Wednesday, July 1, 2009

கண்டதும் கேட்டதும்


ரொம்பவே பிகு செய்து கொண்டே கடைசியில் மழை துளிகள் பெங்களூர் வாழ் ஊர்வன பறப்பன என பேதம் பார்க்காமல் நனைத்து விட்டு செல்கிறது.



மீண்டும் காவேரி பிரச்சனையை கிளப்பலாமா என்று domain specialists ஹோம் வொர்க் செய்து கொண்டு இருக்கும் போதே மக்களையும் கூடவே பல மனங்களையும் சேறடிக்காமல் வந்து விட்டது பருவ மழை..

காலம் தவறிய பருவ மழையால் நிறைய பாதிப்புகள்.. கர்நாடகா மாநிலத்தில் மின் தடை பிரச்சனை ரொம்ப ரொம்ப அதிகமாகி விட்டது

பெங்களூரில் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..சென்ற வாரம் மைசூர் சென்று இருந்த போது நேரில் அனுபவித்தேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை..

காரணம் மழை இல்லாமல் விவாசாயிகள் பம்ப் செட்டை நாடி செல்வதால் வந்த எதிர் வினை.

கர்நாடகாவில் எந்த அணையிலும் நீர் இல்லை.. நீர் நிலை மின்சார நிலையங்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டன. ...


நல்ல வேளை.. இன்னும் ஒரு வாரம் மழை தவறி இருந்தால்...


*-*

மக்கள் தொகை ,பொருளாதாரம் , வாங்கும் சக்தி வளரும் அளவிற்க்கு நாட்டில் மின்சார உற்பத்தி அதிகரிக்கபடவே இல்லை..

அதிக அளவு மின்சார உற்பத்தியும் ஒரு வகையில் சுற்று சூழல் பாதிப்பு தான் .. பெரிதும் எதிர்பார்க்கபட்ட அனு மின்சார நிலையங்களும் இது வரை பெரிய பூஜ்யம் தான்.

இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிலையங்களிலும் கூடவே மின்சார போக்குவரத்திலும் நடக்கும் முறைகேடுகளை சரி செய்தாலே இன்னும் பல வருடங்களுக்கு புதிதாக எந்த மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்க வேண்டாம்.
-*-

அரசு வேலை ஆசை யாரை விட்டது. தற்காலிக வேலையில் சேரும் போதே பணி நிரந்தரம் ஆக வாய்பில்லை என்று தெரிந்தே சேர்கிறார்கள். ஆனால் வேலை நிறுத்தம் என மிரட்டி நிரந்தரம் ஆக வழி தேடிகிறார்கள்..

வேலை நிரந்தரம் ஆக வேண்டும். பங்குகளை வேறு யாருக்கும் விற்க்க கூடாது, அரசே நட்டட்தையும் தாங்க வேண்டும் ..

தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் பே கமிசன் எல்லாம் வேண்டும். ஆனா மின்சாரம் உற்பத்தி குறைந்தால் மட்டும் பதில் இல்லை..

-*-

பெரிய ஓட்டை விழுந்த பற்றாகுறையை எப்படி சமாளிக்க போகிறரோ நிதி அமைச்சர்.. என்ன கடைசியில் நம் தலையில் தான் சர்வீஸ் டாக்ஸ் வழியாகவே இல்லை வருமான வரியாகவே கடந்து செல்லும்.

கல்விக்காக CESS வரியாக இலவச இணைப்பு ஒட்டி கொண்டே வருகிறது. இது வரை இந்த வரியினால் வந்த வருவாய் பத்து விரல் கொண்டு எண்ண முடியாது. ஆனால் செலவு செய்தது எத்தனை என்றால் யாருக்கும் தெரியவில்லை.

இதை விவாதிக்க வேண்டிய இடங்களில் மக்கள் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. பல தலைவர்கள் லீவு போட்டு ஊர் சுத்த போய் விடுகிறார்கள்.

ஏன் எல்லா எம் பிகளையும் பாராளுமன்றம் தொடங்கும் முன்னர் மொத்தமாக வைத்து இலக்கிய கூட்டம் நடத்த கூடாது?? தமிழ் பிளாக்கில் இருக்கும் சில காமேடி பீஸ்களை அவர்களோடு இலக்கியம் பேச வைத்தால் மிக மிக நன்று..

-*-

முழு மெஜாரிட்டியின் முதல் பயனாக பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வழியாக கிடைத்துள்ளது.


எல்லாம் நல்லதுக்கே என்று வழக்கம் போல கடந்து செல்ல வேண்டியது தான்..

அரிசி பருப்பு மளிகை விலைகள் ஏற்றம் ,மின்சார தொல்லை, மழை இல்லை எல்லாத்துக்கு நடுவே நாமும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறோம்..
-*-

1 comment:

வால்பையன் said...

பல விசயங்களை தொட்டு போயிருக்கிங்க!

புது டெம்ப்ளெட் நல்லாயிருக்கு!