Friday, August 15, 2008

சத்யம் திரை விமர்சனம்



இன்று காலை சன் டிவி முதல் விஜய் டிவி வரை எந்த சேனைலை திருப்பினாலும் விஷால் புராணம் தான்.. தான் மொட்டையடித்தது ஏன் என்பது முதல் நயன் தாரா ஜிம்முக்கு போனது ஏன் வரை உலக முக்கியதுவம் வாய்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டே இருந்தார்..ஒரே செய்தியை எல்லா பேட்டிக்கும் சொல்வது போரடிக்காது???

சும்மா இருந்த எனக்கும் சரி நாமும் இந்த படத்தை பார்போமோ என்ற ஆசை.. என் நண்பன் ஒருவனையும் தயாராக சொல்லி விட்டு மாலை நேரம் பெங்களூர் பிவிஆர் சினிமாஸ்க்கு நுழைந்தோம்..

***************



சத்யம் திரைபடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடித்து இருப்பதால் பல கன்னடா முகங்கள்.. அவர் பெயரை திரையில் வரும் போதே ஏகப்பட்ட கைதட்டல்கள் விசில் சத்தங்கள்..

ஆரடி உசர என்று புகழ்பாடும் பாடலோடு படம் தொடங்குகிறது..
விழால் உடலை பார்த்தால் நமக்கும் சற்று ஏக்கம் பொங்குகிறது.. கூடவே படம் நெடுக யாரையாவது மாற்றி மாற்றி காலால் அல்லது கையால் அடித்து கொண்டே அடித்து கொண்டே இருக்கிறார். இல்லையென்றால் ஏதாச்சும் வசனம் பேசி கொண்டு இருக்கிறார்.

அவ்வ் ரொம்ப ஓவர் டோஸ்.

படத்தின் பல காட்சிகள் மிகவும் சிரமபட்டு எடுத்து இருக்கிறார்கள்.. பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம்..

ஆனால் எல்லாம் துண்டு துண்டாக பார்த்தால் நன்றாக இருக்கும்.. எல்லாவற்றையும் இணைத்து பார்த்தால் ஏதும் சுவராசியமாக இல்லை..

படத்தின் கதை வெகு சிம்பிள்..காலம் காலமாக நாம் பார்த்து வரும் அதே கதை தான்..

அரசியல்வாதிகளால் பாதிக்கபடும் ஒரு போலிஸ் எப்படி அவர்களை பழிவாங்குகிறான் என்பதே..

கதையின் அவுட் லைன்..

அரசியல்வாதிகளால் பாதிக்படும் உபேந்திரா நாட்டை சுத்தபடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகள ஆரம்பிக்க அவரை தேடி கண்டு பிடிக்கும் பொறுப்பில் இருக்கும் விஷால் ..

உபேந்திராவை கண்டு பிடித்து சிறையில் அடைக்கும் விஷாலுக்கும் அவருக்கும் இருக்கும் பூர்வ ஜென்ம பந்தங்கள் காரணமாக உபேந்திரா இந்த அரசியலவாதிகளை உன்னால் அடக்க முடியுமா என்று விஷாலுக்கு சவால் விட அதை விஷால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதே கதை..

கதை அவுட் லைன் எப்படி சூப்பர் தானே..

ஆனால் இந்த கதையில் நயந்தாரா, அம்மா செண்டிமெண்ட், குத்து பாட்டு , விழால் இமேஜை ஏற்ற திணிக்கபட்ட காற்றில் பறக்கும் சண்டைகள் என்று எல்லவறையும் திணித்தால் என்னவாகும்???

படம் படு கேவலமாக ஏதோ பல படங்களின் ரீ மிக்ஸ் தொகுப்பாக மாறி விட்டது..

அம்மா செண்டி மெண்ட் - மன்னன் படத்தின் ரீ மிக்ஸ்
நயண்தாரா -- ஏன் வருகிறார் எதற்க்கு வருகிறார் என்பது தெரியவில்லை
குத்து பாட்டு - ஆவ்... கொடுமைடா சாமி

காற்றில் பறக்கும் சண்டைகள் - ஓவர் டோஸ்

ஹாரிஸ் ஜெயர்ராஜ் பாடல்கள் படு மோசம்.. தனது 25வது படத்தில் மோசமாக சொதப்பி இருக்கிறார்..

பட தொகுப்பு நிறைவு காட்சியில் படு வேகமாக வேலை செய்து இருக்கிறது.. தீபாவளி கேப் துப்பாக்கி சுடுவது போல ..

பாடல்களை மட்டும் ரீமிக்ஸ் செய்யும் போக்கு மாறி பழைய படங்களின் காமேடிகளை கூட ரீ மிக்ஸ் செய்கிறார்கள்..


சிட்டிசன் படத்தை ஞாபகம் வருகிறது..
அது மட்டும் அல்ல காக்க காக்க , இந்தியன், மன்னன் என்று எல்லாம் கலந்து விட்ட சரக்கு போல இருக்கும் கதை

ஆம்.. சூப்பரான கதையை வைத்து விளையாடுவதை விட்டு விட்டு குத்தி குதறி விட்டு இருக்கிறார்கள்..

படத்தின் கத்தி உபேந்திரா ரோலுக்கு அதிகம் கொடுக்கபட்டு இல்லாமல் இருந்தால் இந்த படம் பிழைத்து இருக்கும்..

உப்பி தான் வரும் சில் நிமிடங்களில் சூப்பர் நடிப்பால் மனதை கொள்ளை அடித்து விடுகிறார்.

படத்தில் அடிக்கடி வரும் டயலாக் ” தமிழ் நாடே கொந்தளிக்கும்”” படத்தை பார்த்த எனக்கும் மூன்று மணி நேரத்தை வீணாக்கி விட்டோமே என்று தான் மனம் கொந்தளித்தது..

பல நல்ல காட்சிகள் ஆனால் கடைசியில் எல்லாம் கோவிந்தா கோவிந்தா..

தற்போது கூட மோசம் இல்லை.. வெட்டி விஷால் புராணம் பாடும் காட்சிகளை வெட்டி விட்டு உபேந்திரா காட்சிகளை அதிகம் வைத்தால் இந்த படம் பிழைக்க வாய்ப்பு மிக அதிகம்

4 comments:

Anonymous said...

எத்தனை நாள் கனவு ராசா

Anonymous said...

சி டி வந்திடீச்சா

Vidhya Chandrasekaran said...

படம் பார்த்த எனக்கே கை வலிச்சது போங்க.

Vishnu - விஷ்ணு said...

எறும்பு யானை மேல சவாரி செய்தாலும் நமக்கு தெரிவது என்னவோ யானைதான். மசால படம் பாத்துருக்கேன். இது என்னடா மிக்சர் படம். ஒருவேளை இயக்குனரு sweet கடை side business பண்ணுவாரு போல.