Wednesday, May 21, 2008

சூரிய சக்தி




இன்று தற்செயலாக times of indiaவின் bluishness பக்கங்களை புரட்டி கொண்டு இருந்த போது கண்ணில் பட்ட செய்தி

லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் சூரிய சக்தியால் மின்சாரம் தருவிக்கும் தொழில் நுட்பத்தில் அதிகமாக முதலீடு செய்ய போகிறது

நானும் பல நாள் சிந்தித்து இருக்கிறேன்

தெற்காசியாவில் 365 நாளும் பெரும்பாலான இடங்களில் காற்றும் சூரியனும் மின்சாரம் தருவிக்கும் அளவிற்க்கு இயற்க்கையின் கொடை அமைந்து இருக்கிறது
ஏன் இன்னமும் மரபு சாரா எரிபொருள் சக்தியில் இந்தியா பெரும் ஆர்வம் காட்டவில்லை??

தமிழ்நாட்டின் தென்பகுதியில் பயணம் செய்யும் போது பனை மரங்களுக்கு நடுவே காற்றாலை மின் உற்பத்தி செய்யும் டவர்கள் அமைந்து இருப்பதை காணலாம்
காற்றாலை வழியாக மின்சாரம் உற்பத்தி செய்வது மிக பழமையான கண்டுபிடிப்பு என்றாலும் இங்கு அது பிரபலமானது தனியார் நிறுவனங்கள் வந்த பின்னர் தான்.

suzlon energy போன்ற பன்னநாட்டு நிறுவனங்கள் இது பண்ம் கொழுழிக்கும் துறை என்று கண்டு கொண்ட பின்னர் அவர்கள் ஆதிக்கத்தை படு வேகமாக இந்த துறையில் நிலைநாட்டினர். இன்று தமிழ்நாட்டில் இருக்கும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகளில் அரசுக்கு சொந்தமானது எவ்வளவு என்று கணக்கிட தொடங்கினால் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்,

குறைந்த முதலீட்டில் எந்த வித இயற்க்கைக்கு மாசு விளைவிக்காத திட்டங்களில் அரசின் முதலீடு மிக சொற்பம் தான். தமிழ்நாட்டின் பல தொழிற்சாலைகள் தென் புகுதியில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் கிடைக்கும் மின்சாரைத்தை தமிழக அரசிடம் விற்று தங்கள் தொழிற்சாலைக்கு தேவைபடும் மின்சாரத்தை அரசிடம் இருந்து சலுகை விலையில் பெறுகிறார்கள்.

ஒரு அனு மின் நிலையமோ அல்லது அனல் மின்சார நிலையம் அமைக்கும் போது அந்த இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை கட்டாய குடி பெயர்ச்சி செய்ய வைக்கும் அரசு ,மேலும் அந்த நிலத்துக்காக எண்ண விலை கூட கொடுக்க தயாராக இருக்கும் அரசு ஏன் மரபு சாரா எரி சக்தியில் தன் கவனத்தை செலுத்த மறுப்பது என்பது புரியாத புதிர்.

நிலக்கரி அள்ள நெய்வேலியில் தங்கள் நிலங்களை விட்டு கொடுத்தோர் பல பேர் மேலும் நிலக்கரி அள்ள மேலும் தோண்ட தோண்ட தண்ணீரையும் வெளியேற்றி வருகிறது. இது வருங்காலத்தில் அந்த மாவட்டமே தார் பாலைவனம் போல ஆக போகிறது. மேலும் சுற்று புற மாவட்டங்க்ளின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் கெடுக்க போகிறது.

எந்த வித கெடு வினையும் செய்யாத சூரிய சக்தியினால் மின்சாரம் தயாரித்தால்..

சூரிய சக்தியானால் மிகப் பெரும் மின்சார திட்டங்க்ளினால் தயாரிக்கபடும் ப்ல்லாயிரம் மேகவாட்டுகளை தயாரிக்க முடியாது..

ஒரு முறை லட்ச தீவுகள் ஒரு தீவான அகதீ சென்று இருந்த போது அந்த தீவில் ஒரு இடத்தில் சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் ஓடுகளை பார்த்தேன்.
மழை நாட்களை தவிர மற்ற நாட்களில் அந்த தீவு மக்கள் மின்சாரத்தை சூரிய ஒளியால் தான் பெறுகிறார்கள். மழை நாட்களில் ராட்சத ஜெனரெட்டர்கள் வைத்து டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள்..

இதே முறையை இந்தியா முழுவதும் அறிமுக படுத்தலாம்

சூரிய ஒளி தகடுகள் விலை மிக அதிகம் மேலும் மிக அதிக நிலப்பரப்பை ஆக்கிரமிக்க கூடியது.
இதை சரி செய்ய VLSI எனப்படும் very large scale integration தொழிநுட்பட்த்தை பயன்படுத்த வேண்டும்

மிக அதிக அளவில் ஒரே நேரத்தில் தயார் செய்யபடும் பொருட்கள் விலை குறைவாகவும் காலம் செல்ல செல்ல அளவில் மிக சிறியதாக ஆகி விடும்
உதாரணம் நம் கண்ணியில் உபயோகபடுத்த படும் processor.

இதற்க்கு முதலில் மிக அதிக முதலீடு தேவை

அரசு மனது வைத்தால் முதலீடு செய்தால் பெட்ரோலிய பொருட்களாக்க செலவு செய்யும் அந்நிய செல்வாணி பெருமளவில் குறையும்
பெடரோல் டீசல் விலையை வைத்து ஏறும் விலைவாசி கட்டுபடுத்தபடும்..இது ஒரு நீண்டகால திட்டம்..

அரசு மனது வைத்தால் கண்டிப்பாக வெற்றி அடைய வைக்க முடியும்

வீட்டுக்கு வீடு மாடியில் ஒரு சூரிய ஒளி மின்சார மாற்றி இருந்தால் எப்படி இருக்கும்?? மின்சார கட்டணத்தை பார்த்து பயம் கொள்ள தேவை இல்லை.
இலவச மின்சாரம் கொடுப்பதை விட சூரிய மின்சார மாற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கலாம், மின்சார விரயம் பெருமளவில் குறையும்

மின்சார மாற்றியினால் சார்ஜ் ஏற்றபட்ட பேட்டரியால் ஓடும் வாகனங்கள் செய்யல்லாம்
இதன் காரணமாக பெட்ரோலிய எர்பொருள்க்காக அடுட்த நாடுகளை கை ஏந்தும் நிலை மாறும்

சற்று பெரிய அளவவில் சிந்தித்தால்

வெளிநாட்டுக்காக மின்சார பேட்டரிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாட்டின் நிலை உயரும்.
பேட்டரிகளின் செல்களை சுழற்ச்சி செய்வதால் அதன் விலை உயர்வதையும் கட்டுபாட்டில் வைத்த்து கொள்ள முடியும்

இன்னமும் சொல்லி கொண்டே போகலாம்..

என் இந்த கற்பனைகள் இன்னும் பத்து வருடங்களில் கண்டிப்பாக நிறைவேறும் என்று ஆசைபடும் ஒரு சராசாரி இணந்தியன்


Thursday, May 15, 2008

நாகரீகம்




கடந்த ஒரு மாதமாக என் வீட்டு வாசலில் அதிகாலையில் வீசப்படும் பேப்பர் அடிக்கடி மாயமாகி போனது. பேப்பர் போடும் பையனும் தவற விடுபவன் இல்லை

காலை செய்திகளை படிக்காமல் உச்சா போவதில் இருந்து ஷூவுக்கு சாக்ஸ் தேடுவது வரை பிரச்சனையாகி போனது.

சரி இன்று விட்டு விட கூடாது அந்த களவாளியை கண்டு பிடித்து இந்த மிகப்பெரிய குற்றத்தை துப்பறிய வேண்டும் என்று நேற்று இரவே முடிவு செய்து விட்டேன்

சரி பேப்பர் திருடி அவர்களுக்கு என்னதான் கிடைத்து விட போகிறது
டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற தினசரிகளில் பெஙகளூர் டைம்ஸ் தவிர அனைத்து பக்கங்களும் குப்பை தான். ஜெய்பூர் குண்டு வெடிப்பு புகைபடங்களுக்கு பக்கத்தில் பீரித்தா ஜிந்தா கிரிக்கட் பார்க்கும் புகைபடத்தையும் முதல் பக்கத்தில் போடும் மிகத்தரமான பத்திரிக்கை. ஒரு மாத குப்பையை எடைக்கு போட்டாலும் 20 ரூபாய்க்கு மேல் கிடைக்காது.
அதை வைத்து அரை பாக்கேட் கிங்ஸ் கூட வாங்க முடிவதில்லை.

சரி பார்த்து விடுவோம்..காலையில் 5 மணிக்கு வழக்கமாக அடிக்கும் அலாரத்தை வழக்கம் போல நிறுத்தி விட்டு தூங்காமல் வேட்டைக்கு தயாரானேன். மனசுக்குள் லகக்க லக்க லகக்க லல்ல் என்று மூன்று முறை சொல்லி பார்தது கொண்டேன்.

வீட்டின் வாசல் விளைக்க அனைத்து விட்டு மாடி படியின் பக்க வாட்டில் அரை தூக்கத்தில் சாய்ந்து கொண்டேன்.

இன்னமும் பேப்பர் வரவில்லை.. இல்லை தெரு முனையிலே அந்த கள்வாணி பேப்பர் பையனை மிரட்டி பேப்பரை பிடிங்கி இருப்பானோ இருக்காது அது மாதிரி செய்பவன் என்றால் அதுவும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்பவன் என்றால் நிச்சயமாக பெங்களூர் டைம்ஸ் 3ம் பக்க பார்ட்டி போட்டோககுகளுக்கு கண்டிப்பாக அடிமையாக இருப்பான்..அப்ப நிறைய பார்ட்டிகளுக்கு போவானோ??

வினாடிகள் எண்ணி எண்ணி கடக்கிறது

இதே போல தினமும் காலையில் சுறுசுறுப்பாக எழுந்தால் என்ன எழுந்தால் கண்டிப்பாக எழுந்து இருக்க போவதில்லை.. சரி ஏன் இந்த ரிஸ்க்கு பேப்பர் பையனை பேப்பர் போட சொல்லி நிறுத்தி விட்டு வெளியே கடையில் சென்று வாங்கி கொள்ளாலாமே..

நம்ம ஞாபக மறதி ரொம்ப பிரசித்தம் காலை பேப்பரை மாலை ஆறு மணிக்கு போய் கேட்டால் எங்க கிடைக்கும்

மாடிபடிகளில் தட தட சத்தம்.. பேப்பர் பையன் வந்து விட்டான்.. பேப்பருக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் 360' சுருட்டி கசக்கு வேகமாக வீட்டு வாசலில் எறிந்து விட்டு சென்றான்.. ம் இவனுக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவின் மதிப்பு தெரிந்து இருக்கிறது.

ஆபரேசன் ஆரம்பம்.. எந்த நேரமும் களவாணி வரலாம்..
யோவ் சீக்கிரம் வாய்யா உன் மேட்டரை முடிச்சுட்டு அடுத்தாப்ல ஜிம்முக்கு போவனும், தம் அடிக்கனும், லேட்டா போனா thread mill கிடைக்காது சீக்கிரம் வாய்யா.

மேல் மாடியில் இருந்து இருட்டில் ஒரு உருவம்..பக்கத்து வீட்டு ISRO சார் வீட்டு பேப்பரை அவசர அவசரமாக லவட்டி விட்டு கொண்டு ஓடியது..என் வீட்டு பேப்பரை தொடவே இல்லை...இவனாத்தான் இருக்கணும்..தினமும் சிப்ட் வைத்து வீடு மாத்தி பேப்பரை சுட்டு போறான்..

வேகமாக சென்று அவனை மறித்தேன்
நாக்கு நுனி வரை வந்து விட்ட ஆங்கில கெட்ட வார்த்தை அப்படியே U turn அடித்து
பின் வாங்கி சென்றது

கடந்த ஒரு வருடமாக வெற்றி கரமாக வேலை தேடி வரும் 3ம் மாடி சுதீப் .. அமெரிக்க டாலர் சதியோ அல்லது எந்த இந்திய ரூபாய் சதியோ fresherகளை தற்போது எந்த நிறுவனமும் விரும்புவதில்லை..

யேய் ஏண்றே தும்கோன் யைசா காம் கர்தேகோ? (ஏன் இந்த மாதிரி வேலை பண்றே)
மாப் கரே சார் மேரா பாஸ் ரோஜ் பேப்பர் கரிதினேகேளியே பைசா நிஹி ஹை ( மன்னிச்சுங்க சார் , என்னிகிட்ட தினமும் பேப்பர் வாங்க காசு இல்லை)..without news paper it would be difficult for me to search for jobs..

அச்சா hereafter dont do like this, i will read the paper only after 8. use my news paper and dont forgot post it again before 8.

அப்படியே அவனை விட்டு வந்தேன்..

சரி அவன்கிட்ட காசு இல்லை வேலை தேடறான் அதுக்காக பேப்பர் வேண்டும்.. எல்லாம் சரி தான் இத்தனை நாள் அவன் எல்லார்கிட்டயும் ஆட்டையை போட்டதுக்கு ஏன் நான் அவனை ஒன்னுமே சொல்லலை செய்யலை

ஓ நாகரீகம் decency இதான்ப்பா இந்த நாகரீத்தை எவன் தான் எனக்குள் விதைச்சானோ ..