Thursday, May 7, 2009

புதிய வானம் புதிய பூமி


போன வார கடைசியில் லட்டு மாதிரி மூணு நாளு லீவு வுட்டாங்களா என்னா பண்றது ஏது பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டு இருந்தேன்..பெங்களூர் ஊரே காய்சல் வந்து காலியானது போல இருக்கும்..சரி பசங்களோட வயநாடு போகலாமன்னு முடிவு செய்து வெற்றிகரமாக போய் வந்தாச்சு.



வய நாடு - வயல் நாடு என்பது வய நாடாக மருவியது.. கர்நாடாகா கேரளா எல்லையில் இருக்கும் அழகான கேரள மாவட்டம். மேற்க்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடு , தேயிலை தோட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலைக்கே சிகரம் என இந்த இடத்தை சொல்லாம்.

ஊட்டி கொடைக்கானல் அளவிற்க்கு கோடையில் வெயில் தெரியாத அளவிற்க்கு இங்கு தட்ப வெட்பம் இருப்பதில்லை.. இருந்தாலும் பரவாயில்லை...40 ‘யில் காய்வதற்க்கும் 30’ யில் காய்வதற்க்கும் வித்யாசம் இருக்குல்லே..

ஜின் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நல்ல சீதோஷ்ணமாம் நாங்க போனது மே மாதத்தில் ம்ம் பரவாயில்லை..



எப்படி போகலாம்

மைசூரில் இருந்து 120 கிலோ மீட்டர்.. அல்லது கோழி கோட்டில் இருந்து 60 கிலோ மீட்டர்

என்னதான் பார்க்கலாம்



தேயிலை தோட்டங்கள், பானாசுரா தோட்டம், செம்ப்ரா peak, எடக்கல் குகை,சூச்சிபுறா அருவி, முத்தங்கா சரணாலயம்,பூக்கோடல் ஏரி, லக்கடி அருவி ( இங்கு தான் காவிரியின் கிளை நதியான கபிணி உருவாகிறது)..இப்படி சொல்லிகிட்டே போகலாம்


முன் ஒரு காலத்தில் வீரப்பனின் ஏரியாவ இருந்த பாந்திப்பூர் பக்கம் தான்.. சர்வ சாதரணமாக வீரப்பனிடம் தப்பி பிழைத்த யானைகளை பார்க்கலாம்..

என்ன செல்வாகும்..

இங்கு இருக்கும் ரிசார்ட்டுகள் நம் பர்ஸை பதம் பார்க்கும் அளவிற்க்கும் இன்னமும் வளரவில்லை. இதனால் தைரியமாக போகலாம்..அப்படியே மறந்தும் சேட்டா ரிசார்ட் ரேட் ரொம்ப ரொம்ப குறைவுன்னு சொல்ல வேண்டாம்..

தமிழ்நாடு எல்லையும் அங்க்கே தட்டு படுவதால் சரளமாக அனைவரும் தமிழ் பேசுகிறார்கள்.. மலையாளத்தில் சம்சாரிக்கிறார்கள் கன்னடாவில் மாத்தாடுகிறார்கள்.. so no problem..

south india என்பதால் சாப்பட்டு பிரச்சனையும் இல்லை..



புதுசா கல்யாணம் ஆணவங்க தேனிலவு செல்ல நல்ல இடம்..ஏற்கனவே கல்யாணம் ஆணவங்களும் போய் வயத்தெரிசலை நல்லா கொட்டிகிட்டு வரலாம்..

மலை ஏறுவது பின் இறங்க முடியாம அய்யோடான்னு கதறுபவர்கள் வண்டலூர் சூவோட தங்களின் கோடை பயணத்தை நிறைவு செய்து கொள்ளலாம்..

வேற ஏதாச்சும் டெயில் பீஸ்..

குடிகாரர்கள், டூர் போனால் குடித்தே ஆக வேண்டும் என்ற பாட்டில் விரதம் இருப்பவர்கள் கேரள அரசால் பயங்கரமாக கலாய்க்க படுகிறார்கள்..அங்கே கேரள அரசால் நடத்தபடும் ஒயின் ஷாப்பில் நீண்ட வரிசையில் பொறுமையான நின்று குவார்ட்டர்கள் வாங்குபவர்களை ஆண்டவன் கண்டிப்பாக ரட்சிப்பான்..

எச்சரிக்கை..

கேரளாவில் எல்லா இடத்திலும் குப்பை போடுவது பொது இடங்களில் தம் அடிப்பது சுற்றுலா தளங்களில் பெண்களிடம் வம்பு செய்வது போன்ற வீர தீர காரியங்களுக்கு நன்றாக சுலுக்கு எடுக்கபடுகிறது.



பத்திரமாக பெங்களூர் கொண்டு வந்த சேர்த்த tempo traveler க்கு நன்றி

2 comments:

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம்ம் நாங்க இங்க வெயில்ல வறுபடுறோம். டூரா போறீங்க?

Vijay said...

உங்க கட்டுரையப் படிச்சப்புறம் வயநாடு போகும் ஆரவம் இருமடங்காகிவிட்டது. அடுத்த டூர் கண்டிப்பா வயநாட்டுக்குத் தான்.

புகைப் படங்கள் அருமை