Friday, March 6, 2009

நாட்டு நடப்பு

வழக்கம் போல இன்னொரு தேர்தல்..சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன வித்யாசம் என்று கேட்டால்    ஒன்றும் சொல்ல தோண்றவில்லை..

என்ன ஐந்து வருடம் முன்னாடி சொந்த பிரச்சனைகளே அதிகம் இருக்கும்...
செய்திகள் படிக்க நேரம் இருக்காது..
மும்பை அந்தேரியில் இருந்து செம்பூர் செல்லும் ரயில் பயண நேரத்தில் காதில் விழும் செய்திகளே அரசியல்....
தேர்தல் முடிவுகள் வந்த போது ஏதோ எனக்கு முன்னமே தெரிந்தது தானே என்று பெரிதாக ஆர்வம் 
இல்லை..
அன்றையை ரயில் பயணங்கள்... 
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களோடு செல்லும் போது அரட்டைகள் கருத்துகள் முடிவுகள் இப்படி தான் இருக்கும் என யூகிக்க முடிந்தது.

நம்மை சுற்றி இருக்கும் சமூகம் ஒவ்வோரு ஆறு மாதமும் மாறி கொண்டே வரும்..நான் மட்டும் விதி விலக்கு இல்லையே..
அரசியல்வாதிகள், அரசாங்கம் போராட்டம் ஈழம் இலங்கை கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள தொடர்பாக அலுவகத்தில் யாரிடமும் பேசிய ஞாபகம் இல்லை.
ஏன் என் நண்பர்கள் யாரும் அது தொடர்பாக பேசியது போலவும் தெரியவில்லை..
ஆனால் எல்லாரும் இந்த முறை கண்டிப்பாக ஓட்டு போட போகிறோம்..ஜாகரன் அமைப்பு வழியாக அனைவருக்கும் ஓட்டு உரிமை கிடைத்து இருக்கிறது..

அதை வீணாக்க கூடாது என்ற கவலையும் கூடவே ..

***********************************************

மை டியர் குட்டிசாத்தான் படம் ஞாபகம் இருக்கா?

ஐஸ் கிரீம், எரோ ப்ளேன், மின் விசிறி என எல்லாம் நம் அருகே தொட்டு விடும் தூரத்தில் வந்து விட்டு போகுமே...

செல்ல குழந்தைகளே என்ற பாடலில் குழந்தைகள் தலைகீழாக நடந்து சென்று மின் விசிறியில் தொட்டு செல்வார்களே

தமிழில் ( மலையாளம்) வந்த முதல் 3டி படம்..ஏன் இந்தியாவில் வந்த முதல் 3டி படம் இதுவே....

குழந்தைகளுக்காவே எடுக்கபட்ட படம் என்றாலும் அந்த படம் பார்க்கும் நேரத்தில் அனைவரும் குழந்தைகளாகவே ஆனது தனி கதை..

அப்பச்சன் தயாரிப்பில் எடுக்கபட்ட படம்... இந்த படத்தில் சில காட்சிகளை தாம்பரம் கிழ்கிந்தா தீம் பார்க்கில் போட்டு காட்டுகிறார்கள்...

இந்த படம் 1997ல் டிடிஎஸ் ஒலி மாற்றி கேரளாவில் மீண்டும் ஒரு முறை வலம் வந்தது..அப்பவும் சூப்பர் ஹிட்டாம்..

இந்த படத்தில் சில காட்சிகள் you tubeல் கிடைக்கிறது.. 25 வருடதிற்க்கு முன் எந்த வித பெரிய தொழில்நுட்பமும் இல்லாமல் இதை போல

ஒரு மாயஜால படம் எடுக்க மிகவும் துணிவு + துட்டு இருக்க வேண்டும்..

மீண்டும் ஒரு முறை இந்த படத்தை தமிழில் இன்று மறு வெளியீடு செய்தால் கண்டிப்பாக 100 நாள் ஓடும்..

******************************************************

லலித் மோடி இந்த வருடமும் IPL கிரிக்கேட் போட்டிகள் நடத்தியே தீருவேன் என்று டிவி சானல்களில் முழுக்கும் போது கிரிக்கேட் நடத்தி 

இந்த பூலோகத்தில் அனைவரின் கிரிக்கேட் பசியை தீர்க்க வந்த மகான் போலவே தோன்றுகிறது..IPL போட்டிகளின் வெற்றிக்கு காரணம் 

தினமும் பரபரப்பு எதிர்பார்க்கும் மக்களின் அறிவு பசியே.. அது இந்த தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் மக்களுக்கு கிரிக்கேட்டை விட 
அதிக entertainment குடுப்பார்கள்.. இந்த நேரத்தில் போட்டிகள் நடத்தினால் .. IPL பணால் ஆகும் என்றே தோன்றுகிறது

***********************************************
சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை  பெங்களூரு தமிழர்கள் முண்ண்னியோ அல்ல்து ஏதோ ஒன்று 200 அல்ல்து 300 பேர் இலங்கை தமிழர்கள்
கொல்லபடுவதை நிறுத்த வேண்டும் என்று ஊர்வலம் சென்று கொண்டு இருந்தார்கள்....பாதி பேர் தர்மபுரியில் இருந்து காலையில் இருந்து பஸ் பிடித்து
வந்து இருப்பார்கள் போல..அப்புறம் இந்த மார்ச் மாத வெயிலில் பெங்களூர் காரன் மதியம் இரண்டு மணிக்கு கண்டிப்பாக ஜாக்கேட் போடமாட்டான்..


கூட்டத்தில் சில பேர் சோனியாவை தரக்குறைவாக திட்டி போர்டுகள் வைத்து இருந்தார்கள் கூடவே பிரபாகரன் படமும் புகழ்மாலையும்..
சிவாஜிலிங்கம் எனற இலங்கை எம்பி பேசி கொண்டு இருந்தார்....

ஊர் விட்டு வேலைக்கு வந்தாலும் திருந்தவே மாட்டாங்கப்பா..
இப்படியே கன்னடர்களை திட்டுவது சீண்டுவது இந்தி, தெலுங்கு மலையாளி என இந்தியாவில் இருக்கும் எல்லாரையும் திட்டுவது..
திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வைப்பது போன்ற சமூகத்தின் ஏழ்மையை அகற்றும் புணித காரியங்கள் செய்வது என தமிழர்களுக்கு என தனி ஒரு குணம் உண்டு,.

பெங்களூரில் பல இடங்களில் தமிழே உலகின் முதன் மொழி என்று யாரோ ஒரு கிறுக்கன் தாரால் கிறுக்கி வைத்து இருப்பான்.. கண்டிப்பாக அவனும் இந்த கூட்டத்தில்
இருப்பான்...அவனை கண்டிப்பாக ஒரு நாள் பார்க்கனும்.. உடனே அவனை தமிழ் தெரியாத ஒரு பத்து பேர் கூட ஒரு மாசம் அடைச்சு வைக்கனும்..அப்புறம் தார் எடுத்து 
கொண்டு பெங்களூர் நகர சுவர்களை தேடி போவாரா?

3 comments:

வால்பையன் said...

//சமூகத்தின் ஏழ்மையை அகற்றும் புணித காரியங்கள் செய்வது என தமிழர்களுக்கு என தனி ஒரு குணம் உண்டு,.//

ஹா ஹா ஹா

சரியா சொல்லியிருக்கிங்க தல

Vidhya Chandrasekaran said...

நாட்டு நடப்பு நல்லாவே அலசப்பட்டிருக்கு. அதுவும் தார் மேட்டர் ROTFL:)

Arun Kumar said...

வருகைக்கு நன்றி வால்பையன் வித்யா
வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி