரும் கூட்டம்..
25,000 இது உபி + பீகாரில் இருந்து மும்பைக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி புதிதாக வந்து சேரும் மக்கள் தொகை...

இவங்க வேலைக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி? தங்க இடம்??
ஏன் சொந்த ஊரை விட்டு பெருநகரை தேடி வருகிறார்கள்??

பீகாரில் தண்ணீருக்கு பஞ்சமில்லை.. ஏன் விளை நிலங்களுக்கும் பஞ்சமில்லை.. ஏன் பீகாரை விட்டு மக்கள் வெளி மாநிலங்களுக்கு படை எடுக்கிறார்கள்???

தில்லியில் கிண்டலுக்காக அடிக்கடி தூ பீகாரி கை க்யா?( நீ என்ன பீகாரியா) என்று சொல்வார்கள்..

புது தில்லியில் இருந்து எதோ ஒரு இடத்துக்கு ஆட்டோவில் சென்றேன்..

ஆட்டோவாலா என்னிடம் மதராஸி சாப்.மீட்டருக்கு மேல போட்டு கொடு என்று சொன்னான்.. நானும் ஏதும் புரியாமல் தூ பீகாரி கை க்யா என்று கேட்டேன்.. ஆட்டோவாலா எதுவும் என்னிடம் பேசவில்லை.. வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்..

பின் சுற்றம் புறம் என எங்கும் விசாரித்ததில் எந்த பீகார் காரனும் தன்னை பீகாரி என்று சொல்லி கொள்ள பெருமை படுவதில்லை என்று தெரிந்தது.. அதற்க்கு காரணம் ஆயிரம் இருக்கலாம்..

இருந்தாலும் ' தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 'என்ற வீர வசனங்கள் ஒலிக்கும் இடத்தில் இருந்து வந்ததால் எனக்கு அவர்கள் செய்கை இன்று வரை பிடிபடவில்லை..

பிரச்சனைகள இல்லாத இடங்களே இல்லை..காவிரி , பாலாறு முல்லை பெரியாறு என தமிழகத்தில் தீர்க்கவே வேண்டாம் எப்போது வேண்டுமானுலும் தூசி தட்டி நாலு பஸ்ஸை எரிக்கலாம் ..உண்ணாவிரதம் இருக்கலாம் தீக்குளிக்கலாம் என்று எப்போதும் கையிருப்பில் இருக்கும் பிரச்சனைகள்..

காவிரி பிரச்சனைக்கு மூல காரணம் - பெருகி வரும் மக்கள் தொகை , உணவு உற்பத்தி அதிகரிக்க கர்நாடகாவில் விளை நிலங்கள் அதிகமாக தண்ணீர் தேவை அதிகரித்தது..

கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் பல வருடமாக சில பேரு ( காவிரி நதி நீர் குடும்பம் ) சில கோடி செலவு செய்தால்...கர்நாடகாவிலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் பிடிப்பு இடங்களிலும் நிறைய மழை பொழிய வைக்கலாம்.. தண்ணீர் பிரச்சனை தீரும் என்று கரடி போல கத்தி கொண்டு வருகிறார்கள்..எவனும் கண்டுகிறதே இல்லை..

பிரச்சனை வந்தால் முத்துகுமார் போல மூளை சலவை செய்யபட்ட முட்டாள்கள் தீக்குளிக்க அதை பார்த்து இன்னும் சில பேர் தீக்குளிக்க.... மேடையில் பெரிசா மைக் போட்டு கத்துவார்கள்.. கன்னட வெறியர்களே ...கர்நாடகாவில் அட்ரஸே இல்லாமல் இருக்கும் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை சூடா பேட்டி எடுத்து ஜீவி விகடன் போடும்.. அப்புறம் கேட்கனுமா?

இங்கே அனைவரையும் அரவணைச்சு மக்களுக்கு நல்லது செயய் தலைவர்கள் இல்லை.. வெறுப்புணர்ச்சியை வைச்சும் மட்டும் அரசியல் செய்யும் ஆட்கள் அதை போலவே மக்களும்..

யாரோ ரெண்டு மலையாளியை பிடிக்கவில்லை என்றவுடன் மலையாளிகளே மோசம் என்று அவர்கள் பரம்பரையை இழுத்து விளையாடும் மக்கள்...

இந்தி பேசுபவர்கள் எல்லாம் வெறியர்கள் என்ற நினைப்பில் தாங்கள் தான் தமிழ் வெறியை முதுகில் சுமக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம்..

