Wednesday, July 30, 2008

எனக்கு நானே - 30.07.2008



குசேலன் பட பாடல்கள் அவ்வளவாக என் மனதில் பதியவில்லை.

பேரின்ப பேச்சுகாரன் பாடலை தவிர வேறு எந்த பாடலும் அடிக்கடி கேட்க தோன்றவில்லை.. ஜீ வி பிரகாழ் குமார் மிகவும் திறமையான இசை அமைப்பாளர்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் தான்.. திரைபடத்தில் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்போம்..

**************

ஜேம்ஸ் வசந்தன்.. சன் டிவியின் ஆரம்ப ஏணிகளில் ஒருவர்.. அழகாக டிரிம் செய்ய பட்ட மீசையில் ஒழுங்கான தமிழ் பேசி பலர் மனதை கவர்ந்தவர்.. அவர் இசையில் கூட இப்படி அதிரடியாக வரவு கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..


மின நீண்ட நாட்களுக்கு பின் பார்வைக்கும் செவிக்களுக்கும் நிறைவு அளிக்கும் ஒரு அழகான மெலோடி “கண்கள் இரண்டால்” பாடல்..

சுப்ரமணியபுரம் படத்தின் எந்த பாடலும் சோடை போகவில்லை...
பன் முக தன்மை கொண்ட அவரின் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள்..நல்ல இசையை கொடுத்தற்க்கு என் நன்றிகள்

****************


ஏ ஆர் ரகுமான் நான் தமிழ் சினிமாவை விட்டு இன்னமும் போகவில்லை.. நான் இன்னமும் டாப் தான் என்று ஆணி தரமாக சொல்லி இருக்கும் படம் தான் “ சக்கரகட்டி”

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை.. ரகுமான் பல புதிய இசைகளை நம் செவிக்கு கொடுத்து இருக்கிறார்..

ரகுமான் பாடல்கள் இரு விதம்...

கேட்ட கணமே மிகவும் பிடித்து போகும்..பொதுவாக ரகுமான் + சங்கர் கூட்டணியில் வந்த பாடல்கள் இதில் சேரும்

சில முறை கேட்ட பின் அந்த இசையில் பிணைந்து இருக்கும் சில பல இசை அதிசயங்கள் தொடர்சியாக வெளி வர மழை காலத்தில் சிங்கள் டீ அடித்து கொண்டே மேலும் மேலும் ரசிக்க அந்த இசையின் பல புதிய பரிணாமங்களை தெரிந்து கொள்ள முடியும்... சக்கரகட்டி இந்த ரகம்..
********************

இரு முறை சத்யம் பாடலை கேட்டேன்... அவசர கதியில் ஸ்டோக் ஹோம் ஏர்போர்டிலும் அடுத்த முறை பெங்களூர் ஏர்போர்டில் இருந்து வீட்டிற்க்கு வரும் வரை,,,இன்னமும் சில முறை கேட்டால் தான் அது தொடர்பாக பேச முடியும் என்ற நிலை..
*************

No comments: