Monday, June 16, 2008

நானும் என் பெங்களூரும்

ம்.. தம் அடிக்கனும் போல இருக்கு

ஒரு 3.50 கொடுத்து அண்ணே ஒரு கிங்ஸ் பில்டர் கொடுங்க .

தம்பி ஒரு அம்பது பைசா கூட கொடப்பா கிங்ஸ் ரேட்அதிகமாச்சு ஒரு சிகரேட் 4 ரூபா..

பர்ஸில் அம்பது பைசா தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.. 50 பைசாவை தடை செய்து விட்டார்களா இல்லை 5,10,20 பைசாக்களை அதன் அலுமனியத்தற்க்காக மொத்தமாக கைபற்றி உறுக்கி விட்டார்களா??? நடக்காது 50 பைசா சில்வர் ஸ்டீல் காசு.. திருச்சி சென்று வரும் போது அகப்படும் 25,50 பைசாக்களை பெங்காளூரில் தள்ளி விடுவதே பெரும் பாடு,, பெங்களூரில் உகாண்டா ஜாம்பியா ஏன் தான்சானியா நாட்டு காயின்க்ளை கூட தள்ளி விடலாம் ஆனால் 25,50 பைசா காசு என்றால் சார் இது செல்லாது என்று அப்படியே நம் பர்சுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.. இந்திய அரசு இது வரை 25 ,50 பைசாக்களை செல்லாது என்று அறிவிக்கவில்லை .. ( இன்னமும் கூட 10 பைசா 20 பைசாவை கூட செல்லாது என்று சொல்லவில்லை)

சரிங்கண்ணா ஒரு பாக்கேட் கொடுங்க (மொத்தமா ஒரு பாக்கேட் வாங்கினா ரெண்டு நாளைக்கு ஓடும், அப்படியே 2 ரூபா மிச்சபடுத்தலாம் )

ரெண்டு ரூபா சில்லறை இல்லை அதுக்கு இந்தாங்கோ பிடிங்கோ மெண்டாஸ் ( எப்படி தான் நம்பளை குறி வைச்சு ஏமாத்துறாங்க)

*****************************************


பெட்ரோல் விலை உயர போகுதாமே !! மாசம் கணிசமான தொகை பெட்ரோலுக்கே போகுதே..சரி உலகத்தின் பெட்ரோல் தேவையை கருத்தில் கொண்டு நாமும் அதற்க்காக ஒத்துழைப்போம்..

நடந்தே செல்ல கூடிய தூரத்தில் இருக்கு அலுவகத்துக்கு நடந்து சென்றால் என்ன ஆகும்..எப்படி இப்படி தான்..



எண்ண அருண் டயட்ல இருக்கீங்களா? என்ன சார் கார் பஞ்சரா?
அதான் அப்பவே சொன்னேன் சாண்ட்ரோவில் டயர் சரியில்லைன்னு கேட்டிங்களா?
என்ன வீக்கேண்ட் மப்புல வண்டிய ஏதாச்சும் மீடியண்ல மோதிட்டிங்களா?
உடம்புக்கு ஏதும் இல்லையே நடந்து வரீங்களே அதான் கேட்டேன் கவலை படாதீங்க எனக்கு தெரிந்து நல்ல ஒரு insurance ஆள் இருக்கான் . நம்ம ஆளு
சம்ம ப்ளான் எடுத்து கொடுப்பான். மொபைல் நம்பர் தரட்டுமா


சரி நடை வேண்டாம் பைக்கில் போனால் என்ன ஆகும்

என்ன சார் காரை எங்கயாச்சும் குத்திடீங்களா?
நேத்து சேர்ந்தவன் கூட ஹோண்டா சிட்டில வரான் நீங்க என்ண்டன்னா பைக்கில வரீர்ங்க உங்களை யாராச்சும் மதிப்பானா?
அருண் பைக்சாவி கொடு என் கசின் ஊர்ல இருந்து வந்து இருக்காங்க அவங்களை பிக்கப பண்ணிட்டு வந்துடறேன்.. ( அவங்க கியர் மாத்தும் போது என் இத்யம் பல மடங்கு அதிமாகன வேகத்தில் ஓடும்..)


என்ன தான் செய்யிறது??

பெட்ரோல் விலை பெங்களீரில் 53.00 ருபா இதில் சரிபாதி மத்திய மாநில அரசின் வரிகளுக்கு செல்கிறது.. பெங்களூர் மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் இதே நிலை தான்..

பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களில் ஏகப்பட்ட உள் வரி போட்டு அதை ஏகப்பட்ட விலையில் ஏற்றி வைத்து இருக்கும் அரசுக்குகளுக்கு இந்த விலை ஏற்றதை காரணம் காட்டி வரிகளை திரும்ப பெறாது.. காரணம்.. வருமானம்..வருமானம்..

இந்த வருமானங்கள் இலவச டிவியாகவும் இலவச கேஸ் அடுப்பாகவும் மேலும் இலவசம் இலவசமாக போகும் வரை மிஸ்டர் பொது ஜனம் இப்படிதான் மனசாட்சியோடு பேசியே காலத்தை ஓட்ட வேண்டும்..

No comments: