Friday, July 3, 2009

கொஞ்சம் புலம்பல்...




விகடன்....

இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.

குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..

வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..

அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.

புதுமை என்றால் அது விகடன் தான்

மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..

இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..


விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.


ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.

கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது

பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..

பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??

இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..

வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..

தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...

திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...

அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..

விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.

மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..

இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.

இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??

இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??

இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..


சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...

2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.

அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.


பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..

என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.

இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..


Wednesday, July 1, 2009

கண்டதும் கேட்டதும்


ரொம்பவே பிகு செய்து கொண்டே கடைசியில் மழை துளிகள் பெங்களூர் வாழ் ஊர்வன பறப்பன என பேதம் பார்க்காமல் நனைத்து விட்டு செல்கிறது.



மீண்டும் காவேரி பிரச்சனையை கிளப்பலாமா என்று domain specialists ஹோம் வொர்க் செய்து கொண்டு இருக்கும் போதே மக்களையும் கூடவே பல மனங்களையும் சேறடிக்காமல் வந்து விட்டது பருவ மழை..

காலம் தவறிய பருவ மழையால் நிறைய பாதிப்புகள்.. கர்நாடகா மாநிலத்தில் மின் தடை பிரச்சனை ரொம்ப ரொம்ப அதிகமாகி விட்டது

பெங்களூரில் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..சென்ற வாரம் மைசூர் சென்று இருந்த போது நேரில் அனுபவித்தேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை..

காரணம் மழை இல்லாமல் விவாசாயிகள் பம்ப் செட்டை நாடி செல்வதால் வந்த எதிர் வினை.

கர்நாடகாவில் எந்த அணையிலும் நீர் இல்லை.. நீர் நிலை மின்சார நிலையங்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டன. ...


நல்ல வேளை.. இன்னும் ஒரு வாரம் மழை தவறி இருந்தால்...


*-*

மக்கள் தொகை ,பொருளாதாரம் , வாங்கும் சக்தி வளரும் அளவிற்க்கு நாட்டில் மின்சார உற்பத்தி அதிகரிக்கபடவே இல்லை..

அதிக அளவு மின்சார உற்பத்தியும் ஒரு வகையில் சுற்று சூழல் பாதிப்பு தான் .. பெரிதும் எதிர்பார்க்கபட்ட அனு மின்சார நிலையங்களும் இது வரை பெரிய பூஜ்யம் தான்.

இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிலையங்களிலும் கூடவே மின்சார போக்குவரத்திலும் நடக்கும் முறைகேடுகளை சரி செய்தாலே இன்னும் பல வருடங்களுக்கு புதிதாக எந்த மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்க வேண்டாம்.
-*-

அரசு வேலை ஆசை யாரை விட்டது. தற்காலிக வேலையில் சேரும் போதே பணி நிரந்தரம் ஆக வாய்பில்லை என்று தெரிந்தே சேர்கிறார்கள். ஆனால் வேலை நிறுத்தம் என மிரட்டி நிரந்தரம் ஆக வழி தேடிகிறார்கள்..

வேலை நிரந்தரம் ஆக வேண்டும். பங்குகளை வேறு யாருக்கும் விற்க்க கூடாது, அரசே நட்டட்தையும் தாங்க வேண்டும் ..

தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் பே கமிசன் எல்லாம் வேண்டும். ஆனா மின்சாரம் உற்பத்தி குறைந்தால் மட்டும் பதில் இல்லை..

-*-

பெரிய ஓட்டை விழுந்த பற்றாகுறையை எப்படி சமாளிக்க போகிறரோ நிதி அமைச்சர்.. என்ன கடைசியில் நம் தலையில் தான் சர்வீஸ் டாக்ஸ் வழியாகவே இல்லை வருமான வரியாகவே கடந்து செல்லும்.

கல்விக்காக CESS வரியாக இலவச இணைப்பு ஒட்டி கொண்டே வருகிறது. இது வரை இந்த வரியினால் வந்த வருவாய் பத்து விரல் கொண்டு எண்ண முடியாது. ஆனால் செலவு செய்தது எத்தனை என்றால் யாருக்கும் தெரியவில்லை.

இதை விவாதிக்க வேண்டிய இடங்களில் மக்கள் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. பல தலைவர்கள் லீவு போட்டு ஊர் சுத்த போய் விடுகிறார்கள்.

ஏன் எல்லா எம் பிகளையும் பாராளுமன்றம் தொடங்கும் முன்னர் மொத்தமாக வைத்து இலக்கிய கூட்டம் நடத்த கூடாது?? தமிழ் பிளாக்கில் இருக்கும் சில காமேடி பீஸ்களை அவர்களோடு இலக்கியம் பேச வைத்தால் மிக மிக நன்று..

-*-

முழு மெஜாரிட்டியின் முதல் பயனாக பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வழியாக கிடைத்துள்ளது.


எல்லாம் நல்லதுக்கே என்று வழக்கம் போல கடந்து செல்ல வேண்டியது தான்..

அரிசி பருப்பு மளிகை விலைகள் ஏற்றம் ,மின்சார தொல்லை, மழை இல்லை எல்லாத்துக்கு நடுவே நாமும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறோம்..
-*-