மஹாராஷ்டிரா குஜ்ராத்களில் நெடுஞ்சாலைகளில் தார் சாலை போடுவதும் தமிழர்களே..அங்க குப்பை அள்ளறதும் கட்டிட வேலை செய்றதும் தமிழர்களே.

தமிழ்நாட்டில் இருந்து ஏன் கூலி வேலை செய்ய மக்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள் என்ன பிரச்சனை ..தீர்க்க யாருக்கும் நேரம் இல்லை..

இங்க எல்லாம் கூலி வேலை மலையாளியை பார்க்க முடியாது. ..
பிச்சை எடுக்குற மலையாளியை பார்க்க முடியாது பிச்சை எடுக்குற சர்தார்ஜியை பார்க்க முடியாது..

மலையாளி எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் மக்களை மதிக்கிறாங்க அவங்க கலாசாரத்தை கிண்டல் கேலி செய்வதில்லை.. கூடவே அவங்க மொழியையும் கத்துகிறாங்க...எந்த ஊரில் இருந்தாலும் பிரச்சனையில் சிக்காமல் இருக்காங்க..

இப்படி அவர்களிடம் இருந்து கத்து கொள்ள நிறைய இருக்கும் போது ...சாதி சண்டை மொழி சண்டை என்று படித்தவர்களே வெறுப்பு தேடி அலையும் போது ‘தமிழன் என்பதில் என்ன பெருமிதம் வேண்டி கிடைக்கிறது??...

நேற்று பெய்த மழையில்..

ஜனவரி மாதத்துக்கு அப்புறம் பெங்களூரில் மழையே இல்லை..
ஏப்ரல் மாத வெயில் சென்னைக்கு போட்டிக்கு வரியான்னு கேட்கும் நிலை..

நேற்று பெய்த pre monsoon மழை இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமான்னு சவால் விட்டு போச்சு..




















பைக்கை சர்வீஸ்க்கு கொடுத்து இருந்தேன்.. ஆட்டோவில் நகர்வலம்..ம் சான்ஸே இல்லை..ரொம்ப சூப்பரா மழையை enjoy பண்ணினேன்..

****************************************************************************

20 நாளாச்சு ..ஒரு இந்தி படம் கூட ரிலிஸ் ஆகவில்லை.. multiplex காரர்களும் சினிமா தயாரிப்பாளர்களும் நீயா நானா விளையாடுவதால் இந்த கதி..

பெங்களூர் பிவிஆர் ஐனாக்ஸ் இன்னபிற multiplexகளில் அயனும் அப்புறம் தெலுங்கு பில்லா படங்களை வைச்சு ஒப்பேத்திகிட்டு இருக்காங்க..

இங்க கேப்டனுக்கு அடிச்சது லக்கி சான்ஸ்..பிவிஆரில் மரியாதை படம் ரிலிஸ் அதுவும் 4 காட்சிகள் வேற..

இன்னைக்கு forum பக்கம் திரிந்த போது சரி மரியாதை பார்க்கலாம் ,,காமேடியா இருக்கும் டைம் பாஸ் செய்யலாம் என்றால் விதி வலியது.. நாளை வரை அனைத்து காட்சிகளும் advanced booked.:)

எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க...



Wednesday, April 22, 2009

தேர்தல் வியாபாரம்


ஐந்து வருடம் கடந்து இருக்கலாம்..
ரஜினி ஒரு பிரஸ்மீட்டில் பிஜேபிக்கு தான் என் ஆதரவு..பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு நடக்கும் பாலாறும் தேனாறும் ஒன்றாக கலக்கும் என்று சொல்லி விட்டு போனார்.

உடனே முத்தமிழர் அறிஞருக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது. இதோ பார் என்னோட காங்கிரஸ் கூட்டணியில் கூட இப்படி சொல்லி இருங்கான்ஙன்னு ஏதோ ஒரு துண்டு சீட்டை எடுத்து காட்டினார். முரசொலியில் ஜக்குபாய் மக்குபாய் ஆனது.


யாரும் இபபோது மறந்தும் கூட நதி நீர் இணைப்பு பற்றி மூச்சுகூட விடுவதில்லை.
ஏற்கனவே தண்ணியே இல்லாத காவேரியில் இருந்து ராமநாதபுரம் வரை கமிசன் அடிக்க கால்வாய் கட்டுவதில் காட்டும் ஆர்வம் கூட நதி நீர் இணைப்பில் சுத்தமாக தானே கேள்வி நானே பதில்களில் கூட இல்லை. என்ன நதி நீர் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போச்ச்சா?

தேர்தல் நேரத்தில் கூட பிரபாகரன் என் ஸ்கூல் மேட்டு நானும் அவரும் ஒரே பொட்டி கடையில் தான் ஒளிந்து நின்று திருட்டு தம் அடித்தோம் என்ற ரேன்சில் தான் பிராசாரமே நடக்கிறது.



தேர்தல் நேரத்தில் ஒரு பந்த் வேற,, அதுவும் அரசே நடத்தும் பந்த்...ஒரு நாள் வேலைக்கு போகாமல் இருந்தால் முழு நாள் பட்டினி என்ற நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்னும் அரைவாசி மக்கள் இருக்கிறார்கள். இவர்கள வாழ்க்கை நிலையை உயர்த்த யாரும் உண்ணாவிரதம் தீக்குளிப்பு சரி அது கூட வேணாம் டீ கூட குடுக்கறது இல்லை..


தன் வூட்டுக்கு பக்கதுல் சாப்பாட்டுக்கு வழியில்லாம கழ்டபடற மக்களுக்கு ஏதுவும் செய்ய தெரியாத ஆளுங்க எல்லாம் அடுத்த நாட்டுக்கு சவால் உடறதை பார்த்தா சிரிப்பா இருக்கு

நாட்டு மக்களுக்கு என்ன செய்வேன் என்று யாரும் ஏதுவும் சொல்வதாக தெரியவில்லை.. இவங்க பீலிங்க்ஸை எல்லாம் பார்த்தா ஒரு நாளைக்கு பத்து சிவாஜி கணேசன் படம் பார்த்த திருப்தி...



டீவி பொட்டி தரேன் கேஸ் ஸ்ட்வ் தரேன் எலக்சனுக்கு முத நாளு கரன்சியால் அடிக்கிறேன்னு எல்லாம் ஒரே பார்முலாதான்..

இவங்களை திருத்த முடியாது..

ஒரு நல்ல நாட்டுக்கு முக்கிய தேவை நல்ல தலைவர்கள்.
இந்த தேர்தலில் சரத்பாபு, டிராபிக் ராமசாமி போன்ற தன்னலம் இல்லாத தனி நபர்கள் போட்டி இடுவது ஆறுதலாக இருக்கிறது.

இவர்களுக்கு டிபாசிட் கூட கிடைக்க வேண்டாம்.. குறைந்தது 1% வாக்கு வாங்கினால் கூட போதும்.. மாற்றங்கள் ஒரே நாளில் இன்ஸண்ட் காபி போல வந்து விடாது.. நம்மிடம் தான் ஆரம்பிக்க வேண்டும்..
நீங்க சென்னையில் வசிப்பவராக இருந்தால் உங்கள் தொகுதியில் டிராபிக் ராமசாமி அல்லது சரத்பாபு பொட்டி இட்டால் 49ஓ போடும் மூடில் இருந்தால்...இவங்களுக்கு ஓட்டு போட கன்சிடர் செய்யலாமே..

Friday, April 3, 2009

அயன் - விமர்சனம்


ம்.. எத்தனை நாள் ஆச்சு இப்படி புது மாதிரியான கதை தளத்தில் சினிமா பார்த்து...



ப்ளைட் சீசன் டிக்கேட் எடுத்து பறந்து பறந்து கடத்தல் குருவிகள் தான் கதை களம்.. அப்புறம் அடிச்சு தூள் கிளப்பலாம் தானே..





குருவியாக சூர்யா அவரின் பாஸாக பிரபு..அப்புறம் போட்டி தலைவராக ஒரு சேட்..வியாபார சண்டை .. அருமையான 4 பாடல்களுக்கு அழகான தமன்னா..ஆப்பிரிககா சேஸிங்...கடத்தல் ..பழிவாங்கம்.. அம்மா செண்டிமெண் கஸ்ட்ம்ஸ்...

சூர்யா படம் முழுக்க சுறுசுறுப்பாக வருகிறார்..சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம்.. காங்கோ நாட்டு சண்டை காட்சி அபாரம்...

படத்தின் இன்னோரு ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ் ..அருமையான பாடல்கள் சிறப்பான பிண்ணணி இசை...

