Monday, June 16, 2008

காவிரி கரையோரம் ஒரு நாள்

சென்ற வாரம் எங்களின் குடும்ப விவசாய நிலத்தை குத்தகக்கு விட்டவரிடம் பணம் வாங்கி வர சொந்த பூர்விக மண்ணுக்கு சென்று இருந்தேன்..
பல வருடம் கழித்து தஞ்சை தரணிக்கு என் விஜயம்..

தஞ்சை - மன்னார்குடி செல்லும் பாதையில் வடுவூர் தாண்டியவுடன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற தோற்றத்தை சிறு வயதில் பார்த்த ஞாபகம்.. இந்த காட்சியை பார்பதற்க்காவே சிறு வயதில் தஞ்சாவூர் சென்று வரும் போதேல்லாம் அக்கா அண்ணனோடு சண்டை போட்டு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையை பிடித்த ஞாபங்கள்..

ஆனால் எனக்கு இந்த முறை பேர் அதிர்ச்சி..

எங்கும் பொட்டல் காடு.
. சென்றது ஜீன் மாதம் என்றாலும் காவிரியில் இந்த முறை தண்ணீர் சரியான நேரத்தில் திறந்த விட படபோகிறது.. ஜீன் மாதத்தில் கால்வாய் மராமத்து , வால்காய்கள் சீரமைப்பு, நீர் அடைப்புகளை சரி செய்யும் வேலைகள் என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பாக இருக்கும்.

அப்படியே மன்னார்குடி சென்றேன்..

சன்று நேரம் இளைப்பாறி என் பூர்விக கிராமம் சென்றேன்..

வழக்கம் போல குத்தகைகாரர் விளைச்சல் இல்லை அது இல்லை எல்லாம் நழ்டம் என்று சொல்லி சரி கட்ட பார்த்தார்..

சரி என்று அவர் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு அங்கு ஒரு வாடகை சைக்கிளை எடுத்து கொண்டு சற்று ஊற் மேய்ந்தேன்

எங்கும் கால்வாய்க்காள் தூர் வாரபடவில்லை எங்கு பார்த்தாலும் நெய்வேலி காட்டாமண்க்கும் கூடவே பெயர் தெரியாத சில விழ தாவரங்களும் பாசன கால்வாய்க்களை ஆக்க்ரிமித்து இருந்தன,,,,

ஏன் என்று விவரம் கேட்டு தெரிந்ததில் ..

- விவசாய வேலைக்கு யாரும் வர தயாரிலல்லை.. ஒரு நாள் தினக்கூலியான 100 ரூப்பாக்கு பதிலாக வேறு ஏதும் வேலையை மாத்ததில் 15 நாள் செய்து விட்டு பின் மற்ற 15 நால் 2 ரூபாய்க்கு அரிசி வாங்கி வாழ்கிறார்கள்..

சரி விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை எந்திரங்களை உபயோக்கிலாம் என்றால் அதற்க்கும் தடை.. சிவப்பு சட்டைகளின் ஏரியாவான அங்கு விவசாய வேலைக்கு எந்திரம் என்றால் அடித்து பார்சல் செய்து அனுப்புவார்கள்

கூடவே சிங்கப்பூர் மலேசியாவிற்க்கு தங்களின் சொத்துகளை விற்று செல்லும் கூட்டம் வேறு

இத்தனை பிரச்சனையும் வைத்து கொண்டு வருகிற தண்ணீரை வைத்து ஒழுங்காக விவசாயம் செய்யாத நிலை :(
மழை காலங்களில் வெள்ளத்துக்கு காரணம் கால்வாய்கள் தூர் வாரமை..

இத்தனை ஓட்டைகளை நமக்குள்ளே வைத்து கொண்டு கர்நாடகா தண்ணி தரலே அதான் பஞ்சம் என்று சொல்லி ஜல்லி அடிபப்த்தை என்ன சொல்வது??

No comments: