Monday, November 17, 2008

ஆனந்த தாண்டவம் - பாடல்கள் எப்படி??



ஆனந்த தாண்டவம் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின்பிரிவோம் சந்திப்போம்” தொடரை தழுவி வரும் படம். நண்பன் அறையில் இருந்து புக்கை சுட்டு கொண்டு வந்து பல இரவுகள் விடாமல் படித்த புத்தகம்..

சேவல் படத்திற்க்கு பின் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படம்.
இந்த முறை படத்தின் பாடல்களை வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.

பட்டாம்பூச்சி

புல்லாங்குழலும் கீபோர்டும் கலந்து கட்டி அழகாக பாடல் தொடங்குகிறது. சாக்சபோன் தபலா என்ற பாடலின் ஒலி சேர்க்கை அருமையாக இருக்கிறது. பாடலில் மேற்கு இசையும் கூடவே இந்துஸ்தானி இசையும் அருமையாக கலந்து ஒலிக்கிறது. வைரமுத்து பாடல் வரிகள் மேலும் பாடலுக்கு அழகு,/


கல்லில் ஆடும் தீவே.

புல்லாங்குழலின் இசையோடு தொடங்குகிறது. மெலடி பாடல் என்று எதிர்பார்த்தால் பீட் ஏறி கொண்டே போகிறது. அமெரிக்க பிண்ணணியில் வரும் பாடல் போல...கிடார், டிரம்ஸ் நல்ல நேர்க்கை.. வைரமுத்து வின் பாடல் வரிகள் அருமை. “ நான் என்றால் தனிமை நீ என்றால் வெறுமை நாம் இருவரும் சேர்ந்தால் இனிமை.”. இன்னும் பல முறை கேட்டால் தான் பாடலின் முழுவதும் புரியும் ..!!

பூவினை திறந்து கொண்டு

எலக்டிக் கிடார் வயலின் இசையோடு மிக அழகாக தொடங்கும் மெலடி...மிகவும் அழகான மென்மையான பாடல்.. மெலடிக்கான இசையில் இரைச்சல் சற்று அதிகமாக இருக்கிறதோ..ஸ்ரேயா கோஷல் , சீனிவாஸ் இருவரின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

மேகம் போல

சங்கர் மகாதேவனின் குரலில் சோகமான பாடல். புல்லாங்குழல், கிடார், டிரம்ஸை வைத்து அழகாக பிரகாழ் விளையாடி இருக்கிறார். வைரமுத்துவின் பாடல் வரிகளும் அருமை. சங்கர் மகாதேவன் வரிகளை சிதைக்காமல் நன்றாக பாடி இருக்கிறார் அவருக்கே உரித்தான ஹை பிச்சில்

கணா காண்கிறேன்

பாடல் ஆரம்பத்தில் எங்கேயோ கேட்டது போல தோன்றியது. இவரின் மாமா ரஹ்மான் இசை அமைட்த்த ஸ்டார் படத்தில் இருந்து அப்படியே ட்யூனை உருவி இருக்கிறார்.

தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடி கிடந்தோம்

பாடல் வேறு விதத்தில் வேறு பிண்ணியில் மீண்டும் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் பாடல கேட்க்க நன்றாக தான் இருக்கிறது,

ஜீ.வி.பிரகாஷ்குமார் வெயில் படத்திற்க்கு பின் இதுவரை வந்த படங்கள் கை கொடுக்கவில்லை. ஆனந்த தாண்டம் பட்த்தின் பாடல்கள் வித்யாசமாகவே இருக்கிறது. மீண்டும் கேட்க்க கேட்க்க நன்றாக இருக்கிறது. ம் படத்தில் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்...

2 comments:

வால்பையன் said...

சுஜாதாவின் கதையை சொதப்பாமல் இருந்தால் சரி,
பாட்டு அப்படி ஒன்னும் சிறப்பில்லைன்னு ந்ண்பன் சொன்னானே!
இறக்கி கேட்டுடுட வேண்டியது தான்.

ச.பிரேம்குமார் said...

ஆவலை தூண்டிட்டீங்க அருண். சீக்கிரமே கேக்கனும்