படத்தின் முதல் பாதி படு வேகம்..... ம் எல்லா புது ஐடியாவையும் போட்டு சூப்பரா எடுத்து இருக்காங்க.. கடத்தல் குருவிகள் உலகம் பேசும் படங்கள் குறைவு என்பதால் ப்ரேஷ்ஷான காட்சிகள்..

அதுவும் கடத்தல்கள் ஒவ்வோன்றும் சாதாரண அப்பாவியான நமக்கு ஜிலீர் ஜிலீர்ங்குது..

கூடவே லைட் காமேடி ..சரி டா நல்ல படம் தான்னு நினைச்சா..
இரண்டாம் பாதி தான்..

செண்டிமெண்ட்..க்ரைம்..எங்க போறதுன்னு தெரியாம சரி இரண்டு பக்கமும் வண்டியோட்ட சூப்பரா கொட்டாவி வருது...
எல்லா ஐடியாவையும் முதல் பாதியிலே மிச்சம் வைக்காம் எடுத்தாசே....

அப்புறம் க்ளைமேக்ஸ் வரும் போது திரும்ப பரபரப்பு..என்ன பண்றது அதுக்கள்ள படம் முடிஞ்சு போச்சே.. இரண்டாம் பாதியில் கத்திரி போட மறந்து போச்சு போல..

விஜய் ’ஒரு புதிய கீதை’ன்னு ஒரு டப்பா படத்துல சூப்பர் டூப்பர் உட்லாலங்கடி அதாவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கேரக்டர் செய்து இருப்பார்.. சம்ம காமடியா இருக்கும்..

இந்த படத்தில் சூர்யாவிற்க்கும் அதே போல கேரக்டர்.. ஆனா சூர்யா சம்ம வெரைட்டி செய்து படத்தை தாங்கி நிறுத்துகிறார்..

அது என்ன டைட்டில் அயன்..படத்தில் சூர்யா அயன் பாக்ஸை தவிர எல்லாத்தையும் கடத்துகிறார்...வுட்டா நம்ம சட்டை பேண்ட்டை கூட கொடியில் இருந்து உருவி கடத்திடுவாங்க போல..

தமன்னா வழக்கம் போல தமிழ் சினிமாவிற்க்கே உரிய இலக்கண அறிவியல் விதிகளை மீறாமல் வருகிறார்..


கடத்தல் பாஸாக பிரபு ..என்ன கொடுமை சார்..கல்யாண் ஜீவல்லர்ஸில் rate card காட்டுபவரா இவரு..


படத்தின் வில்லன் சம்ம வெயிட்தான்..
ஆனா வெயிட்டான கதாப்பாத்திரம் இல்லையே....

ஒவ்வோரு தபாவும் அவரு தோற்க்கும் போது டேய் என்னை perform செய்ய விடுங்கடான்னு அவரு மனசுக்குள்ள கத்தறது போல இருக்கு. ..

சன் டிவி காரங்களுக்கு கொண்டாட்டம்.. டப்பா பாடல்களை வைச்சே ஒப்பேத்தி வந்தவங்களுக்கு சும்மா திருப்பதி லட்டு போல சூப்பர் பாடல்கள்...

படதொகுப்பு..கேமரா எல்லாம் அருமை..அருமையோ அருமை..

ஆண்டனியின் படத்தொகுப்பு வேகம் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது.. கேமராமேன் பிரபுவின் ஆளுமை கனகச்சிதம்

இயக்குநர் கேவி ஆனந்த் திறமை பல இடங்களில் நன்றாக தெரிகிறது.. எழுத்தாளர்கள் ‘சு’’பா’ திரைக்கதையும் அருமை..

இரண்டாம் பாதியை கொஞ்சம் தட்டி சரி செய்து இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்...இப்பவும் மோசம் இல்லை.. சன் டிவியில் விளம்பரம் போடமல் கூட 100 நாள் ஓடும்..

கோடைக்கு ஏத்த சரியான தீனி..

படத்தின் முதல் பாதி..சூர்யா..இசை ..பாடல்கள்..கதை தளம்ன்னு அடிச்சு தூள் கிளப்பி இருக்காங்க... பல நல்ல மேட்டர்களும் இருக்கு..

ஒரு முறை பார்க்கலாம்...நிறைய நேரமும் பணமும் இருந்தால் பல முறை ரசிக்கலாம்...