நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Saturday, August 15, 2009
கண்டதும் கேட்டதும் - 15 08 2009
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஒரு மாசமா ஏகப்பட்ட புது படங்கள் பார்த்து பைத்தியம் பிடிக்காத்து தான் மிச்சம்.
love aaj kal என்ற இந்தி படம்.. இந்த படத்தை எடுத்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைச்சா..
இப்ப வர இந்திபடங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பவே torture பண்றாங்க.. ஏதோ பீகார் ஹரியானா உபி மக்கள் எல்லாம் லண்டன் நீயூயார்க்க்கு மொத்தமா shift ஆகிட்டாங்களா?? எல்லா பட கதையில் நேரடியா லண்டன் பாரீஸ் இப்படிதான் ஆரம்பிக்குது..
இந்த வரிசையில் வந்த New york Love Aaj Kal என்று இரண்டு குப்பை படங்கள் .. இதில் Love Aaj Kal படத்தில் என்ன தான் சொல்லவராங்கன்னு ஒரு மண்ணும் புரியலை.. எப்படிதான் கலாசார காவல்கார சிவசேனா ஆர் எஸ் எஸ் கேங்க் ஆட்கள் இந்த படத்தை விட்டு வைச்சாங்களோ..
தமிழ் படங்கள் சற்றும் சளைத்தவை இல்லை..
சென்ற மாதத்தில் பார்த்த அபத்தங்கள்
சிந்தனை செய், வாமணன், மோதி விளையாடு ..
பல அபத்தங்களுக்கு மத்தியில் சரி புழைச்சு போன்னு வந்த படம் அச்சமுண்டு அச்சமுண்டு.. இந்த படமும் 1.30 மணி நேரம் என்றால் தப்பித்தேன்..
வழக்கமான தமிழ்பட விதியான 2 : 30 மணி நேர படம் என்றால் நினைச்சு பார்க்கவே முடியலை..
வாழ்க்கையில் பொறுமை போதும் அளவு கற்று கொண்டேன்.. விடுஙகடா சாமி ..
************************************************************************
பெங்களூரில் சென்ற வாரம் திறக்கபட்ட திருவள்ளுவர் இன்னமும் incubationல் தான் இருக்கிறார். எப்போதும் காவலுக்கு போலிஸ் மேலும் இலவச இணைப்பாக வீடியோ காமேராக்கள் கண்காணிப்போடு ரொம்ப பத்திரமாக இருக்கிறார்.
இதை பார்த்து எனக்கு திருச்சி திருவரங்கம் பெரியார் சிலை தான் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இன்னமும் திருவரங்கம் பெரியார் அதிரடி படை காவலோடு தான் காட்சி தருகிறார்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும் பலத்த பாதுகாப்போடு தான் எழுந்து அருளி வருகிறார்கள்..
பேசாமல் காவல்துறையில் சிலை பாத்துகாப்பு துறை என தனியாக ஆரம்பித்து விடலாம்..
சிலைகள் திறப்பதால் என்ன நண்மை என நான் அறியேன் ஆனா வெட்டி வம்பு பார்டிகளுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.. வாழ்க வளர்க
******************************************************************************
எப்போதும் தமிழனுக்கு தான் பேசும் மொழி தொடர்பான அரசியல் ஆர்வம் அதிகம் உண்டு. கன்னடர்களுக்கு திருவள்ளுவர் வாழ்க்கை தமிழ் இலக்கியம் என சுய தம்பட்டம் அடிக்கும் பல ஆட்களை தினமும் காண்கிறேன்..
கூடவே கொசுறாக கல் தோன்றா மண் தோன்றா போன்ற பொன் மொழிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றி தமிழ் பெருமையை நிலை நாட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர்.
என்னவோ தெரியலை தமிழ் செல்வன் தமிழ் செல்வி போல இது வரை நான் கன்னட செல்வனோ தெலுங்கு செல்வியோ பெயர்களை கேள்வி பட்டதே இல்லை.. பேர் வைச்சுகிறது சொந்த விஷயம் ..சரி அதவிடுங்க.. இந்த கல் தோன்றா மண் தோன்றா தான் ரொம்பவே லாஜிக் இடிபடும் செய்தி.. யாராச்சும் இதற்க்கு விளக்கம் சொல்வீற்களா??
**************************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒரு மாசமா காணோமேன்னு பார்த்தேன்!
Post a Comment