Wednesday, January 4, 2012

மாறுவது உலகு

இந்த வருடம் சற்று சோம்பலாகவே புது வருடம் தொடங்கியது. இரவில் கிடைத்த வாழ்த்து செய்திகளை மேலோட்டமாக பார்த்தவாறே காரில் படிந்து இருந்த பனிதுளிகளை துடைத்து விட்டு பெங்களுருக்கு கிளம்பினேன்.

திருச்சி- நாமக்கல் சாலை பனி மூட்டத்தில் சோம்பி கிடந்தது. 2012யை எந்த மன நிலையில் வரவேற்ப்பது என புரியாமல் காவிரி கரையை ஊடாக செல்லும் சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன்.லேசான மக்ழ்ச்சி..திருச்சி அப்புறம் கொடைக்கானல் FM ரேடியோக்களில் எல்லோரும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டு இருந்தார்கள்.

2011 ஆண்டு இப்படி தொடங்கவில்லை.. ஐடி வேலையின் இருண்ட பக்கங்களில்  நானும் ஒருவனாக இருந்தேன். வேலை அயர்ச்சி..16 மணி நேர வேலை.. சில மணி நேர தூக்கம், விழிப்பு பின் கண்ணியில் தொடர்சியான வேலை.. ஏமாற்றம், போராட்டம், சலிப்பு என முதல் இரண்டு மாதங்களில் யோசிக்க கூட முடியாமல்  ஓடி கொண்டு இருந்தேன்.

ஆதரவு இல்லாத அலுவலக நட்புகள் வேறு மறுபக்கம்.. கூடவே அலுவலக அரசியலில் தொல்லை.. இப்படியே இந்த வருடத்தில் பல மாதங்கள் ஓடி போனது. மே ஜீன் ஜீலை மாதங்கள் வாழ்க்கையின் விரக்க்தியின் உச்சகட்டம்.. ஏகப்பட்ட இழப்புகள்.

பண விரயம் மன விரயம்... அவமானங்கள் திட்டுகள் ஏமாற்றங்கள் ஆதரவு இல்லாத நிலை..இது தான் வருடத்தில் பல நாட்க்கள் சந்திந்தது.

ஒரு சில சிறு விழயங்கள்  கூட பலவாறு இழுபறிப்புகள் இழப்புகளோடு தான் முடிந்தது

2011 வருடத்தில் பெங்களூரில் இருக்க முடியாமல் பல நாட்கள் காரில் பயணம்.. கும்பகோணம் வட்டாரத்தில் கோவில் தரிசனம் என பல நாட்க்கள் கழிந்தது.  வேறு வேலை தேட முயண்ற போது நிதர்சனம் முகத்தில் அறைந்தது. பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால் புதிய தொழில் நுட்பங்கள் ஏதும் தெரியாமல் இருந்து விட்டேன்.

இடையில் அலுவலக அரசியலால் தண்டை குற்றம் போல ஏதோ ஒரு ப்ராஜக்ட்க்கு அனுப்பபட்டேன்.

புதிய மேலாளர் ஆதரவாக இருந்தார். ஆனாலும் நான் இழந்த எதையும் அவரால் கொடுக்க முடியவில்லை. எதிர்பார்ப்பதும் தவறு.

முகத்தில் அறைந்த அவமானங்கள் மேலும் போராடிய தூண்டியது. பொறுமையை கற்று தந்தது. மனிதர்களை மன்னிக்க கற்று தந்தது.

 பின் ஒரு நன்நாளில் நானே எதிர்பார்க்காத ஒரு நிறுவனத்தில் அழைப்பு.. அரை நாளில் இண்டர்வியூ எல்லாம் முடிந்தது. மாலையில் HR நீ செலக்ட் ஆயிட்டே என்று சொன்ன போது இது நாள்வரைக்கு பட்ட கழ்டங்கள் எல்லாம் இதற்க்குதானா என்று தான் தோன்றியது. மீண்டும் இரண்டு மாதங்கள் காத்திரிப்பு ஆர்டர் வாங்க. ஆர்டர் வாங்கிய அன்று கொடைக்கானலில் இருந்தேன். சந்தோஷத்தின் உச்சகட்டம்..

இரண்டு மாதங்கள் notice period என்று ஓடி போனது. மேலும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் 2011 ஓடி போனது. பொறுமையாக இந்த பதிவை டைப் செய்யும் இந்நாள் என் வாழ்நாளில் கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்த நிறுவனத்தில் நான் வேலை செய்யும் கடைசி நாள். 2012 புதிய நிறுவனத்தில் சளைக்காமல் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் உற்சாகத்துடன் தொடங்குகிறேன்.

நான் தோற்றவன் இனி மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

No comments: