Monday, June 16, 2008

நானும் என் பெங்களூரும் சில கருத்துகள்

ெங்களூரில் ஏதாவது பேருந்தில் கல் எறிந்தாலும் கூடவே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் உடனே எனக்கு என் வீட்டில் இருந்து போன் வரும்..
அருண் என்ன் ஏதாச்சும் பிரச்சனையா எல்லாம் சரிதானே என்று..இவர்கள் போன் செய்து சொன்னபின்பு தான் இங்கு பெங்களூரில் ஏதோ ஒரு இடத்தில் பிரச்சனை என்று எனக்கு தெரிய வரும்

பெங்களூரில் பல வருடங்களாக இருக்கிறேன்.. எனக்கு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதை விட மிகவும் சவுகரியமாக உணர்கிறேன்..

இதை போல மிக சிறிய பிரச்சனைகள் மிக பெரிதாக மீடியாக்கள் மிக மிக பெரிதாக வட்டம் போட்டு அதில் கால் பந்து விளையாட்டே நடத்தி விடுகிறார்கள்.

நேற்று என் அலுவலக நண்பன் என்னிடம் நான் நாளைக்கு அலுவலகம் வரபோவதில்லை என்று சொன்னான்.. என்ன காரணம் என்று கேட்டேன்..
நான் என் நண்பர்களோடு ஊர்வசி தியேட்டரில் தசாவதாரம் படம் பார்க்க முன் பதிவு செய்து இருக்கிறேன் என்று சொன்னான்..

இதை ஒரு தமிழ் பேசும் ஒருவர் சொல்லி இருந்தால் விழயமே இல்லை.. ஆனால் சொன்னது பெங்களூரில் பிறந்து வளரந்த ஒரு கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நண்பர்..

இன்று அலுவலக உணவு இடைவேளையில் நான் தசாவதாரம் படம் போவதை பற்றி மிகவும் கிண்டல் அடித்து கொண்டு இருந்தார்கள்.. நான் ரஜினி ரசிகன் எனக்கு எதிராக வாதடியவர்கள் அனைவரும் கமல் ரசிகர்கள்.. அனைவரும் கன்னடர்கள்..

என்னிடம் பருத்தி வீரன் டிவிடி கிடைத்தால் உடனே கொடு என்று விரும்பி கேட்டு வாங்கி சென்றதும் ஒரு கனண்ட நண்பன் தான்..

இப்படி பொதுவாக கன்னடர்களும் தமிழர்களும் நண்பர்களாக இருக்கும் இடத்தில் பிரச்சனை செய்வது யார்?

வில்லன் இல்லாத படமா?? கன்னட ரக்ஷண வேதா என்ற அமைப்பு.. இந்த அமைப்பு எப்படி பட்டதென்றால் தமிழ்நாட்டில் எந்த வித ஆதரவும் இல்லாமல் வெறும் வன்முறையை மட்டும் செய்யும் சில தமிழ் அமைப்புகளுக்கு இருக்கும் ஆதரவு தான் கர்நாடகத்திலும்..

இது கூட தெரியாமல் கன்னடர்களை வன்முறையர்கள் என்று சொல்லும் சிலரை பார்த்து நான் கேட்க்க நினைத்தது..

ஒரு சிங்கள இயக்கநரை வன்முறையை கையாண்டு அடித்து உதைத்த நீங்கள் ( சீமான் உட்பட) அடுத்தவர் அதே போல வழியகளை கையாண்டால் ஏன் பதற்றம்? ஏன் கூப்பாடு.. நீங்கள் செய்தது தானே.. அதே மொழி வெறி அதே வன்முறை அதை அடுத்தவர் செய்தால் ஏன் கோப்பம் ஏன் போராட்டம்??

கன்னடர்களால் நடத்தபடும் பள்ளி ,,, ஆனால் படிப்பதோ தமிழ் மக்கள் அங்கு அந்த பள்ளியில் நடத்தபடும் பாடஙகளோ தமிழ் நாட்டு அரசின் சட்ட திட்டங்களௌ உட்படித்தி நடை பெறுதிறது..

அந்த பள்ளியை அடித்து வன்முறையை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு.. மாணக்காள் படிக்கும் பள்ளியில் கூட வன்முறையை கையாணட திருமாள்வளவனை மாண்டியாவில் வன்முறை இல்லாமல் கேரோ செய்தது என்ன தவறு??

கன்னடர்கள் நடத்தும் ஓட்டல்கள் என்று இதே மண்ணில் பல வருடங்களாக வாழ்ந்து வந்து மக்களோடு மக்களாக விட்டவர்களை இடத்தை தாக்குவது என்ன நியாயம்??
அப்படியே தமிழர்கள் நடத்தும் ஓட்டல்கள் என்று கர்நாடகாவுக் தாக்கினால் என்ன ஆகும்??

பேருந்தை எரிப்பது .. இது நடந்தது தமிழ்நாட்டின் ஓசூரில்.. இதை எல்லாம் என்ன சொல்வது??? தன் கைகாசில் வாங்கின இந்த வன்முறையர்கள் பொருட்களை ஏதாவெது சேதம் அடைந்தால் உடனே பெரியா ஆளு மாதிரி புகார் கொடுகத்து குடவே சீனும் போடுறீங்களே.. உங்களை எல்லாம்


கன்னட வெறியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்களே... நீங்களும் தமிழ் வெறி பிடித்து தானே வன்முறையில் ஈடுபடுகிறீர்கள் .. நீங்கள் செய்வது மட்டும் சரி அடுத்தவர் செய்வது மட்டும் தவறு என்பது என்ன நியாயம்??

No comments: