Sunday, June 21, 2009

சமீபத்தில் பார்த்த படங்கள்


எனக்கு தெரிந்து பல பேருக்கு கன்னட சினிமா என்றாலே ராஜ்குமார் + sons ஞாபகம் தான் வரும்.

தமிழ் சினிமாவிற்க்கு கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் ( புலம் பெயர்ந்த் இலங்கை தமிழர்கள்) கன்னட சினிமாவிற்க்கு கிடைப்பதில்லை. அதனால் தானோ என்னவோ கன்னட சினிமாவில் வரும் பல நல்ல படங்கள் கர்நாடாவை விட்டு வெளியே தெரிவதில்லை..

கன்னட சினிமாவில் மேடை நாடகங்கள் இலக்கியம் நல்ல சினிமா என்று தனியே ஒரு குழு இயங்கி கொண்டு இருக்கிறது. மசாலா படங்களுக்கு நடுவே பல குறிஞ்சி மலர்கள் அடிக்கடி பூக்கும்.

மறைந்த சங்கர் இவர் மட்டும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால் தென் இந்திய சினிமாவில் கன்னடாவின் கொடி இன்னும் உயரே பறந்து இருக்கும்..

கிரீஷ் கர்னாட், அதுல் குல்கர்னி , சரத், ஆஷிஷ் வித்யார்த்தி என மசாலா படங்களில் வில்லனாக மிரட்டுபவர்கள் பல மான மேடை நாடக பிண்ண்னி கொண்டவர்கள். இன்னமும் தங்களின் மனதிருப்திக்காக நாடங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் 2007ல் வெளியான படம் ..அவ்வப்போது பெங்களூரில் நடந்த பழையை சம்பவங்களை அழகான திரைகதையோடு படமாகவும் எடுப்பார்கள்.

ஆ தினகளு ..( அந்த நாட்கள் )

இரண்டு தாதாக்களுக்கு இடையே 1986ல் சிக்கி தவித்த பெங்களூரு + அந்த தாதாக்களின் உலகம் + அந்த பிரச்சனையில் மாட்டி தவிவிக்கும் ஒரு காதல் ஜோடி ...இவர்களின் பிரச்சனையை பேசும் படம்.. இது 1986ல் பெங்களூரில் நடந்த கதை..படத்தின் திரைகதையை எழுதியது அக்னி ஸ்ரீதர். இவரின் பாத்திரமும் படத்தில் அங்கம்..

கோத்வால் ராமசந்திரா Vs ஜெயராஜ் ..ஒருவரை ஒருவர் அழிக்க துடிக்கும் தாதாக்கள்....
86 மார்ச் மாதம் கோத்வால் கொல்லபடுகிறார்..

கொலையாளிகள் ஒருவர் சேத்தன். வசதிக்கு எந்த வித குறைவும் இல்லாமல் சமூகத்தை பற்றி எதையும் கவலைபடாத சேத்தன் ஏன் எப்படி எதற்க்காக underworld ஆட்களிடம் போய் சேருகிறார் என்பதை அழகாக சொல்கிறார்கள்.

வன்முறையை பேசும் படம் தான் ஆனால் படத்தில் வன்முறை வாசனையே சுத்தமாக இல்லை.கத்தியில் நடக்கும் வித்தை அநாயசமாக செய்கிறார்கள்.

தாதக்களின் வாழ்க்கை யாரையும் நம்ப முடியாத அவர்களின் மன நிலை அவர்களின் குடும்பம் நட்பு என பல பக்கங்களை புரட்டுகிறார்கள். ஒரு காலத்தில் pensioners paradise ஆக இருந்த பெங்களூரின் வனப்பை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

இசை இளையராஜா -- சான்ஸே இல்லை பிண்ணணி இசை படத்துக்கு மிக பெரிய பலம்..பிண்ணனி இசை என்றால் என்ன என்பதை இந்த படத்தை பார்த்து தான் கத்து கொள்ள வேண்டும்.. அப்புறம் இரண்டு குட்டி குட்டி பாடல்கள்.. இளையராஜாவின் 80 இசை மீண்டும் ஒலிக்கிறது..

http://www.youtube.com/watch?v=nnLvKpYIyPo



இயக்கம் - சைதன்யா , கிரீஷ் கர்னாட்..

இந்த படமும் சுப்ரமணியபுரமும் கதைகளும் 80களில் நடந்த வன்முறைகளை தான் பேசுகிறது. சுப்ரமணியபுரம் படத்தை எப்போது பார்த்தாலும் இரைச்சலான பிண்ணணி இசையும் வன்முறையும் படம் முடிந்த பின் மனதை ஆக்கிரமிக்கும் வன்முறை சார்ந்த பயமும் தான் தெரிகிறது. ஆனால் இந்த படம் அதற்க்கு நேர்மாறாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.

இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பாருங்க..

பசங்க

எனக்கு விக்கிரமன் படங்கள் ரொம்ப பிடிக்கும்..அவரு படத்தில் கெட்டவங்களே யாரும் இருக்க மாட்டாங்க.. எல்லாருமே லா லா லா இசை ஒலிக்க வரும் நல்லவங்க தான். அவர் படத்தில் தெரியும் ஒரு positive energy , மிதமான நகைச்சுவை ஞாயிறுகளில் மதிய நேரங்களில் எந்த வேலையும் இருந்தால் நிம்மதியாக பார்க்கலாம்.


என்னவோ தெரியலை இந்த படத்தின் இறுதியில் இயக்குநர் பெயர் திரையில் தெரிந்த போது என்னையும் அறியாமல் கை தட்டினேன். பல காரணங்கள் இருக்கல்லாம்..நானும் சிறுவனாக இருந்த போது இதே போல் செய்த சேட்டைகளை மீண்டும் பார்த்த காரணமோ இல்லை படம் முழுதும் அட்வைஸ் என தெரியாமல் அழகாக positive செய்திகளை சொன்னதோ..

எதுவாக இருந்தாலும் தமிழில் வந்த படங்களில் இந்த படம் மிக மிக முக்கியமான படம்.

சிறுவர்களின் உலகம் இது வரை தமிழ் படங்களில் ரொம்ப பேசபடாத ஏரியா..மிக மிக அழகாக படம் எடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி இயக்குநர் பாண்டிராஜுக்கு பின் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும்.

படத்தில் என்னை உறுத்தியது ஒரே விஷயம் தான்..படத்தில் ஒரு காட்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது.. தியேட்டரில் அங்கங்கே சில பேர் எழுந்து நிற்க்கிறார்கள்.. கையில் வைத்து இருக்கும் பாப் கார்ன் கீழே விழுந்து விடுமோ என்ற பயத்த்தில் சில பேரும் சொரணையே இல்லாமல் சிலரும் பேர் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்..யாரையும் குற்றம் சொல்ல முடியாது. தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலுமே கேட்டு பழகி போன நமக்கு இப்படி தடாலடியாக வரும் தெரிந்து இருக்க வாய்பில்லை.. தேசிய கீதத்தை இப்படி படத்தில் காட்சியாக வைப்பதை தவிர்க்கலாமே..

4 comments:

RV said...

Is Anant Nag no more? I thought his brother Shankar Nag is the one who had passed away...

Arun Kumar said...

Dear RV.
thanks for pointing out the mistake. i have corrected it .

butterfly Surya said...

Nice review Arun.

cheers

Cable சங்கர் said...

அந்த கன்னட பட டிவிடி கிடைக்குமா..?