Sunday, July 27, 2008

எனக்கு நானே :)

சென்ற வாரம் எனது அக்கா வீட்டிற்க்கு தொலைபேசிய போது அழுவாத குறை தான். ஹைதராபாத்தில் தினமும் 6 மணி நேரம் மின் தொடர்பு கிடையாது. கண்டிப்பான மின்வெட்டு தலைநகரத்தில் இருக்கும் போது மற்ற இடஙளின் கதி இதை விட படு மோசமாக இருக்கும். எனது 10 வயதுஅக்கா பையன் என்னிடம் கேட்ட கேள்வி..” மாமா அதான் நீக்கிளியர் ஒப்பந்தம் வந்தா எங்களுக்கு கரண்ட் கட் வராதா”??

இப்படி தான் நாட்டில் பல பேர் சிந்திக்கின்றனர்...
இந்த ஒப்பந்தம் இனி வரபோகும் நாட்களில் மின்சார தட்டுபாட்டை பெருமளவில் குறைக்க உதவும் திட்டமே !!

நம் நாட்டின் பெரும்பாலான மின் சக்தி அனல் மின்சாரத்தின் மூலம் கிடைக்கிறது. நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கபடும் அனல் சக்தியே மின்சாரமாக மாற்றபடுகிறது. இதுவே பெரும்பாலான நமது மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது.

அதை தொடர்ந்து அணுக்களை பிளப்பதாலும் நீர் மின் நிலையங்களும் தான் ..

இந்த வருடம் பருவ மழை பொய்த்தால் நீர் மின் நிலையங்களுக்கு ஒய்வு அதை தொடர்ந்து அதனால் ஏற்பட்ட பற்றாகுறை.. பருவ காற்றின் போக்கு மாறியதால் காற்றாலை மின்சாரமும் எதிர்பார்க்கபட்ட அளவு தயாரிக்க முடியவில்லை..

அனு மின் நிலையங்களுக்கு யுரேனியம் பற்றாகுறை..ஏற்கனவே எரிபொருள் பற்றாகுறையால் கல்பாக்கத்தில் இரு உலைகள் செய்லபடாமல் இருப்பதாக படித்தேன். நேரம் கிடைத்தால் இந்த திட்டம் தொடர்பாக நிறைய எழுத வேண்டும் என்றே நினைக்கிறேன் ..

நீர் மின் நிலையஙளும் காற்றாலை மின்சாரமும் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மிகவும் குறைவான செலவில் தயாரிக்கபடுகின்றன.. ஆனால் இது பருவ நிலையை ஒட்டியே ஆக்கமும் இருக்கும்.

சூரிய ஒளியை பயன்படித்தி எடுக்கபடும் மின்சாரம் இன்னமும் மக்கள் பயன்பாட்ட்க்கு வரவில்லை.. அதன் மூலம் எடுக்கபடும் மின்சாரம் விலை அதிகமாக தற்போது இருக்கிறது.. அதிக பயன்பாட்டு பின் அதிக இடங்களில் தொடர்சியான அதிக அளவிலான தயாரிப்பின் மூலம் சூரிய மின் சக்தியை மிக குறைந்த விலைக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்க்கு போகும் தூரம் மிக அதிகம்..இது வரை இந்திய அரசின் சார்பில் எந்த நிறுவனமும் சூரிய மின்சாரத்துக்கு அதிகமாக பணம் செலவழிக்கவில்லை.. எல் & டி நிறுவனமும் பின் ஆதித்யா பிர்லா நிறுவனமும் தற்போது பெரும் அளவில் இதில் முதலீடு செய்து வருகின்றன.. வருங்காலம் சூரிய சக்திக்கான ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை..

சூரிய ஒளியே என்றும் நிரந்தரம்..

**************

மன்மோகன் அரசு தப்பி பிழைத்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. குதிரை பேரம் 400 கோடி 500 கோடி என்று எல்லாம் படிக்கும் போது நகைசுவையாக இருந்தது.. 8000 கோடி செலவில் தேர்தல் என்று நடத்தும் செலவிற்க்கு இது எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது

மன்மோகன் சிங் தற்போதைய செயலை பார்த்தால் பாட்சா ஞாபகம் வருகிறது.. மாணிக்கமாக இருந்த இவர் தற்போது பாட்சாவாக மாறி இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

இவரை போன்ற ஒரு பிரதம மந்திரியை இந்திய நாட்டில் இது வரை கண்டது இல்லை. இந்தியா ஒரு மூண்றாம் தரமக்கள் வாழும் நாடு என்ற மற்ற தேசங்களின் பார்வையை இவர் தன் ஆட்சியின் சில வருடங்களில் மாற்றி விட்டார்.. இவரை சூப்பர் மேன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை..

இவர் ஆட்சியில் த்வறுகள் இருக்கலாம்.. ஆனால் தவறுகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கையில் சுவராசியமே இருக்காது..

இந்த நம்பிக்கை ஓட்டு எடுப்பில் என்னை கவர்ந்தவர்கள் மற்ற இருவர்

ஒருவர்
கலைஞர் மற்றவர் லாலு

பொதுவாக இதை போல ஓட்டு எடுப்புகள் தான் அரசியல்வாதிகளின் வாழ்க்கான ஜாக்பாட்.. இந்த இருவரும் எந்த வித பேரங்களும் செவி கொடுக்காமல் எந்த பேரங்களில் ஈடுபடாமல் ஆட்சியை காப்பாற்றி கொடுத்தார்கள்.

லாலு கூட பாரளுமன்ற கூட்டத்தில் வழக்கம் போல பேசி விட்டு சென்றார்.. ஆனால் கலைஞர் இன்று வரை அடக்கம் காப்பது பெருமைகுரியது..

அன்றே இந்திரா சொன்னார்

எதிர்பதாலும் ஆதரிப்பதாலும் கலைஞர் போல உறுதியாக எவரையும் காண இயலாது

உண்மைதான்.. ..

***********

வர வர ஞானி எழுத்துகளை படித்தால் என்ன இந்த மனுசன் இப்படி சின்ன புள்ள தனமா இருக்காருன்னு தான் தோனுது..

அவரிடன் எந்த சரக்கும் இல்லை.. சும்மா வார வாரம் கலைஞர் அப்துல் கலாம்ன்னு சகட்டு மேனிக்கு குறை சொல்வதை விட இவர் பெரிசா ஓ போட்ட மாதிரி தெரியலை..

இவருக்கு பரபரப்பு ஆசை பெரிய ஆளுங்களை தாக்கினா விளபரம் கிடைக்கும் என்ற ஆசை தான் நிலவுது என்பது என் எண்ணம்..

அப்துல் கலாம் போன்ற ஆட்களை எல்லாம் இவர் தாக்கும் போது அய்யோ சாமி இப்படி காசு கொடுத்து மன உளைச்சலை வாங்கி கொள்ள வேண்டுமா என்று தான் தோன்றுகிறது.. ஒரே வித்யாசம் அன்று விகடன் இன்று குமுதம்..

அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்க்கு ஒரு முறை சென்று இருக்கிறேன்.. ராமேஸ்வரம்.. தெரு கவுன்சலிராக ஆனாலெ இன்று பந்தா விடும் ஆட்களுக்கு மத்தியில் இன்று வரை பழைய அதே தார் ஓடு போட்ட வீட்டில் இருக்கும் அவர்களின் உறவினர்களையும் ... தனக்காக எந்த வித சொத்தும் இல்லாமால் ஏன் குடும்பம் கூட இல்லாமல் நாட்டிறாக உழைக்கும் அப்துல் கலாமை விமர்சிப்பவர்களை ஏன் பொடா தடாவில் போட கூடாது??

**************

No comments: