Saturday, August 9, 2008

எனக்கு நானே 09-08-2008

மாற்றங்கள் என்றும் மாறியும் தொடர்ந்தும் வரும்.
பெங்களூரை விட்டு ஒரு வாரம் வேரு இடத்துக்கு சென்று விட்டு வந்தால் நாம் சென்ற பாதைகள் எல்லாம் கிராபிக்ஸ் உபயம் இல்லாமல் புது உலகம் காட்டுகிறது

சிட்டி ரயில்வே ஸ்டேசனில் தினமும் நூற்றுகணக்கான வேற்று மாநில பைக்குகள் பெங்களூர் போக்குவரத்தோடு கலந்து விட இறக்கிவிட படுகின்றன.

BIAL ஏர்போர்ட்டில் தினமும் பல வேறு மாநில கார்கள் விமானத்தின் வயிற்று பகுதியில் இருந்து வழுக்கி வெளியே சென்று நான் ஊருக்கு புதுசு என்று சத்தமாக ஹாரன் அடித்து விட்டு செல்கின்றன

ம் பெங்களூர் எவ்வளவோ மாறி விட்டது..

பெங்களூர் வந்த புதுதில் ஏர்போர்ட் சாலையில் கெம்ப் போர்ட் தாண்டினால் சாலை இரு திசையிலும் pubகள் தான் வழி காட்டும்.. அந்த இடத்துக்கு தகுந்தவாறு அங்கே பலான படம் காட்டும் ஒரு பெயர் தெரியாத தியேட்டர் இருக்கும்..

தற்போது அந்த pubகளும் இல்லை கூடவே kempfortயும் இல்லை.. எல்லாம் சிவாஜியில் ரஜினி நடந்து வரும் போது கூடவே எழுந்து வரும் கட்டிடங்களாக ஆகி விட்டது....

வார விடுமுறைகளில் எனது காருக்கு ஓய்வு கொடுத்து விட்டு பைக்கில் பயணப்பது எனது வழக்கம் என்பதை விட பிடித்தமானது என்று கூட சொல்லாம்..

எனது பழைய சமுராயில் HAL தாண்டிய பின்னர் 80kms/hr குறையாமல் ஓட்டிய ஞாபங்கள்.. தற்பொது எனது apacheயில் 30 kms/hr தாண்ட முடியாமல் கியர் மாற்றி மாற்றி நொந்து நூடுல்சாகி பின் வழக்கம் போல கார்னர் கடை தேடி அலையும் போது பின்னர் தான் பின் மண்டையில் உறைத்தது

கார்னர் தம் கடை எல்லாம் மாறி அங்கு ஹை டெக் காபி ஷாப்பி விட்ட கதை..

நான் ரசித்த பெங்களூர் எங்கே போனது?? இதே பெங்களூர் தான் வேண்டும் என்று தானே அமெரிக்கா சிங்கப்பூர் முதல் மும்பை வரை வந்த வாய்ப்புகள் எல்லாம் வேண்டாம் என்று சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வந்தேன்..

சென்னையில் இருந்த காலத்தில் பெங்களூருக்கு ஒரு இண்டர்வியுகக்கு வரும் போது ஒரு ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னது

சார் இந்த ஊரு காந்தம் மாதிரி ஒரு முறை வந்துட்டா திரும்ப திரும்ப இழுக்கும்

உண்மை தான்..உதாரணம் நானே..

இன்னமும் மலிவான விலையில் கிடைக்கும் வடா சாம்பார், சாப்பாடு
என்னதான் பிரச்சனை என்றாலும் சன்னாகிதே என்று புன் முறுவலுடன் எதிர் கொள்ளும் அன்பான கன்னடர்கள்

மாலையில் வரும் மழை

ம் பெங்களூர் போல வேறுங்கும் வருமா??

No comments: