எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?
சிக்கல்
'மின்சாரம் நாட்டின் ஆதாரம்!’ - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிப்ரவரி மாத காலண்டரில் இருக்கும் வாசகம். ஆனால், இந்த வாக்கியத்தை தமிழக அரசு கொஞ்சம்கூட உணர்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் துறை 'டாஸ்மாக்’. மிக மோசமாகச் செயல்படும் துறை 'மின்சார வாரியம்’. இந்த இரண்டு துறைகளினால் எதிர்கால சந்ததி கடும் சவால்களையும், பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.
இந்த மின்வெட்டால் பொதுமக்கள், நிறுவனங்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிப்படைந்து மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மின்வெட்டால் லாபம் அடைந்தவர்கள், மெழுகுவத்தி, இன்வெர்ட்டர் வியாபாரிகள்தான்!
இது ஒருபக்கமென்றால், அந்த யூனிட்களே பழுதாகி உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும். கடந்த வாரத்தில்கூட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட் பழுதாகி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிபார்க்க குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகும்.
அனல் மின் நிலையத்திற்கு அடுத்து நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைப்பது நீர் மின் நிலையங்கள் மூலம். இதன் மூலம் 2,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், குறைந்து வரும் மழை அளவால் நீர் மின்சாரத்தை நம்மால் பெரிய அளவில் நம்ப முடியாது. எனவே, 2,190 மெகா வாட் என்ற உற்பத்தியை நாம் ஒருபோதும் அடையவே முடியாது.
மேலும், நடுத்தர மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், மின்சார அடுப்பு போன்றவற்றால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. சமீபத்திய கேஸ் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு, எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது கடுமையாக அதிகரித்திருக்கிறது.
1994-ம் ஆண்டு வட சென்னை அனல் மின்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகான 18 வருடங்களில் எந்த பெரிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. விரிவாக்கப் பணிகள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வந்தது.
1987-ம் ஆண்டு காடம் பாறையில் 400 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கப் பட்டது. அதன்பிறகு இவ்வளவு பெரிய நீர் மின் நிலையத்தைத் தமிழகம் அமைக்கவில்லை. 2, 3 மெகாவாட் திறன் கொண்ட யூனிட்களே அமைக்கப்பட்டன. சுருக்கமாக, கட்சி, ஆட்சி வித்தியாசம் இல்லாமல் கடந்த 20 வருடங்களில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த உருப்படியான திட்டமும் வரவில்லை. ஆனால், குஜராத்தில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் கிடைப்பதால், உற்பத்தியை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படுகிறது.
கழுத்தை நெரிக்கும் இந்த கடனுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. முதலாவது, கடந்த பத்து வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என்று பயந்தே இதில் கை வைக்காமலே விட்டுவிட்டன தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்கள்.
இரண்டாவது, மின் உற்பத்திக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு டன் நிலக்கரியின் விலை 2,160 ரூபாய், இப்போது 5,880 ரூபாய். இது மட்டுமல்லாமல், ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட அத்தனை உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரிக்கும் நிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்தத் தேவையான பணத்திற்கு மின் வாரியம் எங்கே போகும்?
ஆனால், இந்த மின்சாரத்தைக் கொண்டு சில மாதங்களை மட்டுமே ஓட்ட முடியும். நமது மின்சாரத் தேவை சராசரியாக ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, மீண்டும் ஒரு பெரிய பற்றாக்குறை வர வாய்ப்புண்டு. அதை சமாளிக்க இப்போதே அதற்கான வேலைகளில் இறங்குவது நல்லது.
'மின்சாரம்தான் நாட்டின் ஆதாரம்’ என்பதை இனியாவது அரசாங்கம் உணர்ந்து, அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பதே இன்றைக்கு புழுங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனின் கோரிக்கை.
this article is taken from vikatan.com, it not written from me credit goes to the vikatan.com.
ref: http://www.vikatan.com/article.php?aid=16434&sid=448&mid=6